Home

Showing posts with label அன்பளிப்பு. Show all posts
Showing posts with label அன்பளிப்பு. Show all posts

Thursday, 25 August 2022

கு.அழகிரிசாமியின் படைப்புலகம் - வாழ்க்கையென்னும் பாடம் - பகுதி 2

 

இன்னொரு முக்கியமான சித்திரம் சந்திப்பு கதையில் இடம்பெறும்

சின்னம்மா. காவேரிப்பாட்டியைப் போலவே இவளும் ஓர் அபலை.

சின்ன வயதில் துடிப்பாகவும் செழிப்பாகவும் வாழ்ந்தவள்தான் அவள்.

பக்கத்துவீட்டுக் குழந்தை என்றுகூடப் பாராமல் பாசத்தை மழையாகப்

பொழிந்தவள். அவளுடைய பாசமழையில் நனைந்த ஒருவன் பதினைந்து

ஆண்டுகளுக்குப் பிறகு, பழைய நினைவுகளைச் சுமந்தபடி அந்தச்

சின்னம்மாவைப் பார்க்கவருகிறான். அவனுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.

அவன் பார்ப்பதுமுற்றிலும் வேறொரு சின்னம்மாவை. காலத்தாலும்

மனிதர்களாலும் வஞ்சிக்கப்பட்டவளாக விதவைக்கோலத்தில் இருக்கிறாள்

அவள். சொத்தையெல்லாம் சொந்தக்காரர்களிடம் பறிகொடுத்துவிட்டு

கூலிவேலை செய்து பிழைக்கிறாள். யாரோ ஒருவனுடைய வீட்டின்

கு. அழகிரிசாமியின் படைப்புலகம் - வாழ்க்கையென்னும் பாடம் - பகுதி 1


விழுப்புரத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையில்

எங்கள் ஊரான வளவனூர் ரயில்வே ஸ்டேஷன்

இருக்கிறது. இரண்டு நகரங்களுக்குமிடையே ரயில்

போக்குவரத்து செழிப்பான நிலையில் இருந்தபோது

எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷனுக்கும் ஒரு பெருமை

இருந்தது. மக்கள் ஆதரவு குறைந்து போக்குவரத்தில்

மந்தநிலை உருவானபோது எங்கள் ஸ்டேஷன்

கைவிடப்பட்ட கட்டடமாக உருக்குலைந்தது. ஏதோ

பழங்காலத்து நினைவுச்சின்னம்போலப் பல ஆண்டுகள்

அப்படியே நின்று சிதையத் தொடங்கியது.

குட்டிச்சுவர்கள் மட்டுமே எஞ்சி நின்றிருந்தன.