Home

Showing posts with label வெளியேற்றப்பட்ட குதிரை. Show all posts
Showing posts with label வெளியேற்றப்பட்ட குதிரை. Show all posts

Sunday, 23 February 2025

நித்யா

 

 கஸ்தூரிபாய் ஆதரவற்றோர் இல்லத்துடன் தொடர்பு வைத்துக் கொள்ளத் தொடங்கி ஆறு ஆண்டுகள் கழிந்துவிட்டன. எங்கள் ஐந்து திருமண நாள்களையும் ஐந்து பிறந்த நாள்களையும் குழந்தை அபியின் மூன்று பிறந்த நாள்களையும் இதே இல்லத்தில் தான் கழித்திருக்கிறோம். என் மனத்தில் புதைந்து கிடக்கும் எண்ணற்ற சித்திரங்களுள் இந்த இல்லத்தின் சித்திரம் மறக்கமுடியாத அனுபவம்

Sunday, 29 May 2022

வெளியேற்றப்பட்ட குதிரை - சிறுகதை

 பாண்டிச்சேரி கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான தியாகராஜன் சிங்காரம் ஒயின்ஸ் ஷாப் வரைக்கும் தன்னைத் தேடிக்கொண்டு வருவார் என்று ராஜசேகரன் நினைக்கவே இல்லை. “எப்படி இருக்கிங்க ராஜசேகரன்?” என்றபடி தனக்கு அருகில் நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தபோது அவனால் நம்பவே முடியவில்லை. யாரோ தெரிந்த பழைய நண்பர் பேசுகிறார் என்றுதான் அக்கணத்திலும் நினைத்தான். ஆனாலும் முகம் குழம்பியது. சிறிது நேரம் தடுமாறினான். பதிலே பேசாமல் இரண்டு மூன்று தரம் கண்களைச் சிமிட்டியபடி உற்று உற்றுப் பார்த்தான். “என்ன ராஜசேகரன்? என்னைத் தெரியலையா? நான்தான் தியாகராஜன் என்று அவனுடைய மணிக்கட்டைப் பிடித்து அழுத்தினார்.