ஜன்னல்
வழியாகத் தெரிந்த பெயர்ப்பலகையைக் காட்டி பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜிப்பாக்காரரிடம் “என்ன ஊர் இது?” என்பதுபோல சைகையால் கேட்டான் அவன். ஒருகணம் அவனைத் திரும்பிப் பார்த்த ஜிப்பாக்காரர் கையிலிருந்த
சூடான தேநீரை அருந்தியபடி “ஜபல்பூர்… ஜபல்பூர்” என்று ஒன்றுக்கு இரண்டு தடவையாக பதில் சொன்னார். அதைக் கேட்டு அவனும் ’ஜபல்பூர்’ என்று முணுமுணுத்தபடி தலையசைத்துக்கொண்டான்.