Home

Sunday, 9 August 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 10

 

பொய்யும் மெய்யும்

தமிழில் நாவல் எழுதும் மரபு இல்லாத ஒரு காலகட்டத்தில், அயல்நாட்டுப் படைப்புகளை வாசித்துத் தெரிந்துகொண்ட நுட்பங்களின் உதவியோடு சொந்தமாக நாவல் எழுதும் முயற்சியில் முதன்முதலாக ஈடுபட்டு ஒரு புதிய மரபை உருவாக்கியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை.  அவர் எழுதிய ’பிரதாப முதலியார் சரித்திரம்’ என்னும் நாவல் 1879ஆம் ஆண்டில் வெளிவந்தது. அதன் எழுத்துமுறையால் ஈர்க்கப்பட்ட பல எழுத்தாளர்கள் அதே வடிவத்தில் எண்ணற்ற நாவல்களை எழுதியிருக்கக்கூடும். ஆனால் அவையனைத்தும் காலத்தில் நிலைத்து நிற்கமுடியாமல் கரைந்துபோய்விட்டன.

செடி - சிறுகதை

 

 காலை வெளிச்சத்தில் குலுங்கிக்கொண்டிருந்தன செடிகள். மலர்ந்த பூக்கள் கண்களை இழுத்தன. மலரின் ஒவ்வோர் இதழிலும் அக்காவின் முகம் தெரிந்தது. சிரிப்பு தெரிந்தது. மீண்டும் மீண்டும் அதே நினைவுகளா என உடம்பு சிலிர்த்தது. அவற்றையே பார்த்துக்கொண்டிருந்த பிள்ளைகளின் தோள்களைத் தொட்டேன். அப்போதுதான் வீட்டு ஓனரம்மா கொடுத்தனுப்பியிருந்த தோசைகளைச் சாப்பிட்டு முடிந்திருந்தோம்.