Home

Showing posts with label மலேசியா. Show all posts
Showing posts with label மலேசியா. Show all posts

Sunday, 26 January 2025

மலேசியப்பயணம் : அழகான நிலமும் அன்பான மனிதர்களும் - 1

 

இலக்கியத்தின் ஆர்வமுள்ள மலேசிய இளைஞர்கள் அதன் கலைநுட்பத்தை கூர்மையாக அறிந்துகொள்ளும் விதத்தில் பல்வேறு பயிற்சி முகாம்களையும் இலக்கியத்திருவிழாக்களையும் எழுத்தாளர் நவீன் ஒவ்வொரு ஆண்டும் மலேசியாவில் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார். இந்த ஆண்டுக்குரிய வல்லினம் இலக்கியத் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து நானும் நண்பர் ஜா.ராஜகோபாலும் விமானம் வழியாக கோலாலம்பூர் வந்து சேர்ந்தோம். என்னோடு என் மனைவி அமுதாவும் வந்திருந்தார். இந்திய நேரத்துக்கும் மலேசிய நேரத்துக்கும் இரண்டரை மணி நேர வித்தியாசம். இந்திய நேரப்படி 28.11.2024 அன்று  நண்பகல் 11.45க்குப் புறப்பட்ட விமானம் மலேசிய நேரப்படி மாலை 6.45க்கு கோலாம்பூருக்கு வந்து சேர்ந்தது. முறைப்படியான சோதனைகள் முடிந்து நாங்கள் வெளியே வரும்போது ஏழரை ஆகிவிட்டது. அப்போதே வானில் இருள் சூழந்துவிட்டது. 

மலேசியப்பயணம் : அழகான நிலமும் அன்பான மனிதர்களும் - 2

 தொடர்ச்சி.....

பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துக்கீசியர்கள் மலேசியாவைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, அவர்கள் வந்த வழியிலேயே வந்த டச்சுக்காரர்கள் அவர்களிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றினார்கள். அதற்கு அடுத்த நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் காட்டுப்பாதைகள் வழியாக மலேசியாவுக்குள் நுழைந்தார்கள். ஆயிரக்கணக்கான மிதிவண்டிகள் வழியாக காட்டை ஊடுருவிப் பயணம் செய்து டச்சுக்காரர்களுடன் மோதினர்.  அதிக அளவிலான உயிரிழப்பைத் தவிர்ப்பதற்காக  டச்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் ஓர் உடன்படிக்கையைச் செய்துகொண்டனர். இந்தோனோசியாவையும் அதற்கு அடுத்த பகுதிகளையும் டச்சுக்காரர்கள் வைத்துக்கொள்ள, ஆங்கிலேயர்கள் மலேசியாவைக் கைப்பற்றிக்கொண்டனர்.