மாபெரும் புதிர்
கடந்த நூற்றாண்டில் காந்தியக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர் வழியிலேயே தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட எண்ணற்ற இந்தியக்குடும்பங்களில் எழுத்தாளர் எம்.எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களுடைய குடும்பமும் ஒன்று. அவர் தந்தையாரான சீதாராமையா காந்தியத்தொண்டராக மட்டுமன்றி எழுத்தாளராகவும் வாழ்ந்தவர். ’கரட்டூர் ராமு’ என்னும் தலைப்பில் அவர் ஒரு நாவலை எழுதியுள்ளார். கல்யாணசுந்தரத்தின் மூத்த சகோதரர் ஆண்டிப்பட்டியில் காந்திய ஆசிரமத்தை நடத்தி கதருக்கும் தீண்டாமை ஒழிப்புக்கும் ஆதரவாகச் செயல்பட்டவர். வாழ்நாள் முழுதும் எளிய மக்களுக்குத் தொண்டாற்றியவர்.