Home

Sunday, 13 September 2026

மனம் கவர்ந்த பாடல்கள்

 

சங்க காலத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலான காலகட்டத்தில் கவிஞர்கள் அனைவரும் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நான்கு வகையான வடிவங்களில் எழுதினார்கள். திருத்தக்கதேவர் விருத்தப்பாக்களை எழுதி உயிரூட்டினார். மரபான வடிவங்களை மீறி மக்களைக் கவர்வதற்காக புதிய வடிவங்களில் பாடல்களை எழுதுவது இலக்கிய உலகத்தின் தேவையாக இருந்தது. அருணகிரிநாதர் சந்தப்பாடல்களை எழுதி அவ்வடிவத்துக்கு ஒரு தொடக்கத்தை உருவாக்கினார். அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்துப் பாடல்களை எழுதி மற்றொரு பாதையை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து கண்ணி, கும்மி என பல புதிய வடிவங்கள் உருவாகின. பாரதியாரும் பாரதிதாசனும் இருவகை வடிவங்களிலும் எழுச்சியோடு பாடல்களை எழுதி மக்கள் மனத்தில் இடம்பிடித்தனர்.

சின்னச்சின்ன மாணிக்கங்கள்

 

கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டுவரும் இளம் வாசகர் வட்டம், கடந்த சில ஆண்டுகளாக மாணவ, மாணவிகளுக்கு நல்ல இலக்கிய நூல்களை அறிமுகப்படுத்தி, அவர்களிடம் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவருகிறது. அப்பயிற்சியின் விளைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஒருசில மாணவமாணவிகள் இலக்கிய நூல்களைத் தேடிப் படிக்கத் தொடங்குகிறார்கள். இன்னும் ஒருசிலர் சொந்தமாக எழுதும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். கற்பனைத்திறனும் எழுத்தாற்றலும் கைவரப்பெற்ற மாணவமாணவிகளின் சிறப்பான படைப்புகள் நூல்வடிவில் வெளியாகி பிறர் கவனத்தை ஈர்க்கின்றன.

Sunday, 6 September 2026

புக் பிரம்மா இலக்கியத் திருவிழா – 2026 : எல்லைகளைக் கடந்த இலக்கியச் சங்கமம்

 

தென்னிந்திய மொழிகளில் தொடர்ச்சியாக எழுதிவரும் மூத்த, இளம் படைப்பாளிகளை முன்னிறுத்தவும் அம்மொழிகளுக்கிடையில் நிகழவேண்டிய இலக்கியப் பரிமாற்றத்தின் தேவையை உணர்த்தவும் கடந்த இரு ஆண்டுகளாக பெங்களூரில் வெற்றிகரமான வகையில் புக் பிரம்மா இலக்கியத்திருவிழா நடைபெற்று வருகிறது. 2026ஆம் ஆண்டுக்குரிய திருவிழா கடந்த 21.08.2026 முதல் 23.08.2026 வரை செயின்ட் ஜான்ஸ் ஆடிட்டோரியத்தின் வளாகத்தில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது. கன்னட நாவலாசிரியரும் ஊடகவியலாளருமான சதீஷ் சப்பரிகெ இந்த அமைப்பின் இயக்குநராக இருந்து நிர்வகித்துவருகிறார்.

ஒன்பது குன்று - முன்னுரை

  

வெவ்வேறு காலகட்டங்களில் சந்திக்க நேர்ந்த சில அரிய மனிதர்களைப்பற்றியும் சில அரிய தருணங்களைப்பற்றியும் சிற்சில சித்திரங்களை அனுபவக்கதைகளாக தொடர்ந்து எழுதி வருகிறேன். கதைக்கட்டுரைகள் அல்லது கட்டுரைக்கதைகள் என்று இவற்றைச் சொல்லலாம். ஏற்கனவே இந்தக் கட்டமைப்பில் தீராத பசிகொண்ட விலங்கு, இருபத்திரண்டு அட்டைப்பெட்டிகள், ஒட்டகம் கேட்ட இசை போன்ற தொகுப்புகள் வந்துள்ளன. அவற்றின் தொடர்ச்சியாக இத்தொகுதியைக் கருதலாம்.

சேய்மைக்காட்சிகளும் அண்மைக்காட்சிகளும்

 

ஆறு மாடிகளைக் கொண்ட பெரியதொரு வணிகவளாகத்துக்கு ஒருநாள் சென்றிருந்தேன். ஆறாவது மாடியில் நண்பருடைய ஓவியப்பயிற்சிக்கூடம் இருந்தது. அவரைப் பார்த்து ஒரு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழைக் கொடுப்பதற்காகத்தான் அங்கு போயிருந்தேன். நான் போன நேரத்தில் அவர் இல்லை. அங்கு ஓவியம் வரைந்துகொண்டிருந்த இரண்டு மாணவர்கள் என்னிடம் காத்திருக்கும்படி சொன்னார்கள். அவர்கள் சுட்டிக்காட்டிய நாற்காலியில் அமராமல் அவர்கள் வரைந்துகொண்டிருந்த ஓவியங்களை ஆர்வத்துடன் பார்க்கத் தொடங்கினேன்.

Sunday, 30 August 2026

ஒவ்வொரு பாடலும் ஒரு சொல்லோவியம்

  

’காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம்’, ’அக்கா குருவி’ போன்ற சிறார் பாடல் தொகுதிகள் வழியாக தமிழ்ச்சூழலுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர் குருங்குளம் முத்துராஜா. அவர் கடந்த சில ஆண்டுகளாக சிறார்களுக்கான படைப்புகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார்.  புதிதாக வெளிவந்திருக்கும் ’சேட்டைக்கார சின்னா’ என்னும் பாடல் தொகுதி வழக்கம்போல சிறார்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

இந்திரா பார்த்தசாரதியின் மாயமான் வேட்டை: இலட்சியவாதமும் சந்தர்ப்பவாதமும்

 

மாயமான் என்பது கம்பராமாயணத்தில் கம்பர் பயன்படுத்திய  சொல். வனவாசத்தின்போது ராமனும் சீதையும் லட்சுமணனும் தண்டகாரண்யம் என்னும் வனப்பகுதியில் வசித்துவருகிறார்கள். ஒருநாள் மாலைப்பொழுதில் ராமனும் சீதையும் தனித்து உரையாடி மகிழ்ந்திருந்த வேளையில் அவ்வழியாக ஒரு மான் ஓடிச் செல்கிறது. பொன்னிற மேனி கொண்ட அந்த மானின் அழகில் மயங்கிய சீதை, அந்த மானைத் தனக்குப் பிடித்துக் கொடுக்குமாறு ராமனிடம் கேட்கிறாள். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றும் வேகத்தில் உடனடியாக மானைத் தேடிப் புறப்படுகிறான் ராமன்.