Home

Saturday, 22 August 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 12

 சமுத்திரமும் சாக்கடையும்


சமுதாயச் சீரழிவுகளையும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களையும் வெளிப்படையாகவும் அறச்சீற்றத்தோடும் முன்வைக்கும் விந்தனின் படைப்புகள் தமிழிலக்கியத்துக்கு வளம் சேர்ப்பவை. அவர் எழுதிய சிறுகதைகளையும் நாவல்களையும் போலவே அவருடைய கட்டுரைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவருடைய ‘வேலை நிறுத்தம் ஏன்?’ என்கிற கட்டுரை தொழிலாளர் பிரச்சினையை சமூகத்தில் வாழ்கிற அனைவரும்  புரிந்துகொள்வதற்காக எழுதப்பட்டது. ’சேரிகள் நிறைந்த சென்னை மாநகரம்’ என்னும் கட்டுரை சென்னை புறநகர்ப் பகுதிகளில் வாழும் தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கை நிலையை உணர்த்துவதற்காக எழுதப்பட்டது.

போட்டிகளும் பரிசுகளும்

 

காலை நடைப்பயிற்சிக்குப் புறப்படும் நேரத்தில் வழக்கமாக என்னோடு சேர்ந்துகொள்ளும் நண்பர் இரண்டு நாட்களாக  வரவில்லை.  ஏதேனும் அவசர வேலையாக  அதிகாலையிலேயே வீட்டைவிட்டுப் புறப்பட்டுச் சென்றிருக்கக்கூடும் என முதல்நாள் நினைத்துக்கொண்டேன். ஆனால் இரண்டாவது நாளும் அவர் வரவில்லை.  அவருக்கு என்ன நேர்ந்திருக்குமோ என  எதைஎதையோ நினைத்து மனம் குழப்பமடையத் தொடங்கியது. அதனால் நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பியதும் முதல் வேலையாக கைப்பேசி வழியாக அவரை அழைத்தேன்.

Sunday, 16 August 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 11

 

செல்வமும் காமமும்

தமிழ் நாவல் முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவர் திரிசிரபுரம் ம.பொன்னுசாமி பிள்ளை. அவர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பர்மாவில் ரங்கூன் பேப்பர் கரன்சி அலுவலகத்தில் கருவூலப் பொறுப்பாளராகப் பணிபுரிந்தவர். அவர் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். சைவ சித்தாந்தத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் ஆறு நாவல்களை எழுதியிருக்கிறார். முதல் நாவலாக வெளிவந்த ‘கமலாட்சி’ ஒரு குறிப்பிடத்தக்க படைப்பாகும். (ஆரம்பப் பதிப்புகளுக்குப் பிறகு அந்தத் தலைப்பு ‘கமலாட்சி சரித்திரம்’ என மாறிவிட்டது) இந்த நாவல் 1903ஆம் ஆண்டில் சென்னை ஆர்.எ.சிவசாம்பு வெளியீடாக முதன்முதலில்  வெளிவந்தது.

அது ஒரு வசந்த காலம்

 

கடந்த அறுபதாண்டுகளாக தமிழிலக்கியத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் மூத்த எழுத்தாளர் விட்டல்ராவ். சிறுகதை, நாவல், குறுநாவல், அனுபவக்கட்டுரைகள், ஓவியம், திரைப்படம், கோட்டைகள் தொடர்பான கட்டுரைகள் என ஒவ்வொரு தளத்திலும் அவர் மிகச்சிறந்த படைப்புகளை எழுதியிருக்கிறார். அவற்றின் நீட்சியாக இப்போது தன் பள்ளிக்கால நினைவுகளை முன்வைத்து அவர் புக் டே இணையதளத்தில் ‘வகுப்பறைக்கதைகள்’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரைத்தொடரை எழுதி வருகிறார். அக்கட்டுரைகளின் ஒரு பகுதி இப்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது.

Sunday, 9 August 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 10

 

பொய்யும் மெய்யும்

தமிழில் நாவல் எழுதும் மரபு இல்லாத ஒரு காலகட்டத்தில், அயல்நாட்டுப் படைப்புகளை வாசித்துத் தெரிந்துகொண்ட நுட்பங்களின் உதவியோடு சொந்தமாக நாவல் எழுதும் முயற்சியில் முதன்முதலாக ஈடுபட்டு ஒரு புதிய மரபை உருவாக்கியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை.  அவர் எழுதிய ’பிரதாப முதலியார் சரித்திரம்’ என்னும் நாவல் 1879ஆம் ஆண்டில் வெளிவந்தது. அதன் எழுத்துமுறையால் ஈர்க்கப்பட்ட பல எழுத்தாளர்கள் அதே வடிவத்தில் எண்ணற்ற நாவல்களை எழுதியிருக்கக்கூடும். ஆனால் அவையனைத்தும் காலத்தில் நிலைத்து நிற்கமுடியாமல் கரைந்துபோய்விட்டன.

செடி - சிறுகதை

 

 காலை வெளிச்சத்தில் குலுங்கிக்கொண்டிருந்தன செடிகள். மலர்ந்த பூக்கள் கண்களை இழுத்தன. மலரின் ஒவ்வோர் இதழிலும் அக்காவின் முகம் தெரிந்தது. சிரிப்பு தெரிந்தது. மீண்டும் மீண்டும் அதே நினைவுகளா என உடம்பு சிலிர்த்தது. அவற்றையே பார்த்துக்கொண்டிருந்த பிள்ளைகளின் தோள்களைத் தொட்டேன். அப்போதுதான் வீட்டு ஓனரம்மா கொடுத்தனுப்பியிருந்த தோசைகளைச் சாப்பிட்டு முடிந்திருந்தோம்.

Sunday, 26 July 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 9

 

மதில்கள்

கடந்த எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கும் ’கலைமகள்’ மாத இதழ், தொடக்கத்தில் தேசிய நோக்கையும் மரபான பண்பாட்டுப் பார்வையையும் வெளிப்படுத்தும் படைப்புகளோடு வெளிவந்தது. அப்போது, உ.வே.சா., புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, டி.கே.சிதம்பரநாத முதலியார், கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை என பல எழுத்தாளர்கள் கலைமகள் இதழில் தொடர்ந்து எழுதிவந்தனர்.