Home

Sunday, 26 April 2026

வாசிப்பும் உரையாடலும்

 

ஜெயஸ்ரீ அவர்களை முதன்முதலாகக் கடலூரில் சந்தித்து உரையாடிய சிறிது நேரத்திலேயே அவர் தம் நெஞ்சில் தேக்கிவைத்திருந்த இலக்கிய ஈடுபாட்டை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அன்று தமக்குப் பிடித்த சிறுகதைகளாக அவர் படித்திருந்த சில மூத்த எழுத்தாளர்களின் சிறுகதைகளை நினைவிலிருந்து அடுக்கிக்கொண்டே சென்றது இன்னும் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது.

அழுத்தமான கேள்வி

 

இரண்டாயிரமாவது ஆண்டில் அக்டோபர் மாதத்தில் கடலூரைச் சேர்ந்த நண்பர் வளவ.துரையன் தம்முடைய இலக்கிய அமைப்பின் சார்பாக என் படைப்புகளை முன்வைத்து ஒருநாள் கருத்தரங்கமொன்றை ஏற்பாடு செய்திருந்தார். என்னுடைய சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் சார்ந்து அவர் அமர்வுகளை ஒழுங்கு செய்திருந்தார். கடலூரைச் சேர்ந்த சில பேச்சாளர்களும் புதுச்சேரி, நெய்வேலி, விழுப்புரம் என அருகிலிருந்த நகரங்களிலிருந்து வந்திருந்த சில பேச்சாளர்களும் ஒவ்வொரு அமர்விலும் விரிவாக உரையாற்றினார்கள்.

படுக்கப்பத்து மேகநாதன் : சுதந்திர தாகமும் சாகசமும்

 

தீண்டாமை ஒழிப்புப்பணி தொடர்பான விளக்கங்களை அளிக்கவும் அரிஜன நலநிதியைத் திரட்டவும் ஒரு நீண்ட சுற்றுப்பயணத்தைத் திட்டமிட்ட காந்தியடிகள் 20.12.1933 அன்று சென்னைக்கு வந்து சேர்ந்தார். இரு நாட்கள் மட்டுமே சென்னையில் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதற்குப் பிறகு ஆந்திராவுக்குச் சென்று, அங்கிருந்து மைசூருக்குச் சென்று, பிறகு மலபார் வழியாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் சில நாட்கள் பயணம் செய்து, ஒரு மாதம் கழித்து இறுதியாக நாகர்கோவிலை வந்தடைந்தார்.

Sunday, 19 April 2026

வாழும் தமிழ் : நியூயார்க் இலக்கியத் திருவிழா 2026

  

அன்புள்ள நண்பருக்கு

வணக்கம். சென்னையிலிருந்து நியுயார்க் நகரத்துக்குப்  பயணம் செய்தபோது, சுனில் கிருஷ்ணன், சு.வேணுகோபால், நான் மூவரும் ஒரே வரிசையில் அடுத்தடுத்து உட்கார்ந்து உரையாடியபடியே பயணம் செய்யும் வகையில் எங்களுக்கு இருக்கைகள் அமைந்தன. அதை ஒரு நல்லூழ் என்றே சொல்லவேண்டும். ஆயினும் நீண்ட பயண நேரம் காரணமாக என் நெஞ்சில் ஒருவித பதற்றமும் சோர்வும் இருந்தன.

ஆனந்தமான தற்செயல்

 

காகா காலேல்கர் காந்தியடிகளின் உற்ற நண்பர். காந்தியடிகளோடு இணைந்து சபர்மதி ஆசிரமத்தில் பணிபுரிந்தவர். அவர் தொடங்கிய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறைத்தண்டனை பெற்றவர்.  மக்களுக்குத் தொண்டாற்றியபடியே எழுத்தாளராகவும் விளங்கியவர்.

Sunday, 12 April 2026

சங்குத்தோரணமும் முதுகுத்தழும்பும்

 

ஏற்கனவே இரு கவிதைத்தொகுதிகள் வழியாகத் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான சுஜாதா செல்வராஜ் தன் முதல் சிறுகதைத்தொகுதியை இப்போது வெளியிட்டிருக்கிறார். கடந்த பதினான்கு ஆண்டுகளாக அவர் தொடர்ச்சியாக சிறுகதைகளை எழுதியிருந்தாலும் அவை இப்போதுதான் தொகுக்கப்பட்டிருக்கின்றன.  

தியாக வாழ்க்கை

 

மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்நாத் அவர்களுடைய நூற்றாண்டு நிறைவெய்தி சில மாதங்கள் முடிந்துவிட்டன. அவருடைய நூற்றாண்டையொட்டி ஒருநாள் நிகழ்ச்சியொன்றை நடத்தவேண்டும் என்னும் நெடுநாள் கனவு நிறைவேறுவதற்கான வாய்ப்பு காலச்சுவட்டின் உதவியோடு சமீபத்தில் கனிந்துவந்தது. நூற்றாண்டு நிகழ்ச்சியை 12.03.2026  அன்று சென்னையில் செல்லம்மாள் கல்லூரியில் நடத்துவது என நாள் குறித்துவிட்டு மற்ற வேலைகளில் இறங்கினேன்.