’காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம்’, ’அக்கா குருவி’ போன்ற சிறார் பாடல் தொகுதிகள் வழியாக தமிழ்ச்சூழலுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர் குருங்குளம் முத்துராஜா. அவர் கடந்த சில ஆண்டுகளாக சிறார்களுக்கான படைப்புகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார். புதிதாக வெளிவந்திருக்கும் ’சேட்டைக்கார சின்னா’ என்னும் பாடல் தொகுதி வழக்கம்போல சிறார்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன.