Home

Sunday, 6 September 2026

புக் பிரம்மா இலக்கியத் திருவிழா – 2026 : எல்லைகளைக் கடந்த இலக்கியச் சங்கமம்

 

தென்னிந்திய மொழிகளில் தொடர்ச்சியாக எழுதிவரும் மூத்த, இளம் படைப்பாளிகளை முன்னிறுத்தவும் அம்மொழிகளுக்கிடையில் நிகழவேண்டிய இலக்கியப் பரிமாற்றத்தின் தேவையை உணர்த்தவும் கடந்த இரு ஆண்டுகளாக பெங்களூரில் வெற்றிகரமான வகையில் புக் பிரம்மா இலக்கியத்திருவிழா நடைபெற்று வருகிறது. 2026ஆம் ஆண்டுக்குரிய திருவிழா கடந்த 21.08.2026 முதல் 23.08.2026 வரை செயின்ட் ஜான்ஸ் ஆடிட்டோரியத்தின் வளாகத்தில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது. கன்னட நாவலாசிரியரும் ஊடகவியலாளருமான சதீஷ் சப்பரிகெ இந்த அமைப்பின் இயக்குநராக இருந்து நிர்வகித்துவருகிறார்.

ஒன்பது குன்று - முன்னுரை

  

வெவ்வேறு காலகட்டங்களில் சந்திக்க நேர்ந்த சில அரிய மனிதர்களைப்பற்றியும் சில அரிய தருணங்களைப்பற்றியும் சிற்சில சித்திரங்களை அனுபவக்கதைகளாக தொடர்ந்து எழுதி வருகிறேன். கதைக்கட்டுரைகள் அல்லது கட்டுரைக்கதைகள் என்று இவற்றைச் சொல்லலாம். ஏற்கனவே இந்தக் கட்டமைப்பில் தீராத பசிகொண்ட விலங்கு, இருபத்திரண்டு அட்டைப்பெட்டிகள், ஒட்டகம் கேட்ட இசை போன்ற தொகுப்புகள் வந்துள்ளன. அவற்றின் தொடர்ச்சியாக இத்தொகுதியைக் கருதலாம்.

சேய்மைக்காட்சிகளும் அண்மைக்காட்சிகளும்

 

ஆறு மாடிகளைக் கொண்ட பெரியதொரு வணிகவளாகத்துக்கு ஒருநாள் சென்றிருந்தேன். ஆறாவது மாடியில் நண்பருடைய ஓவியப்பயிற்சிக்கூடம் இருந்தது. அவரைப் பார்த்து ஒரு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழைக் கொடுப்பதற்காகத்தான் அங்கு போயிருந்தேன். நான் போன நேரத்தில் அவர் இல்லை. அங்கு ஓவியம் வரைந்துகொண்டிருந்த இரண்டு மாணவர்கள் என்னிடம் காத்திருக்கும்படி சொன்னார்கள். அவர்கள் சுட்டிக்காட்டிய நாற்காலியில் அமராமல் அவர்கள் வரைந்துகொண்டிருந்த ஓவியங்களை ஆர்வத்துடன் பார்க்கத் தொடங்கினேன்.

Sunday, 30 August 2026

ஒவ்வொரு பாடலும் ஒரு சொல்லோவியம்

  

’காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம்’, ’அக்கா குருவி’ போன்ற சிறார் பாடல் தொகுதிகள் வழியாக தமிழ்ச்சூழலுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர் குருங்குளம் முத்துராஜா. அவர் கடந்த சில ஆண்டுகளாக சிறார்களுக்கான படைப்புகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார்.  புதிதாக வெளிவந்திருக்கும் ’சேட்டைக்கார சின்னா’ என்னும் பாடல் தொகுதி வழக்கம்போல சிறார்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

இந்திரா பார்த்தசாரதியின் மாயமான் வேட்டை: இலட்சியவாதமும் சந்தர்ப்பவாதமும்

 

மாயமான் என்பது கம்பராமாயணத்தில் கம்பர் பயன்படுத்திய  சொல். வனவாசத்தின்போது ராமனும் சீதையும் லட்சுமணனும் தண்டகாரண்யம் என்னும் வனப்பகுதியில் வசித்துவருகிறார்கள். ஒருநாள் மாலைப்பொழுதில் ராமனும் சீதையும் தனித்து உரையாடி மகிழ்ந்திருந்த வேளையில் அவ்வழியாக ஒரு மான் ஓடிச் செல்கிறது. பொன்னிற மேனி கொண்ட அந்த மானின் அழகில் மயங்கிய சீதை, அந்த மானைத் தனக்குப் பிடித்துக் கொடுக்குமாறு ராமனிடம் கேட்கிறாள். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றும் வேகத்தில் உடனடியாக மானைத் தேடிப் புறப்படுகிறான் ராமன்.

Saturday, 22 August 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 12

 சமுத்திரமும் சாக்கடையும்


சமுதாயச் சீரழிவுகளையும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களையும் வெளிப்படையாகவும் அறச்சீற்றத்தோடும் முன்வைக்கும் விந்தனின் படைப்புகள் தமிழிலக்கியத்துக்கு வளம் சேர்ப்பவை. அவர் எழுதிய சிறுகதைகளையும் நாவல்களையும் போலவே அவருடைய கட்டுரைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவருடைய ‘வேலை நிறுத்தம் ஏன்?’ என்கிற கட்டுரை தொழிலாளர் பிரச்சினையை சமூகத்தில் வாழ்கிற அனைவரும்  புரிந்துகொள்வதற்காக எழுதப்பட்டது. ’சேரிகள் நிறைந்த சென்னை மாநகரம்’ என்னும் கட்டுரை சென்னை புறநகர்ப் பகுதிகளில் வாழும் தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கை நிலையை உணர்த்துவதற்காக எழுதப்பட்டது.

போட்டிகளும் பரிசுகளும்

 

காலை நடைப்பயிற்சிக்குப் புறப்படும் நேரத்தில் வழக்கமாக என்னோடு சேர்ந்துகொள்ளும் நண்பர் இரண்டு நாட்களாக  வரவில்லை.  ஏதேனும் அவசர வேலையாக  அதிகாலையிலேயே வீட்டைவிட்டுப் புறப்பட்டுச் சென்றிருக்கக்கூடும் என முதல்நாள் நினைத்துக்கொண்டேன். ஆனால் இரண்டாவது நாளும் அவர் வரவில்லை.  அவருக்கு என்ன நேர்ந்திருக்குமோ என  எதைஎதையோ நினைத்து மனம் குழப்பமடையத் தொடங்கியது. அதனால் நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பியதும் முதல் வேலையாக கைப்பேசி வழியாக அவரை அழைத்தேன்.