Home

Saturday, 19 September 2026

அரிதான செயல்

 

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் தொடர்ந்து இயங்கிவரும் முக்கியமான மூத்த படைப்பாளர் விட்டல்ராவ். சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், கலை விமர்சகர், ஓவியர், திரைப்படஞானம் மிக்கவர் என பன்முகம் கொண்ட படைப்பாளர்.

அகப்பயணத்தின் விசித்திரம்

  

மன ஓட்டத்தின் தடத்தில் எந்த முன்முடிவுமின்றி பயணம் செய்து, அது சென்று நிற்கும் புள்ளியை எந்தப் பூச்சுமின்றி முன்வைக்கும் எழுத்தாளர் என மறைந்த மூத்த எழுத்தாளர் சூடாமணியைக் குறிப்பிடலாம். அவருடைய எழுத்துலகத்தைப் பொதுவாக அகப்பயணத்தின் அனுபவக்குறிப்புகள் என அடையாளப்படுத்தமுடியும்.

பாவண்ணன் சிறுகதைகள் - இரண்டாம் தொகுதி - முன்னுரை

 

ஒரு சொல்

 

நான் எழுதத் தொடங்கிய காலத்தில் எண்ணற்ற சிறுபத்திரிகைகள் வெளிவந்தன. எல்லாமே தனிச்சுற்றுக்கான இதழ்கள். எந்த இதழுக்கும் கால வரையறை எதுவும் கிடையாது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என வெளிவருபவையாகவே அவை இருந்தன. தளம், புதிய நம்பிக்கை, அரும்பு, மன ஓசை, புதிய மனிதன், புது எழுத்து, இங்கே இன்று, கதைசொல்லி, ஒரு, சிறுகதைக்களஞ்சியம், கேரளத்தமிழ், அன்னம் விடு தூது என நீண்டு செல்லும் வரிசையில் அமைந்த அந்த இதழ்கள்தாம் நான் என் படைப்புகளுக்குத் தளம் அமைத்துக்கொடுத்தன.

Sunday, 13 September 2026

மனம் கவர்ந்த பாடல்கள்

 

சங்க காலத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலான காலகட்டத்தில் கவிஞர்கள் அனைவரும் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நான்கு வகையான வடிவங்களில் எழுதினார்கள். திருத்தக்கதேவர் விருத்தப்பாக்களை எழுதி உயிரூட்டினார். மரபான வடிவங்களை மீறி மக்களைக் கவர்வதற்காக புதிய வடிவங்களில் பாடல்களை எழுதுவது இலக்கிய உலகத்தின் தேவையாக இருந்தது. அருணகிரிநாதர் சந்தப்பாடல்களை எழுதி அவ்வடிவத்துக்கு ஒரு தொடக்கத்தை உருவாக்கினார். அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்துப் பாடல்களை எழுதி மற்றொரு பாதையை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து கண்ணி, கும்மி என பல புதிய வடிவங்கள் உருவாகின. பாரதியாரும் பாரதிதாசனும் இருவகை வடிவங்களிலும் எழுச்சியோடு பாடல்களை எழுதி மக்கள் மனத்தில் இடம்பிடித்தனர்.

சின்னச்சின்ன மாணிக்கங்கள்

 

கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டுவரும் இளம் வாசகர் வட்டம், கடந்த சில ஆண்டுகளாக மாணவ, மாணவிகளுக்கு நல்ல இலக்கிய நூல்களை அறிமுகப்படுத்தி, அவர்களிடம் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவருகிறது. அப்பயிற்சியின் விளைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஒருசில மாணவமாணவிகள் இலக்கிய நூல்களைத் தேடிப் படிக்கத் தொடங்குகிறார்கள். இன்னும் ஒருசிலர் சொந்தமாக எழுதும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். கற்பனைத்திறனும் எழுத்தாற்றலும் கைவரப்பெற்ற மாணவமாணவிகளின் சிறப்பான படைப்புகள் நூல்வடிவில் வெளியாகி பிறர் கவனத்தை ஈர்க்கின்றன.

Sunday, 6 September 2026

புக் பிரம்மா இலக்கியத் திருவிழா – 2026 : எல்லைகளைக் கடந்த இலக்கியச் சங்கமம்

 

தென்னிந்திய மொழிகளில் தொடர்ச்சியாக எழுதிவரும் மூத்த, இளம் படைப்பாளிகளை முன்னிறுத்தவும் அம்மொழிகளுக்கிடையில் நிகழவேண்டிய இலக்கியப் பரிமாற்றத்தின் தேவையை உணர்த்தவும் கடந்த இரு ஆண்டுகளாக பெங்களூரில் வெற்றிகரமான வகையில் புக் பிரம்மா இலக்கியத்திருவிழா நடைபெற்று வருகிறது. 2026ஆம் ஆண்டுக்குரிய திருவிழா கடந்த 21.08.2026 முதல் 23.08.2026 வரை செயின்ட் ஜான்ஸ் ஆடிட்டோரியத்தின் வளாகத்தில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது. கன்னட நாவலாசிரியரும் ஊடகவியலாளருமான சதீஷ் சப்பரிகெ இந்த அமைப்பின் இயக்குநராக இருந்து நிர்வகித்துவருகிறார்.

ஒன்பது குன்று - முன்னுரை

  

வெவ்வேறு காலகட்டங்களில் சந்திக்க நேர்ந்த சில அரிய மனிதர்களைப்பற்றியும் சில அரிய தருணங்களைப்பற்றியும் சிற்சில சித்திரங்களை அனுபவக்கதைகளாக தொடர்ந்து எழுதி வருகிறேன். கதைக்கட்டுரைகள் அல்லது கட்டுரைக்கதைகள் என்று இவற்றைச் சொல்லலாம். ஏற்கனவே இந்தக் கட்டமைப்பில் தீராத பசிகொண்ட விலங்கு, இருபத்திரண்டு அட்டைப்பெட்டிகள், ஒட்டகம் கேட்ட இசை போன்ற தொகுப்புகள் வந்துள்ளன. அவற்றின் தொடர்ச்சியாக இத்தொகுதியைக் கருதலாம்.