Home

Sunday, 4 June 2023

கனிந்து நழுவும் சூரியன் - சிறுகதை

 

     நேருக்குநேர் பார்க்கும்போது அளவற்ற ஆனந்தத்தையும் ஆச்சரியத்தையும் வழங்குகிற சூரியஅஸ்தமனக் காட்சி ஒருசில கணங்களில் சொற்களால் வடிக்கவியலாத தவிப்பையும் வலியையும் வழங்குகிற ஒன்றாகவும் மாறிவிடும் புதிரை என்னால் ஒருபோதும் புரிந்துகொள்ள இயல்வதில்லை. புரிந்துகொள்ள முயற்சிசெய்யும் ஒவ்வொரு தருணத்திலும் சிக்கலான ஒரு கணக்கின் விடைக்குரிய இறுதி வரிகளை எழுதத் தெரியாத சிறுவனுக்குரிய தத்தளிப்பையும் வருத்தத்தையுமே இயற்கை வழங்குகிறது.

சிவப்புக்கல் மோதிரம் - சிறுகதை

 

”இன்னைக்கு என்ன, பூமழையா? இப்பிடி ஏராளமா பூ உழுந்து கெடக்குது”

இரண்டுசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வாசல் கதவைத் திறக்கிறவரைக்கும் தமிழிடம் எப்படி பேச்சைத் தொடங்குவது என்னும் குழப்பத்தில் தத்தளித்தபடி இருந்தேன். ஆனால் சுற்றுச்சுவர் கம்பிக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும் சுவருக்கும் வீட்டு வாசலுக்கும் நடுவில் நின்றிருக்கும் மகிழமரத்தடியில் விழுந்து கிடக்கும் பழைய பூக்களின் குவியல்மீது உதிர்ந்திருக்கும் புதிய பூக்களைப் பார்த்ததும் உரையாடலுக்கு ஒரு தொடக்கம் கிடைத்துவிட்ட வேகத்தில்தான் அப்படிக் கேட்டேன்.   ஆனால் மறுகணமே அந்த வேகம் வடிந்துவிட்டது.

Tuesday, 30 May 2023

ஒன்பது குன்று - கட்டுரை

 

எண்பதுகளின் பிற்பகுதியில் தொலைபேசித்துறையில் கோஆக்சியல் கேபிள் பாதை அமைப்பதில் சில பிரச்சினைகள் எழுந்தன. வனப்பகுதிகளும் மலைப்பகுதிகளும் நிறைந்த பல மாவட்டங்களை இணைக்க முடியவில்லை. முக்கியமாக ஹாசன், மங்களூர், சிக்கமகளூர், கார்வார், ஷிமோகா போன்ற பகுதிகளை இணைக்கமுடியாமல் திணறினோம். அந்த நேரத்தில் இரும்புக் கோபுரங்களைக் கட்டியெழுப்பும் மாற்றுத்திட்டம் உதித்தது.  

Sunday, 28 May 2023

கசப்பில் கரைந்த இளைஞன் - கட்டுரை

 

     திருமணமாகாத இளைஞர்களுக்கு எழுபதுகளிலும் எண்பதுகளிலும் வாடகைக்கு வீடு கிடைப்பதில் மற்ற நகரங்களில் இருந்ததைப்போலவே பெங்களூரிலும் ஏராளமான சிரமங்கள் இருந்தன. வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் மறுப்பதற்கு முன்னரேயே தரகர்கள் மறுத்துவிடுவார்கள். சிற்றூர்களிலிருந்து நகரத்தைநோக்கி வருகிறவர்களாகட்டும், வேறு நகரங்களிலிருந்து வெவ்வேறு காரணங்களுக்காக குடிபெயர்ந்து வருகிறவர்களாகட்டும் அவர்களுக்காகவே சிற்சில இடங்களில் சில விடுதிகள் இயங்கிவந்தன. எட்டுக்குப் பத்தடியில் அடுத்தடுத்து வரிசைவரிசையாகக் கட்டப்பட்ட சின்னச்சின்னக் கூண்டுகள். ஒவ்வொன்றிலும் இரண்டு கட்டில்கள். ரயில் பெர்த்துகளைப்போல சிற்சிலவற்றில் நான்குகூட கட்டமைக்கப்பட்டிருக்கும். அவற்றை நோக்கித்தான் தரகர்கள்  அவர்களை வழிகாட்டுவார்கள். 

ஒரு துளியைச் சேமிப்பது எப்படி? - கட்டுரை

 

     இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் "சம்சாரா" என்னும் ஜெர்மானியப் படமொன்றைப் பார்க்க நேர்ந்தது. எல்லாப் பாத்திரங்களும் ஜெர்மானிய மொழியில் பேசினாலும் கதை முழுக்க இமயமலை அடிவாரத்தையொட்டிய லடாக் பகுதியிலேயே நடைபெறும் விதத்தில் அப்படம் அமைக்கப்பட்டிருந்தது. சில இந்தி உரையாடல்களும் இடம்பெற்றிருந்தன. படத்தை இயக்கிய இயக்குநரான பான் நலின் இந்தியத் திரைப்படங்களோடும் தொடர்புடையவர். ஜெர்மானிய நடிகர்களோடு ஓர் இந்திய நடிகையும் நடித்திருந்தார். தாஷி என்னும் இளம் புத்த பிக்குவின் வாழ்வில் நிகழும் தடுமாற்றங்களையும் தெளிவுகளையும் உணர்த்தும் வகையில் படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. கதைப்படி ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவன் ஒரு கிராமத்துக்குச் செல்கிறான். அக்கிராமத்தின் நுழைவாயிலில் அடுக்கப்பட்டிருந்த கற்களில் பல வாசகங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒரு வாசகம்தான் "ஒரு துளியைச் சேமிப்பது எப்படி?" என்னும் கேள்வி.

Sunday, 21 May 2023

கண்காணிப்புக் கோபுரம் - சிறுகதை

 

கண்காணிப்புக் கோபுரம் இருந்த குன்றின் உச்சியை நோக்கிச் செல்லும் பாதையின் நாலாவது திருப்பத்தில் நொச்சிமரத்தடியில் வழிமாறிச் சென்றுவிட்ட எருமையொன்று குழப்பத்தில் நான்கு திசைகளிலும் மாறிமாறிப் பார்த்தபடி நின்றிருந்தது. என்னைப் பார்த்ததும் தலையைத் திருப்பி கண்ணாடிக்கோளம்போல மின்னும் கரிய விழிகளை உருட்டி ‘ம்மே’ என்று முதலில் சத்தமிட்டது. பிறகு, அதை நெருங்காமலேயே விலகி நின்றுவிட்ட என் திகைப்பை உணர்ந்து நான் அதனுடைய மேய்ப்பனல்ல என்பதைப் புரிந்துகொண்டு, மற்ற திசைகளின் பக்கம் தலையைத் திருப்பி பலவீனமான குரலில் மீண்டும்மீண்டும் ‘ம்மே ம்மே’ என்றது. அதன் கழுத்து வேகமாக அசையும்தோறும் மணியசைந்து ஓசை எழுந்தது.

விருப்பம் - கட்டுரை

  

ரயில்வே ஸ்டேஷன் பக்கம் நாங்கள் ஆடிக்கொண்டிருந்த பேஸ் பால் விளையாட்டை ஒரு கட்டத்தில் நிறுத்திவைக்கவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. ஒருமுறை சுப்பிரமணி பந்து வீசினான். மனோகரன் அடித்தான். எதிர்பாராமல் அந்தப் பந்து சிறிது தொலைவில் நடந்துபோய்க்கொண்டிருந்த ஒரு அக்காவின் இடுப்பில்  இருந்த தண்ணீர்ப்பானையில் பட்டுத் தெறித்தது. அந்த வேகத்தில் பானை துண்டுதுண்டாக உடைந்துவிட, அவர் உடுத்தியிருந்த ஆடை முழுதும் தண்ணீரில் நனைந்துவிட்டது. அதை ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. அச்சத்தில் நாங்கள் உடல்நடுங்க சிலையாக நின்றுவிட்டோம்.