Home

Sunday, 5 July 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 6

 

சுதந்திர தாகம்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட காந்திய ஆளுமைகளுள் டி.எஸ்.சொக்கலிங்கமும் ஒருவர். அவர் ரெளலட் சட்ட எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், கள்ளுக்கடை மறியல், அன்னியத்துணி மறுப்பு என பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றார். பேனா மன்னர் என்றும் தென்காசிச்சிங்கம் என்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட அவர்   தென்காசியைச் சேர்ந்தவர்.  ஜனயுகம், பாரதம், , தமிழ்நாடு, தேசபக்தன், நவசக்தி உள்ளிட்ட பல இதழ்களில் பணியாற்றி தன் மொழியாளுமையை வளர்த்துக்கொண்டார்.

வழி - சிறுகதை

 

வனாந்திரமான இடத்தில் பெரியபெரிய புகை போக்கிகள் முளைத்த கல் கட்டிடத்தின் கம்பீரம் தெருவில் போகும் யாரையும் திரும்ப வைத்துவிடும். இதே பாதையில் வேலை சம்பந்தமாய் நான் அலைய ஆரம்பித்து ஒரு வருஷத்துக்கு மேலிருக்கும். என் வேலைக்கென்றே இலாக்கா மோட்டார் சைக்கிள் ஒன்று என் வசமிருந்தது

Sunday, 28 June 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 5

 

தன்னலமும் தன்மானமின்மையும்

பாவண்ணன்

 

கொங்கு வட்டார மக்களின் வாழ்க்கையைக் கருப்பொருளாகக் கொண்டு நாவல்களை எழுதிய முன்னோடி எழுத்தாளர் ஆர்.ஷண்முகசுந்தரம். வாசக கவனத்தை ஈர்ப்பதற்காக, மிகையுணர்ச்சி கொண்ட காட்சிகளையும் பரபரப்பான நிகழ்ச்சிகளையும் சேர்த்து எழுதுவதை ஒரு பழக்கமாகக் கொண்டிருந்த அன்றைய காலகட்டத்தில் உள்ளதை உள்ளபடி கூறும் கச்சிதமான காட்சிச்சித்திரங்களின் தொகுப்பாக வெளிவந்த ஆர்.ஷண்முகசுந்தரத்தின் படைப்புகள் இயல்புவாத எழுத்துமுறையின் முன்னுதாரணங்களாக விளங்கின. அவருடைய நாவல்களை ஒரு காலகட்டத்தின் ஆவணம் என்று குறிப்பிடலாம். அவருடைய நாவல்களை க.நா.சு. முதல் சுந்தர ராமசாமி வரை பல எழுத்தாளர்கள் முன்னிறுத்திப் பேசியதற்கு இதுவே காரணம்.

இந்து தமிழ் இணைய இதழ் நேர்காணல்

 தீராத துன்பத்தை எழுதிக் கடக்கலாம் –

கேள்விகள் : அருள்செல்வன்

 

தமிழின் அத்தனை வகைமைகளிலும் எழுதி வருபவர் எழுத்தாளர் பாவன்னன்1982இல் எழுத ஆரம்பித்த இவர், இரண்டே ஆண்டுகளில் இலக்கியச்சிந்தனை விருது பெற்றவர். இதுவரை நூறு நூல்களுக்கு மேல் எழுதியுல்ல இவர் தமிழகம் மற்றும் புதுவை மாநில அரசுகள், சாகித்திய அகாதமி, கதா, இயல், விளக்கு, சூரிய விருதுகள் என ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். இனி பாவண்ணனுடன் பேசலாம்.

Sunday, 21 June 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 4

 

கடந்து செல்லும் கலை

கா.ஸ்ரீ.ஸ்ரீ. என அழைக்கப்படும் காஞ்சிபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீநிவாசாசாரியார் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிருந்தாவனத்தில் 1913இல் பிறந்தார். வேத பண்டிதரான அவருடைய தந்தையாரே அவருக்கு  சமஸ்கிருதம், இந்தி, வங்கம், தமிழ் ஆகிய மொழிகளைக் கற்பித்தார். பணியின் நிமித்தமாக அவருடைய தந்தையார் பம்பாய்க்கு அருகில் கல்யாணுக்குக் குடியேறியபோது, அங்கிருந்த பள்ளியில் சேர்ந்து மராத்தியும் ஆங்கிலமும் கற்றார். ஏழாம் வகுப்பில் படிக்கும்போது காதில் ஏற்பட்ட ஒரு பிரச்சினைக்கு மருத்துவம் செய்துகொள்வதற்காக அவருடைய குடும்பம் சென்னைக்குக் குடிபெயரவேண்டிய நிலை ஏற்பட்டதால், சென்னையில் இருந்த பள்ளியில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார்.

ஆவணமாகும் நினைவுக்குறிப்புகள்

 

கல்கத்தாவில் 15.08.1872 அன்று பிறந்த அரவிந்தர் ஆங்கிலேயர் காலத்து ஐ.சி.எஸ். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றதால் உதவித்தொகை பெற்று இங்கிலாந்தைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காகச் சென்றார். படிப்புக்காலத்தின் இறுதியில் நடைபெற்ற ஐ.சி.எஸ். தேர்வில் தேறியபோதும் குதிரையேற்றத் தேர்வில் பங்கேற்காமல் அவர் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டார்.

Thursday, 18 June 2026

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் : எல்லாம் செயல்கூடும்


இந்தி பிரச்சார சபையின் வெள்ளிவிழா சென்னையில் 25.01.1946 அன்று கொண்டாடப்பட்டது. அந்த விழாவுக்கு தலைமை தாங்கி உரையாற்றுவதற்காக காந்தியடிகள் வந்திருந்தார். அன்றைய கூட்டத்தில் இந்தியா போன்ற பெரியதொரு நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் தாய்மொழிக்கல்வியிலும் இணைப்புமொழிக்கல்வியிலும் தேர்ச்சி பெறுவது மிகமுக்கியம் என்பதை காந்தியடிகள் வலியுறுத்திப் பேசினார். நான்கு நாட்கள் கழித்து அதே இடத்தில் நயி தலீம் பட்டமளிப்புவிழா நடைபெற்றது. ஆதாரக்கல்வித் திட்டத்தின் கீழ் ஆசிரியர் பயிற்சியை முடித்த இருபத்தாறு பேர்களுக்கு காந்தியடிகளே சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை நிகழ்த்தினார். அவருடைய உடல்நிலை அப்போது மிகவும் நலிவுற்ற நிலையில் இருந்தது. ஆயினும் அதைப் பொருட்படுத்தாமல்  தொடர்ந்து மேலும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றிய காந்தியடிகள் 02.02.1946 அன்று மதுரைக்கு வந்து சேர்ந்தார்.