மதில்கள்
கடந்த எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கும் ’கலைமகள்’ மாத இதழ், தொடக்கத்தில் தேசிய நோக்கையும் மரபான பண்பாட்டுப் பார்வையையும் வெளிப்படுத்தும் படைப்புகளோடு வெளிவந்தது. அப்போது, உ.வே.சா., புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, டி.கே.சிதம்பரநாத முதலியார், கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை என பல எழுத்தாளர்கள் கலைமகள் இதழில் தொடர்ந்து எழுதிவந்தனர்.