சமுத்திரமும் சாக்கடையும்
சமுதாயச் சீரழிவுகளையும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களையும் வெளிப்படையாகவும் அறச்சீற்றத்தோடும் முன்வைக்கும் விந்தனின் படைப்புகள் தமிழிலக்கியத்துக்கு வளம் சேர்ப்பவை. அவர் எழுதிய சிறுகதைகளையும் நாவல்களையும் போலவே அவருடைய கட்டுரைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவருடைய ‘வேலை நிறுத்தம் ஏன்?’ என்கிற கட்டுரை தொழிலாளர் பிரச்சினையை சமூகத்தில் வாழ்கிற அனைவரும் புரிந்துகொள்வதற்காக எழுதப்பட்டது. ’சேரிகள் நிறைந்த சென்னை மாநகரம்’ என்னும் கட்டுரை சென்னை புறநகர்ப் பகுதிகளில் வாழும் தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கை நிலையை உணர்த்துவதற்காக எழுதப்பட்டது.