செல்வமும் காமமும்
தமிழ் நாவல் முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவர் திரிசிரபுரம் ம.பொன்னுசாமி பிள்ளை. அவர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பர்மாவில் ரங்கூன் பேப்பர் கரன்சி அலுவலகத்தில் கருவூலப் பொறுப்பாளராகப் பணிபுரிந்தவர். அவர் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். சைவ சித்தாந்தத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் ஆறு நாவல்களை எழுதியிருக்கிறார். முதல் நாவலாக வெளிவந்த ‘கமலாட்சி’ ஒரு குறிப்பிடத்தக்க படைப்பாகும். (ஆரம்பப் பதிப்புகளுக்குப் பிறகு அந்தத் தலைப்பு ‘கமலாட்சி சரித்திரம்’ என மாறிவிட்டது) இந்த நாவல் 1903ஆம் ஆண்டில் சென்னை ஆர்.எ.சிவசாம்பு வெளியீடாக முதன்முதலில் வெளிவந்தது.