Home

Sunday, 19 April 2026

வாழும் தமிழ் : நியூயார்க் இலக்கியத் திருவிழா 2026

  

அன்புள்ள நண்பருக்கு

வணக்கம். சென்னையிலிருந்து நியுயார்க் நகரத்துக்குப்  பயணம் செய்தபோது, சுனில் கிருஷ்ணன், சு.வேணுகோபால், நான் மூவரும் ஒரே வரிசையில் அடுத்தடுத்து உட்கார்ந்து உரையாடியபடியே பயணம் செய்யும் வகையில் எங்களுக்கு இருக்கைகள் அமைந்தன. அதை ஒரு நல்லூழ் என்றே சொல்லவேண்டும். ஆயினும் நீண்ட பயண நேரம் காரணமாக என் நெஞ்சில் ஒருவித பதற்றமும் சோர்வும் இருந்தன.

ஆனந்தமான தற்செயல்

 

காகா காலேல்கர் காந்தியடிகளின் உற்ற நண்பர். காந்தியடிகளோடு இணைந்து சபர்மதி ஆசிரமத்தில் பணிபுரிந்தவர். அவர் தொடங்கிய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறைத்தண்டனை பெற்றவர்.  மக்களுக்குத் தொண்டாற்றியபடியே எழுத்தாளராகவும் விளங்கியவர்.

Sunday, 12 April 2026

சங்குத்தோரணமும் முதுகுத்தழும்பும்

 

ஏற்கனவே இரு கவிதைத்தொகுதிகள் வழியாகத் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான சுஜாதா செல்வராஜ் தன் முதல் சிறுகதைத்தொகுதியை இப்போது வெளியிட்டிருக்கிறார். கடந்த பதினான்கு ஆண்டுகளாக அவர் தொடர்ச்சியாக சிறுகதைகளை எழுதியிருந்தாலும் அவை இப்போதுதான் தொகுக்கப்பட்டிருக்கின்றன.  

தியாக வாழ்க்கை

 

மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்நாத் அவர்களுடைய நூற்றாண்டு நிறைவெய்தி சில மாதங்கள் முடிந்துவிட்டன. அவருடைய நூற்றாண்டையொட்டி ஒருநாள் நிகழ்ச்சியொன்றை நடத்தவேண்டும் என்னும் நெடுநாள் கனவு நிறைவேறுவதற்கான வாய்ப்பு காலச்சுவட்டின் உதவியோடு சமீபத்தில் கனிந்துவந்தது. நூற்றாண்டு நிகழ்ச்சியை 12.03.2026  அன்று சென்னையில் செல்லம்மாள் கல்லூரியில் நடத்துவது என நாள் குறித்துவிட்டு மற்ற வேலைகளில் இறங்கினேன்.

Sunday, 29 March 2026

சரஸ்வதி ராம்நாத் - புதிய பார்வை இதழில் வெளிவந்த நேர்காணல்

 

மொழி பெயர்ப்புகளுக்குரிய

மரியாதையோ கவனிப்போ தமிழில் இல்லை

 

சந்திப்பு : பாவண்ணன்.

 

சரஸ்வதி ராம்நாத் அவர்கள் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக சிறந்த மொழி பெயர்ப்பாளராகத் தமிழ்ச் சூழலில் இயங்கி வருபவர் சரஸ்வதி ராம்நாத். மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

சங்குத்தோரணமும் முதுகுத்தழும்பும்

 

ஏற்கனவே இரு கவிதைத்தொகுதிகள் வழியாகத் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான சுஜாதா செல்வராஜ் தன் முதல் சிறுகதைத்தொகுதியை இப்போது வெளியிட்டிருக்கிறார். கடந்த பதினான்கு ஆண்டுகளாக அவர் தொடர்ச்சியாக சிறுகதைகளை எழுதியிருந்தாலும் அவை இப்போதுதான் தொகுக்கப்பட்டிருக்கின்றன.  

Sunday, 22 March 2026

சரஸ்வதி ராம்நாத் நூற்றாண்டு விழா

 

எழுத்தையே தன் தவமாகக் கொண்ட சரஸ்வதி ராம்நாத் அவர்கள், அமராவதி நதிக்கரையோரத்தில் உள்ள தாராபுரம் என்னும் ஊரில் 1925ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் ஏழாம் நாள் அன்று பிறந்தார். அவருடைய பெற்றோர் விஸ்வநாத ஐயர், நாமகிரி அம்மாள். மருத்துவராகப் பணி புரிந்து வந்த விஸ்வநாத ஐயர் காந்தியடிகளின் பாதையில் தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். அவர் காந்தியடிகள் மீது மிகுந்த ஈடுபாடும் பற்றும் கொண்டிருந்தார்.