Home

Thursday, 16 July 2026

பூமணியின் ‘பொறுப்பு ‘ – சிரிப்பும் எரிச்சலும்

 

பதினோராம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டதுமே எங்கள் பள்ளிக் கூடத்தில் பரபரப்பு கூடிவிட்டது. தினந்தினமும் காலைக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் பள்ளிஇறுதியின் வெற்றிக்கும் வாழ்க்கைக்குமான தொடர்பைப் பலவிதமான எடுத்துக்காட்டுகளோடு சொல்லிக் கொண்டிருந்தார். எங்கள் பள்ளியின் முன்னால் மாணவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று, மேற்கு வங்காளத்துக்குப் போன கதை ஒவ்வொரு நாளும் எங்களுக்கு ஊக்கம் வழங்கும் பொருட்டுச் சொல்லப்பட்டது. 

மாற்றமும் மாற்றமின்மையும்

  

நாவலின் தொடக்கத்தில் நாடு சுதந்திரமடைந்த தகவலும் அதற்குப் பிறகு நடைபெற்ற முதல் தேர்தலின் தகவலும் பாத்திரங்களின் உரையாடல்களின் வழியாக முன்வைக்கப்படுகின்றன. அழகிரிப்பகடை தன் இரண்டுவயது மகளோடும் முதல் மனைவியோடும் துரைச்சாமிபுரத்திலிருந்து மணலு¡த்துக்குக் குடியேறிய காலகட்டம் அது. ஏறத்தாழ கால்நூற்றாண்டுக் காலம் நகர்ந்து செல்வதை வெவ்வேறு மாற்றங்களின் ஊடாக உணர்த்தி, இறுதியில் தாயைப் பறிகொடுத்துவிட்டு தனிமையில் வந்து நிற்கிற பேரப்பிள்ளை சுடலையை எடுத்து வளர்த்து பள்ளிக்குப் படிக்க அனுப்புகிற காலகட்டத்தோடு படைப்பு நிறைவெய்துகிறது.

Sunday, 12 July 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 7

 

மாபெரும் புதிர்


கடந்த நூற்றாண்டில் காந்தியக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர் வழியிலேயே தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட எண்ணற்ற இந்தியக்குடும்பங்களில் எழுத்தாளர் எம்.எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களுடைய குடும்பமும் ஒன்று. அவர் தந்தையாரான சீதாராமையா காந்தியத்தொண்டராக மட்டுமன்றி எழுத்தாளராகவும் வாழ்ந்தவர். ’கரட்டூர் ராமு’ என்னும் தலைப்பில் அவர் ஒரு நாவலை எழுதியுள்ளார். கல்யாணசுந்தரத்தின் மூத்த சகோதரர் ஆண்டிப்பட்டியில் காந்திய ஆசிரமத்தை நடத்தி கதருக்கும் தீண்டாமை ஒழிப்புக்கும் ஆதரவாகச் செயல்பட்டவர். வாழ்நாள் முழுதும் எளிய மக்களுக்குத் தொண்டாற்றியவர்.

நெருப்பு வளையங்கள் - சிறுகதை

 

நெருப்பு வளைத்துக்குள் ஒரு பறவையைப்போல புகுந்து தாவினாள் ராணி. கண்ணிமைக்கும் நேரத்துக்குள் இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்துக்கும் வலது பக்கத்திலிருந்து இடது பக்கத்துக்கும் தாவி செருகப்பட்ட அம்புபோல நின்றாள். முதல் சுற்று முடிந்தது. பார்வையாளர்களைப் பார்த்து இரண்டு கைகளையும் அசைத்தாள். 

Sunday, 5 July 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 6

 

சுதந்திர தாகம்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட காந்திய ஆளுமைகளுள் டி.எஸ்.சொக்கலிங்கமும் ஒருவர். அவர் ரெளலட் சட்ட எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், கள்ளுக்கடை மறியல், அன்னியத்துணி மறுப்பு என பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றார். பேனா மன்னர் என்றும் தென்காசிச்சிங்கம் என்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட அவர்   தென்காசியைச் சேர்ந்தவர்.  ஜனயுகம், பாரதம், , தமிழ்நாடு, தேசபக்தன், நவசக்தி உள்ளிட்ட பல இதழ்களில் பணியாற்றி தன் மொழியாளுமையை வளர்த்துக்கொண்டார்.

வழி - சிறுகதை

 

வனாந்திரமான இடத்தில் பெரியபெரிய புகை போக்கிகள் முளைத்த கல் கட்டிடத்தின் கம்பீரம் தெருவில் போகும் யாரையும் திரும்ப வைத்துவிடும். இதே பாதையில் வேலை சம்பந்தமாய் நான் அலைய ஆரம்பித்து ஒரு வருஷத்துக்கு மேலிருக்கும். என் வேலைக்கென்றே இலாக்கா மோட்டார் சைக்கிள் ஒன்று என் வசமிருந்தது

Sunday, 28 June 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 5

 

தன்னலமும் தன்மானமின்மையும்

பாவண்ணன்

 

கொங்கு வட்டார மக்களின் வாழ்க்கையைக் கருப்பொருளாகக் கொண்டு நாவல்களை எழுதிய முன்னோடி எழுத்தாளர் ஆர்.ஷண்முகசுந்தரம். வாசக கவனத்தை ஈர்ப்பதற்காக, மிகையுணர்ச்சி கொண்ட காட்சிகளையும் பரபரப்பான நிகழ்ச்சிகளையும் சேர்த்து எழுதுவதை ஒரு பழக்கமாகக் கொண்டிருந்த அன்றைய காலகட்டத்தில் உள்ளதை உள்ளபடி கூறும் கச்சிதமான காட்சிச்சித்திரங்களின் தொகுப்பாக வெளிவந்த ஆர்.ஷண்முகசுந்தரத்தின் படைப்புகள் இயல்புவாத எழுத்துமுறையின் முன்னுதாரணங்களாக விளங்கின. அவருடைய நாவல்களை ஒரு காலகட்டத்தின் ஆவணம் என்று குறிப்பிடலாம். அவருடைய நாவல்களை க.நா.சு. முதல் சுந்தர ராமசாமி வரை பல எழுத்தாளர்கள் முன்னிறுத்திப் பேசியதற்கு இதுவே காரணம்.