Home

Sunday, 19 July 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 8

 

இரண்டு வாசல்கள் 

துமிலனின் இயற்பெயர் என்.ராமசாமி. கும்பகோணத்தில் பிறந்தவர். தொடக்க காலத்தில் மாயவரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு, ஏதோ ஒரு தருணத்தில் தலைமை அதிகாரியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அந்த வேலையைத் துறந்து சென்னைக்குக் குடிபெயர்ந்து பத்திரிகைகளில் பணிபுரியத் தொடங்கினார். இயல்பாகவே நகைச்சுவை உணர்வுடைய அவர் தன் எழுத்தாற்றலால் தமிழின் முன்னோடி நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவராக மலர்ந்தார். பொதுவாசிப்புக்குரிய பல நூல்களையும் சிறார்களுக்கான கதைகளையும் நாவல்களையும் எழுதினார். என் பள்ளி நாட்களில் அவர் எழுதிய ’சி.ஐ.டி. சிறுவர்கள்’ என்கிற நாவலை விரும்பிப் படித்த நினைவுள்ளது.

அடுக்கு மாளிகை - சிறுகதை

 

நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ள இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணியபடி திரையை விலக்கிக்கொண்டு வெளியே வந்தான் குப்புசாமி. உண்மையில் பம்பரம் எடுப்பதற்காகத்தான் வெளியேயிருந்து உள்ளே வந்திருந்தான் அவன். அரைக்கணத்துக்குள் மனம் மாறிவிட்டது. பம்பரத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டான். 

Thursday, 16 July 2026

பூமணியின் ‘பொறுப்பு ‘ – சிரிப்பும் எரிச்சலும்

 

பதினோராம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டதுமே எங்கள் பள்ளிக் கூடத்தில் பரபரப்பு கூடிவிட்டது. தினந்தினமும் காலைக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் பள்ளிஇறுதியின் வெற்றிக்கும் வாழ்க்கைக்குமான தொடர்பைப் பலவிதமான எடுத்துக்காட்டுகளோடு சொல்லிக் கொண்டிருந்தார். எங்கள் பள்ளியின் முன்னால் மாணவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று, மேற்கு வங்காளத்துக்குப் போன கதை ஒவ்வொரு நாளும் எங்களுக்கு ஊக்கம் வழங்கும் பொருட்டுச் சொல்லப்பட்டது. 

மாற்றமும் மாற்றமின்மையும்

  

நாவலின் தொடக்கத்தில் நாடு சுதந்திரமடைந்த தகவலும் அதற்குப் பிறகு நடைபெற்ற முதல் தேர்தலின் தகவலும் பாத்திரங்களின் உரையாடல்களின் வழியாக முன்வைக்கப்படுகின்றன. அழகிரிப்பகடை தன் இரண்டுவயது மகளோடும் முதல் மனைவியோடும் துரைச்சாமிபுரத்திலிருந்து மணலு¡த்துக்குக் குடியேறிய காலகட்டம் அது. ஏறத்தாழ கால்நூற்றாண்டுக் காலம் நகர்ந்து செல்வதை வெவ்வேறு மாற்றங்களின் ஊடாக உணர்த்தி, இறுதியில் தாயைப் பறிகொடுத்துவிட்டு தனிமையில் வந்து நிற்கிற பேரப்பிள்ளை சுடலையை எடுத்து வளர்த்து பள்ளிக்குப் படிக்க அனுப்புகிற காலகட்டத்தோடு படைப்பு நிறைவெய்துகிறது.

Sunday, 12 July 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 7

 

மாபெரும் புதிர்


கடந்த நூற்றாண்டில் காந்தியக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர் வழியிலேயே தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட எண்ணற்ற இந்தியக்குடும்பங்களில் எழுத்தாளர் எம்.எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களுடைய குடும்பமும் ஒன்று. அவர் தந்தையாரான சீதாராமையா காந்தியத்தொண்டராக மட்டுமன்றி எழுத்தாளராகவும் வாழ்ந்தவர். ’கரட்டூர் ராமு’ என்னும் தலைப்பில் அவர் ஒரு நாவலை எழுதியுள்ளார். கல்யாணசுந்தரத்தின் மூத்த சகோதரர் ஆண்டிப்பட்டியில் காந்திய ஆசிரமத்தை நடத்தி கதருக்கும் தீண்டாமை ஒழிப்புக்கும் ஆதரவாகச் செயல்பட்டவர். வாழ்நாள் முழுதும் எளிய மக்களுக்குத் தொண்டாற்றியவர்.

நெருப்பு வளையங்கள் - சிறுகதை

 

நெருப்பு வளைத்துக்குள் ஒரு பறவையைப்போல புகுந்து தாவினாள் ராணி. கண்ணிமைக்கும் நேரத்துக்குள் இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்துக்கும் வலது பக்கத்திலிருந்து இடது பக்கத்துக்கும் தாவி செருகப்பட்ட அம்புபோல நின்றாள். முதல் சுற்று முடிந்தது. பார்வையாளர்களைப் பார்த்து இரண்டு கைகளையும் அசைத்தாள். 

Sunday, 5 July 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 6

 

சுதந்திர தாகம்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட காந்திய ஆளுமைகளுள் டி.எஸ்.சொக்கலிங்கமும் ஒருவர். அவர் ரெளலட் சட்ட எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், கள்ளுக்கடை மறியல், அன்னியத்துணி மறுப்பு என பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றார். பேனா மன்னர் என்றும் தென்காசிச்சிங்கம் என்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட அவர்   தென்காசியைச் சேர்ந்தவர்.  ஜனயுகம், பாரதம், , தமிழ்நாடு, தேசபக்தன், நவசக்தி உள்ளிட்ட பல இதழ்களில் பணியாற்றி தன் மொழியாளுமையை வளர்த்துக்கொண்டார்.