Home

Sunday, 29 March 2026

சரஸ்வதி ராம்நாத் - புதிய பார்வை இதழில் வெளிவந்த நேர்காணல்

 

மொழி பெயர்ப்புகளுக்குரிய

மரியாதையோ கவனிப்போ தமிழில் இல்லை

 

சந்திப்பு : பாவண்ணன்.

 

சரஸ்வதி ராம்நாத் அவர்கள் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக சிறந்த மொழி பெயர்ப்பாளராகத் தமிழ்ச் சூழலில் இயங்கி வருபவர் சரஸ்வதி ராம்நாத். மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

சங்குத்தோரணமும் முதுகுத்தழும்பும்

 

ஏற்கனவே இரு கவிதைத்தொகுதிகள் வழியாகத் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான சுஜாதா செல்வராஜ் தன் முதல் சிறுகதைத்தொகுதியை இப்போது வெளியிட்டிருக்கிறார். கடந்த பதினான்கு ஆண்டுகளாக அவர் தொடர்ச்சியாக சிறுகதைகளை எழுதியிருந்தாலும் அவை இப்போதுதான் தொகுக்கப்பட்டிருக்கின்றன.  

Sunday, 22 March 2026

சரஸ்வதி ராம்நாத் நூற்றாண்டு விழா

 

எழுத்தையே தன் தவமாகக் கொண்ட சரஸ்வதி ராம்நாத் அவர்கள், அமராவதி நதிக்கரையோரத்தில் உள்ள தாராபுரம் என்னும் ஊரில் 1925ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் ஏழாம் நாள் அன்று பிறந்தார். அவருடைய பெற்றோர் விஸ்வநாத ஐயர், நாமகிரி அம்மாள். மருத்துவராகப் பணி புரிந்து வந்த விஸ்வநாத ஐயர் காந்தியடிகளின் பாதையில் தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். அவர் காந்தியடிகள் மீது மிகுந்த ஈடுபாடும் பற்றும் கொண்டிருந்தார்.

பெங்களூரு உலகத் திரைப்படவிழா - 2026 (பகுதி 1)

 

பதினேழாவது உலகத் திரைப்பட விழா பெங்களூரு மாநகரில் 29.01.2026 முதல் 06.02.2026 வரை லூலு மால் என்னும் வணிக வளாகத் திரையரங்குகளில் நடைபெற்றது. முதல்நாள் தொடக்கவிழா மட்டுமே நிகழ்ந்தது. அடுத்தநாள் காலையிலிருந்து திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

பெங்களூரு உலகத் திரைப்படவிழா - 2026 - (பகுதி 2)

 

இன்னொரு குறிப்பிடத்தக்க படம் ’இட் வாஸ் ஜஸ்ட் அன் ஆக்சிடெண்ட்’. பெர்சிய மொழிப்படம். ஜாஃபர் பனாஹி என்னும் இயக்குநர் இயக்கிய படம். ஈரானிய அரசைத் தொடர்ந்து விமர்சிப்பவர் என்பதால் பல முறை சிறைத்தண்டனை அனுபவித்தவர் அவர்.

Sunday, 15 March 2026

வெளிச்சமும் இருளும்

 

பைபிளில் உள்ள பழைய ஏற்பாடு ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம் என முப்பத்தொன்பது பிரிவுகளைக் கொண்ட பெருந்தொகுதியாகும். ஒவ்வொரு பிரிவிலும் ஏராளமான உட்பிரிவுகள் உள்ளன. அவற்றில் அன்று வாழ்ந்த மனிதர்களின் வரலாறாக, ஏராளமான கதைகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையும் விரிந்துசெல்லும் போக்கில் மானுட வாழ்வில் தற்செயலாக தேவன் வெளிப்படும் தருணத்தை உணர்த்துகிறது. மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையில் அமைந்திருக்கும் உறவின் நுட்பத்தையும் ஆழத்தையும் வாசிப்பவர்களின் நெஞ்சில் அழுத்தமாகப் பதிவு செய்கின்றது.  

டி.எஸ்.சொக்கலிங்கம்: சொற்கோட்டம் இல்லாத மாமனிதர்

 

இந்தியாவில் நிரந்தரமாகத் தங்கி, வாழ்நாள் முழுதும் தாய்நாட்டுக்குச் சேவை செய்யவேண்டும் என்கிற எண்ணத்தோடு தென்னாப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு வந்த காந்தியடிகள் தம் மனைவி கஸ்தூர் பாவுடன் 09.01.1915 அன்று பம்பாயில் வந்திறங்கினார். பிறகு, நாட்டு நிலைமையை நேரில் கண்டறியும் பொருட்டு, கோகலேயின் ஆலோசனையை ஏற்று, குஜராத்திய வழியில் சட்டையும் தலைப்பாகையும் பஞ்சகச்சமாக வைத்துக் கட்டிய வேட்டியும் அணிந்துகொண்டு இந்தியாவெங்கும் சுற்றுப்பயணம் செய்தார்.