Home

Sunday 28 January 2024

பாதுகாப்பு - சிறுகதை

 

“வணக்கம் மிஸ்டர் ரங்கராஜ். தீபிகா அனிமல்ஸ் கேர் அசோரியேன்ஸிலிருந்து பேசுகிறேன். என் பெயர் சதாசிவராவ். நீங்கள்  ராவ் என்றே அழைக்கலாம். இரண்டு நிமிடங்களுக்கு முன்னால் நீங்கள் அனுப்பிய மின் அஞ்சலை இப்போது தான் படித்தேன். உங்களைப்போன்ற பெரிய மனிதர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதில் எங்கள் அசோசியேஷன்ஸ் மிகவும் கொள்கிறது”.

“இவ்வளவு சீக்கிரம் நீங்கள் தொடர்பு கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை மிஸ்டர் ராவ். தொடர்புத் தளத்திலேயே இருந்தீர்களா?”

வாசிப்பில் கண்டடைந்த வரிகள்

  

பொதுவாக, அம்பு பட்ட மான் என்ற சொல்லைக் கேட்டதும் உயிர்துறக்கும் நிலையில் வலியால் துடிக்கும் ஒரு மானின் சித்திரமே நம் மனத்தில் உடனடியாக எழுகிறது. அதுவே இயற்கை. தினசரி உரையாடல்களில் தம் துயரத்தை வெளிப்படுத்த நினைக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கணத்தில் இச்சொல்லைப் பயன்படுத்துவதை நாம் பார்க்கமுடியும். அதற்கு மாறாக, ஏக்கத்தாலும் தன்னிரக்கத்தாலும் இயலாமையாலும் மனம்கலங்கி நிற்கும் தவிப்புக்கும் அச்சொல் பொருத்தமாக இருக்கிறது. அப்படி ஒரு காட்சியமைப்பு முத்தொள்ளாயிரப் பாடலொன்றில் உள்ளது. அந்தப் பாடலை முன்வைத்து ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார் வளவ. துரையன். 

Sunday 21 January 2024

நாற்பது ரூபாய்

  

ஏரிக்கரையை ஒட்டி நடந்துகொண்டிருந்தேன். ஒரு திருப்பத்தில் நாற்பது ஐம்பது கொக்குகள் கூட்டமாக பறந்துவருவதைப் பார்த்ததும் நின்றுவிட்டேன். சீரான இடைவெளியுடன் அவை வானத்தில் மிதந்து வந்த காட்சியைக் கண்டதும் மனம் மயங்கியது. எதைநோக்கிச் செல்கின்றன என்பதை அறிந்துகொள்ளும் ஆவலில் அந்த இடத்திலேயே அசையாமல் நின்றேன்.

வேட்டை - சிறுகதை

 

கொலைகாரப் பட்டத்தோடு ஊருக்குள் திரும்பி வந்திருக்கிறேன். அந்தக் கொலையைப் பற்றி அதிகம் சொல்ல விருப்பமில்லை. எந்தச் சூழ்நிலையில் இந்தக் கொலையைச் செய்ய நான் -தூண்டப்பட்டேன் என்று யோசித்து முடிவெடுப்பவர்களுக்குத்தான் இது நியாயமாய்ப்படும். மற்றவர்கள் கண்களுக்கு இது கொலைதான். எத்தனையோ பறவைகளை ரத்தம் சிந்தக் கொன்றிருக்கிறேன். ஆனால், ஒரு வேட்டைக்காரனாகிய என் வாழ்க்கையில் எந்த மனித உயிரையும் கொல்லும் வெறியோ வேகமோ ஒருபோதும் இருந்ததில்லை என்பதுமட்டும் உண்மை.

Sunday 14 January 2024

பாலர் பாடல்கள்

 

இராகவேந்திரா நகரில் இரண்டாவது குறுக்குத்தெருவில் விட்டல்ராவின் வீடு இருக்கிறது. அந்தக் குறுக்குத்தெருவில் அதிக வீடுகள் இல்லை. இடது பக்கத்தில் ஆறு வீடுகள். வலது பக்கத்தில் ஆறு வீடுகள். வலது பக்க வரிசையில் முதல் வீடு இருக்குமிடம் மூலைமனை என்பதால், அதன் வாசல் குறுக்குத்தெருவைப் பார்த்ததாக அமையாமல் பிரதான தெருவைப் பார்த்தமாதிரி இருக்கும். அதற்கப்புறம் வீடு எதுவும் இல்லாத பெரிய வீட்டுமனை. அதற்கு அடுத்தபடி இருப்பதுதான் விட்டல்ராவின் வீடு.

அர்ப்பணிப்புணர்வின் ஆழம்

  

1988ஆம் ஆண்டு பொங்கலையொட்டி சென்னையில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். எழுத்தாளர் சங்கரநாராயணனோடு இரு நாட்கள் கண்காட்சிக்குள் சுற்றி ஏராளமான புத்தகங்களை வாங்கினேன். அன்னம் பதிப்பகத்தில் அப்போது நவகவிதை வரிசை என்னும் தலைப்பில் வித்தியாசமான வடிவத்தில் புதிய கவிஞர்களின் கவிதைத்தொகுதிகளை வெளியிட்டிருந்தார்கள். நான் எல்லாத் தொகுதிகளையும் எடுத்துக்கொண்டேன். நான் கவிதைத்தொகுதிகளை ஆர்வத்துடன் வாங்குவதைப் பார்த்துவிட்டு கடையில் இருந்தவர் “இந்தத் தொகுதியையும் படிச்சிப் பாருங்க. நல்லா இருக்கும்” என்று ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்.

Tuesday 9 January 2024

வேஷம் - சிறுகதை

வாசலில் நிழலாடியதை கணிப்பொறியின் திரை உணர்த்திவிட்டது. முதலாளி. திரும்பவில்லை நான். வேலையில் மனம் குவித்திருந்தேன். அடிக்கடி வந்து அவருக்குள்ளிருக்கும் பயயத்தை எனக்கும் தொற்றவைத்தபடி இருந்தார். பதட்டங்களாலேயே தவறுகள் கூடின. திருத்தங்களுக்கு மேலும் சில மணி நேரங்கள் தேவைப்பட்டன. இன்னும் அவர் அங்கேயே நின்றிருப்பதை உணர்ந்தேன். மரியாதையின் நிமித்தம் திரும்பி அவர் பக்கம் புன்னகை சிந்தினேன். சட்டென அவர் என்னை நெருங்கிவிட்டார். அமைதி குலைந்திருந்தன அவர் கண்கள். குளிர் அறையிலும் முகமெங்கும் வேர்வையின் பெருக்கு.

சுந்தரவரதன் : வினைத்திட்பமும் மனத்திட்பமும்

 

காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தை 01.08.1920 அன்று தொடங்கினார். பட்டங்களையும் கெளரவப்பதவிகளையும் துறந்துவிட வேண்டும், ஊதியம் பெறும் அரசாங்கப் பதவிகளையும் துறந்துவிடவேண்டும், காவல் துறையிலிருந்தும் இராணுவத் துறையிலிருந்தும் விலகவேண்டும், வரி கொடுப்பதை நிறுத்தவேண்டும் ஆகிய நான்கு முக்கியமான அம்சங்கள் அத்திட்டத்தில் இருந்தன.

Monday 1 January 2024

தனிப்பிறவி

  

மாலை நடைப்பயிற்சியை முடித்துவிட்டு மேற்கு வானில் கொஞ்சம் கொஞ்சமாக மறையும் சூரியனையும் சிவந்து மங்கலாகும் அடிவானத்தையும் வேடிக்கை பார்த்தபடி மரத்தடியில் உட்கார்ந்திருந்தேன். ”நமஸ்காரா சார்” என்றபடி கையை உயர்த்திக்கொண்டு எதிர்த்திசையிலிருந்து வந்த குல்கர்னி எனக்குப் பக்கத்தில் இருந்த வேர்ப்புடைப்பின் மீது உட்கார்ந்தார்.

கதைசொல்லத் தூண்டும் கதைகள்

  

சில ஆண்டுகளுக்கு முன்பு உறவினர் வீட்டுத் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். பலர் குடும்பத்துடன் வந்திருந்தனர். இரவு உணவு முடிந்த பிறகு எல்லோரும் மண்டபத்திலேயே தங்கிவிட்டோம்.

பெரியவர்கள் அனைவரும் ஒரு பக்கமாக அமர்ந்து பழைய கதைகளைப் பேசிக்கொண்டிருந்தனர். ஐந்து வயது முதல் பத்து வயது வரைக்குமான சிறுவர்களும் சிறுமிகளும் வேறொரு பக்கத்தில் கூடி விளையாடிக்கொண்டிருந்தனர். எல்லாமே அரங்குக்குள்ளே ஆட முடிந்த சின்னச்சின்ன விளையாட்டுகள். கண்ணாமூச்சி. கல்லா மண்ணா. சாபூத்ரி. உப்புமூட்டை.

பன்னீர்ப்பூக்கள் - புதிய தொகுதியின் முன்னுரை

 

 

இத்தொகுதியில் இருபத்தைந்து கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு பின்னணி இருக்கிறது. அதை ஏன் எழுதினேன் என்பதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. அந்தக் காரணத்தை இம்முன்னுரையில் பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.