Home

Monday 30 October 2023

அன்புள்ள தாத்தா - புத்தக அறிமுகம்

 

காந்தியடிகளின் மகன்களில் ஒருவரான இராமதாஸ் காந்தியின் மகன் கனு காந்தி. குழந்தைப்பருவத்திலிருந்தே காந்தியடிகளின் ஆசிரமத்திலேயே வளர்ந்துவந்தவர். வங்காளத்திலிருந்து ஆசிரமத்துக்கு வந்து குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆபா. (பிற்காலத்தில் கனுவை மணந்து ஆபா காந்தியானவர்) இவ்விருவருமே ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காந்தியடிகளை மிக நெருக்கத்தில் நின்று பார்க்கும் வாய்ப்புகளைப் பெற்றிருந்தனர். காந்தியடிகளின் முதுமைக்காலத்தில் அவருக்குத் துணையாக இருக்கும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைத்தது.

அரிதான தருணங்கள் - புத்தக அறிமுகம்

  

புறநானூற்றுப் பாடல்கள் ஒவ்வொன்றையும் ஒரு சிறிய ஓவியம் என்றே குறிப்பிடலாம். ஓவியத்துக்கே உரிய தேர்ந்தெடுத்த அரிய காட்சிகளை அழகான சொல்லோவியங்களாக உருமாற்றி வைத்திருக்கிறார்கள் கவிஞர்கள். உறையூர் தாமோதரனார் என்பவரின் பாடலொன்றை நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.  ஒன்றுக்குள் ஒன்றென இரு சித்திரங்களைக் கொண்ட பாடல் அது. ஒரு பெரிய சித்திரம். அதற்குள் ஒரு சின்னஞ்சிறு சித்திரம். ஓர் அண்மைக்காட்சி. ஒரு சேய்மைக்காட்சி.

Sunday 22 October 2023

மழைக்கதைகளும் மழைப்பாடல்களும் - கட்டுரை

 

 பத்து நாட்களுக்கு முன்னால் தொடங்கிய மழை பெங்களூரு முழுக்க விட்டுவிட்டு பொழிந்தபடியே இருந்தது. தொலைபேசியில் அழைத்து உரையாடுகிறவர்கள் அனைவரும் மழையைப்பற்றிய கேள்வி பதிலோடுதான் தொடங்கினார்கள். பலர் உற்சாகமாக உணர்வதாகச் சொன்னார்கள். சிலர் சலிப்பாக இருப்பதாகத் தெரிவித்தார்கள்.

சுத்தானந்த பாரதியார் : சோதனையும் சாதனையும்

 

 

இந்தியாவை ஆட்சி செய்துவந்த ஆங்கில அரசு 1919ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு புதிய குற்றவியல் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. ரெளலட் என்பவருடைய தலைமையின் கீழ அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்த சட்டம் என்பதால், அது ரெளலட் சட்டம் என்று அழைக்கப்பட்டது. யாரை வேண்டுமானாலும் சந்தேகத்தின் பேரில் விசாரிப்பதற்கும் சிறையில் அடைப்பதற்குமான அதிகாரங்களை ரெளலட் சட்டம் அரசு அதிகாரிகளுக்கு வழங்கியது. இச்சட்டத்தின் கடுமையை எதிர்த்து காந்தியடிகள் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்.


Sunday 15 October 2023

பொறுப்பும் பொறுப்பின்மையும் - கட்டுரை

 

ராஜேந்திரன் என்னுடைய நீண்ட நாள் நண்பர். ஐம்பது வயதைக் கடந்த நிலையில் திடீரென அவருடைய உடல்நிலை குன்றியது. பல பரிசோதனைகளுக்குப் பிறகு அவருடைய சிறுநீரகம் முழு ஆற்றலுடன் செயல்படவில்லை என்று மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். வாரத்துக்கு ஒருமுறை ரத்தத்தைத் தூய்மைப்படுத்தும் வகையில் டயாலஸிஸ் செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துவிட்டனர்.

அறிவியல் கதைகளும் அறிவியல் உண்மைகளும் - முன்னுரை

   

ஒரு காலகட்டம் வரைக்கும் நம்முடைய வாழ்க்கை நம்பிக்கைகளால் மட்டுமே நிறைந்திருந்தது. நல்லதோ, கெட்டதோ, அவையே நம் தினசரி நடவடிக்கைகளையும் கருத்துகளையும் தீர்மானிக்கும்  சக்திகளாக இருந்தன. இந்த உலகம் தட்டையானது. சூரியன், நிலவு, விண்மீன்கள் எல்லாம் ஒரு நிலையான இடத்தில் நின்று வெளிச்சத்தையும் இருட்டையும் வழங்குகின்றன. இப்படி ஏராளமான நம்பிக்கைகள் நம்மைச் சூழ்ந்திருந்தன.

Sunday 8 October 2023

வெளிச்சம் - சிறுகதை


‘தமிழ்தான தம்பி நீங்க . . .’

‘ரொம்ப நல்லதா போச்சி. நாப்பத்தஞ்சி வருஷமா இந்த ஊர்ல இருக்கம். இன்னம் இந்த கன்னட பாஷ  நாக்குல படியல. அடிவயித்லேந்து மூச்சுக் கட்டிப் பேச ரொம்ப சிரமம். அப்டி இப்டி கடகண்ணிக்கு போனா ரெண்டு வார்த்த பேசுவன். அவ்ளோதான் தெரியும். தொடச்சியா தமிழ் மாதிரி வராது. அதனாலயே எங்க போனாலும் தமிழ்ல பேச ஆரம்பிச்சிடுவன். ஆனா கன்னடத்தில யாரு பேசனாலும் பூரா புரிஞ்சுக்குவன்.’

லால் பகதூர் சாஸ்திரி : ஜெய் ஜவான் ஜெய் கிஸான்

 

கல்கத்தாவில் 04.09.1920 அன்று நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில்  காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்துக்கான தீர்மானத்தைக் கொண்டுவந்து உரையாற்றினார். அந்த உரையில், ஜாலியன்வாலாபாக்கில் நடைபெற்ற படுகொலைக்கு எல்லா வகையிலும் மூல காரணமாக இருந்த ஜெனரல் டயர் மீது பெயருக்கு ஒரு விசாரணை நடைபெற்ற போதும் அவருக்கு எவ்விதமான தண்டனையும் பிரிட்டன் அரசு வழங்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினார்.  இப்போக்கு பிரிட்டன் அரசுக்கும் இந்திய வைசிராய்க்கும் பொதுமக்களைப் பாதுகாப்பதில் எவ்விதமான அக்கறையும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது என எடுத்துரைத்தார். இதுபோன்ற நிகழ்ச்சிகள் இனியொரு முறை நிகழாமல் இந்திய மக்களைப் பாதுகாப்பதற்கு சுயராஜ்ஜியமே சிறந்த தீர்வென்றும் அறவழியிலான ஒத்துழையாமை இயக்கத்தின் வழியாக சுயராஜ்ஜியத்தை அடைய இந்திய மக்கள் அனைவரும் இணைந்து போரிடவேண்டும் என்றும் தெரிவித்தார்.

Sunday 1 October 2023

விட்டல்ராவின் உரையாடல்கள் - சில நினைவுப்பதிவுகள் - புதிய நூலின் முன்னுரை

 

ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று காலையில் ஓர் இசைக்கலைஞர் எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள வாதாமரத்துக்கு அருகில் வந்து நின்றுகொண்டு அலைபாயுதே பாடலை தன் குழல்வழியாக பாடியபடி சிறிது நேரம் நிற்பார். அதை முடித்ததும் ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே பாடலை இசைக்கத் தொடங்குவார். அப்படியே நடந்துபோய் அடுத்த மரத்தடியில் நின்றுகொண்டு நலம்தானா, உடலும் உள்ளமும் நலம்தானா பாடலில் லயித்துவிடுவார். அவருடைய குழலிசை ஒரு மெல்லிய காற்றைப்போல அங்கேயே சுழலும். அவர் எங்கள் தெருவைக் கடந்து சென்ற பிறகும் கூட அவருடைய இசை அந்த வாதாமரத்தடியிலேயே மித்ந்துகொண்டிருப்பதுபோலத் தோன்றும். கனவிலிருந்து அந்த இசை கேட்பதுபோல இருக்கும்.

தப்புக்கொட்டை - கட்டுரை

 

தயிர் விற்பனையை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பும் மதிய வேளையில் ஓட்டேரிப்பாளையத்து சின்னம்மா தினமும் எங்கள் வீட்டுக்கு வந்து திண்ணையில் கொஞ்ச நேரம் உட்கார்வது வழக்கம். மதியச் சாப்பாட்டுக்காக பள்ளிக்கூடத்திலிருந்து அதே சமயத்தில்தான் நானும் வீட்டுக்கு வருவேன்.