Home

Tuesday 26 January 2021

அப்பாவின் குரல் - கட்டுரை

 

இந்திரா நகரின் பேரழகே அதன் செறிவான வடிவமைப்புதான். ஒவ்வொரு குறுக்குத்தெருவும் முடியும் இடத்தில் ஒவ்வொரு பூங்காவைப் பார்க்கலாம். பல நேரங்களில் எந்தத் தெரு, எந்தப் பூங்கா என்பதே குழப்பமாக இருக்கும். அந்த அளவுக்கு ஒவ்வொன்றும் ஒரே மாதிரியான தோற்றத்துடன் காட்சியளிக்கும். எல்லாப் பூங்காக்களும் குறைந்தபட்சமாக இருபதாயிரம் சதுர அடியிலிருந்து அதிகபட்சமாக நாற்பதாயிரம் சதுர அடி வரைக்கும் நீண்டு விரிந்தவை.  பதின்மூன்றாம் குறுக்குத்தெருக்கும் பதினைந்தாம் குறுக்குத்தெருக்கும் இடையில் மூன்று பூங்காக்கள் உண்டு.  அவற்றில் முதலில் உருவானது பிரியதர்ஷினி அடுக்ககத்துக்கு எதிரில் உள்ள பூங்கா. எழுபதுகளின் இறுதியில் உருவானதாக பேசிக்கொள்வார்கள். நான் எண்பதுகளின் இறுதியில் வந்தபோது அந்தப் பூங்கா ஒரு சின்ன லால்பாக் போல எனக்குக் காட்சியளித்தது.

திசை தேடும் பறவை - சிறுகதை


தாத்தாவின் முடிவு குறித்து யாருக்கும் திருப்தி இல்லை. அபரிமிதமான சோர்வும் துக்கமும் கொண்டிருந்தார் அப்பா. தத்தளிக்கும் உணர்ச்சிகளை அவர் முகம் அப்பட்டமாய் வெளிக்காட்டியது. கண்டமங்கலம் சித்தப்பாவும், பாக்கியம் அத்தையும் எதுவும் பேசமுடியவில்லை. புடவை முந்தானையால் வாயை மூடிக்கொண்டு, கதவுக்குப் பின்பக்கம் நின்றுகொண்டு அம்மா அழுதாள். தாத்தாவோ மகிழ்ச்சி, துக்கம் எதையும் காட்டிக்கொள்ளாத முகத்துடன் இருந்தார். புரிதல்களுக்கு அப்பாற்பட்ட ஒரு மர்மச் சித்திரமாய் இருந்தது அவர் முக உணர்ச்சி. பொங்கல், தீபாவளி சமயங்களில் காலில் விழுந்து வணங்கி எழுகிற மாதிரி அன்றைய தினம் எல்லாரும் விழுந்து கும்பிட்டோம். எல்லோரின் தலையையும் ஆதரவுடன் தொட்டு ஆசிர்வாதம் செய்துவிட்டு தாத்தா விடை பெற்றுக்கொண்டார்.

Saturday 16 January 2021

சாயா - சிறுகதை

 பார்ப்பதற்குச் சாயா மாதிரிதான் தெரிந்தது. வேறு யாராவது இருக்கக்கூடுமோ என்றும் சந்தேகம். அம்பாரமாய் இளநீர்க்காய்களைக் குவித்துவைத்துக்கொண்டு பின்புறம் மாத்திரம் தெரிய நின்றுகொண்டிருந்தவளைச் சட்டென்று அடையாளம் கண்டுபிடிக்கச் சிரமப்பட்டேன். சுந்தரிக்குக் காட்டியதும் அவளுக்கும் சந்தேகம் தட்டியது. மனசுக்குள் ஒரு மாதிரியான ஆவல் உந்த, நிற்கிற பஸ்ஸை விட்டு இறங்கிக் கிடுகிடுவென்று பக்கத்தில் போய்ப் பார்த்தால், சாயாதான் அவள்.

தாத்தாவும் பேரனும் - கட்டுரை

 

அன்று ஞாயிறு. காலையில் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு பாதையோரமாக சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தேன். கம்பிவேலிக்கு அப்பால் இரண்டு ஆள் உயரத்துக்கு புதரென மண்டியிருந்த செடிகொடிகளின் மீது படர்ந்து நீண்டிருக்கும் பெயர் தெரியாத கொடியில் மேலும் கீழும் பூத்திருக்கும் ஊதாநிறப்பூக்கள் கண்ணைக் கவர்ந்தன. கண்ணுக்கெட்டிய தொலைவு வரைக்கும் ஏதோ திருவிழாவுக்குக் கட்டிய சிறுவிளக்குத் தோரணமென அந்தப் பூவரிசை நீண்டிருந்தது.

சத்தியமூர்த்தி : சோர்விலாத சொலல்வல்லன் - கட்டுரை

 

1914ஆம் ஆண்டில் தொடங்கிய முதலாம் உலகப்போரில் ஆங்கிலேய அரசின் வேண்டுகோளுக்கு இணங்கி ஏறத்தாழ பதினைந்து லட்சம் இந்தியர்கள் பங்கேற்றனர். அவர்களில் 74000 பேர் மரணமடைந்தனர்.  மக்களின் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்ள,  இந்தியர்களுக்கு அரசியல் சுயாட்சியை வழங்கும் திட்டத்தை அரசு மேற்கொண்டது. அதற்காக தலைமைச்செயலாளர் மாண்டேகுவும் வைசிராயான செம்ஸ்போர்டும் இணைந்து சுதந்திரப்போராட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து புபேந்திரநாத் போஸ், ரிச்சர்டு ஹோலி ஹட்சின்சன், வில்லியம் டியூக், சார்லஸ் வென்றி ராபர்ட் ஆகியோருடன் கலந்துரையாடி 1917இல் அறிக்கையொன்றைத் தயாரித்து ஒப்புதலுக்காக இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தனர். வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய சுயாட்சியை வலியுறுத்தும் அந்த அறிக்கையை காந்தியடிகளும் பிற முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.

Monday 4 January 2021

அஞ்சலி - சிறுகதை


நேற்றுவரை நம்முடன் வாழ்ந்து இன்று அமரராகிப் போன பரிமளாதேவியைப்பற்றிச் சொல்ல ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு என்னிடம் விஷயங்கள் உண்டு. அவை அனைத்தையும் இந்த அஞ்சலிக் கூட்டத்தில் முன்வைப்பது பொருத்தமான செயலாக இருக்காது. அதே சமயத்தில் அவரைப் பற்றிய கச்சிதமான சித்திரத்தையாவது உங்கள் முன் தீட்டிக் காட்டாவிடில் பரிமளாதேவிக்குச் செலுத்தும் எனது அஞ்சலிப் பேச்சு முழுமையான ஒன்றாக அமைய வாய்ப்பில்லை.

நெருப்பு வளையங்கள் - சிறுகதை

 

நெருப்பு வளைத்துக்குள் ஒரு பறவையைப்போல புகுந்து தாவினாள் ராணி. கண்ணிமைக்கும் நேரத்துக்குள் இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்துக்கும் வலது பக்கத்திலிருந்து இடது பக்கத்துக்கும் தாவி செருகப்பட்ட அம்புபோல நின்றாள். முதல் சுற்று முடிந்தது. பார்வையாளர்களைப் பார்த்து இரண்டு கைகளையும் அசைத்தாள். பதற்றமாக இருந்தது. வளையத்தைச் சுற்றி கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு கண்களைக் கூச வைத்தது. ஒவ்வொரு முறையும் அது தன்னை விழுங்கத் தயாராக வாயைத் திறந்து காத்திருப்பதுபோலவும் அதன் பற்களில் விழாமல் தப்பித்து வருவதுபோலவும் ஒருகணம் அவளுக்குத் தோன்றியது. சட்டென அவள் மனத்தில் கசந்துபோன தன் இல்லற வாழ்க்கையின் சித்திரம் எழுந்தது. ஒரு வகையில் அதுவும் விழுங்கக் காத்திருந்த நெருப்பு வளையம்தான். விழாமல் மீண்ட விதம் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் விடாமல் கைதட்டிக் கொண்டிருந்தார்கள்.