Home

Sunday, 5 July 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 6

 

சுதந்திர தாகம்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட காந்திய ஆளுமைகளுள் டி.எஸ்.சொக்கலிங்கமும் ஒருவர். அவர் ரெளலட் சட்ட எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், கள்ளுக்கடை மறியல், அன்னியத்துணி மறுப்பு என பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றார். பேனா மன்னர் என்றும் தென்காசிச்சிங்கம் என்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட அவர்   தென்காசியைச் சேர்ந்தவர்.  ஜனயுகம், பாரதம், , தமிழ்நாடு, தேசபக்தன், நவசக்தி உள்ளிட்ட பல இதழ்களில் பணியாற்றி தன் மொழியாளுமையை வளர்த்துக்கொண்டார்.

வழி - சிறுகதை

 

வனாந்திரமான இடத்தில் பெரியபெரிய புகை போக்கிகள் முளைத்த கல் கட்டிடத்தின் கம்பீரம் தெருவில் போகும் யாரையும் திரும்ப வைத்துவிடும். இதே பாதையில் வேலை சம்பந்தமாய் நான் அலைய ஆரம்பித்து ஒரு வருஷத்துக்கு மேலிருக்கும். என் வேலைக்கென்றே இலாக்கா மோட்டார் சைக்கிள் ஒன்று என் வசமிருந்தது

Sunday, 28 June 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 5

 

தன்னலமும் தன்மானமின்மையும்

பாவண்ணன்

 

கொங்கு வட்டார மக்களின் வாழ்க்கையைக் கருப்பொருளாகக் கொண்டு நாவல்களை எழுதிய முன்னோடி எழுத்தாளர் ஆர்.ஷண்முகசுந்தரம். வாசக கவனத்தை ஈர்ப்பதற்காக, மிகையுணர்ச்சி கொண்ட காட்சிகளையும் பரபரப்பான நிகழ்ச்சிகளையும் சேர்த்து எழுதுவதை ஒரு பழக்கமாகக் கொண்டிருந்த அன்றைய காலகட்டத்தில் உள்ளதை உள்ளபடி கூறும் கச்சிதமான காட்சிச்சித்திரங்களின் தொகுப்பாக வெளிவந்த ஆர்.ஷண்முகசுந்தரத்தின் படைப்புகள் இயல்புவாத எழுத்துமுறையின் முன்னுதாரணங்களாக விளங்கின. அவருடைய நாவல்களை ஒரு காலகட்டத்தின் ஆவணம் என்று குறிப்பிடலாம். அவருடைய நாவல்களை க.நா.சு. முதல் சுந்தர ராமசாமி வரை பல எழுத்தாளர்கள் முன்னிறுத்திப் பேசியதற்கு இதுவே காரணம்.

இந்து தமிழ் இணைய இதழ் நேர்காணல்

 தீராத துன்பத்தை எழுதிக் கடக்கலாம் –

கேள்விகள் : அருள்செல்வன்

 

தமிழின் அத்தனை வகைமைகளிலும் எழுதி வருபவர் எழுத்தாளர் பாவன்னன்1982இல் எழுத ஆரம்பித்த இவர், இரண்டே ஆண்டுகளில் இலக்கியச்சிந்தனை விருது பெற்றவர். இதுவரை நூறு நூல்களுக்கு மேல் எழுதியுல்ல இவர் தமிழகம் மற்றும் புதுவை மாநில அரசுகள், சாகித்திய அகாதமி, கதா, இயல், விளக்கு, சூரிய விருதுகள் என ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். இனி பாவண்ணனுடன் பேசலாம்.

Sunday, 21 June 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 4

 

கடந்து செல்லும் கலை

கா.ஸ்ரீ.ஸ்ரீ. என அழைக்கப்படும் காஞ்சிபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீநிவாசாசாரியார் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிருந்தாவனத்தில் 1913இல் பிறந்தார். வேத பண்டிதரான அவருடைய தந்தையாரே அவருக்கு  சமஸ்கிருதம், இந்தி, வங்கம், தமிழ் ஆகிய மொழிகளைக் கற்பித்தார். பணியின் நிமித்தமாக அவருடைய தந்தையார் பம்பாய்க்கு அருகில் கல்யாணுக்குக் குடியேறியபோது, அங்கிருந்த பள்ளியில் சேர்ந்து மராத்தியும் ஆங்கிலமும் கற்றார். ஏழாம் வகுப்பில் படிக்கும்போது காதில் ஏற்பட்ட ஒரு பிரச்சினைக்கு மருத்துவம் செய்துகொள்வதற்காக அவருடைய குடும்பம் சென்னைக்குக் குடிபெயரவேண்டிய நிலை ஏற்பட்டதால், சென்னையில் இருந்த பள்ளியில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார்.

ஆவணமாகும் நினைவுக்குறிப்புகள்

 

கல்கத்தாவில் 15.08.1872 அன்று பிறந்த அரவிந்தர் ஆங்கிலேயர் காலத்து ஐ.சி.எஸ். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றதால் உதவித்தொகை பெற்று இங்கிலாந்தைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காகச் சென்றார். படிப்புக்காலத்தின் இறுதியில் நடைபெற்ற ஐ.சி.எஸ். தேர்வில் தேறியபோதும் குதிரையேற்றத் தேர்வில் பங்கேற்காமல் அவர் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டார்.

Thursday, 18 June 2026

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் : எல்லாம் செயல்கூடும்


இந்தி பிரச்சார சபையின் வெள்ளிவிழா சென்னையில் 25.01.1946 அன்று கொண்டாடப்பட்டது. அந்த விழாவுக்கு தலைமை தாங்கி உரையாற்றுவதற்காக காந்தியடிகள் வந்திருந்தார். அன்றைய கூட்டத்தில் இந்தியா போன்ற பெரியதொரு நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் தாய்மொழிக்கல்வியிலும் இணைப்புமொழிக்கல்வியிலும் தேர்ச்சி பெறுவது மிகமுக்கியம் என்பதை காந்தியடிகள் வலியுறுத்திப் பேசினார். நான்கு நாட்கள் கழித்து அதே இடத்தில் நயி தலீம் பட்டமளிப்புவிழா நடைபெற்றது. ஆதாரக்கல்வித் திட்டத்தின் கீழ் ஆசிரியர் பயிற்சியை முடித்த இருபத்தாறு பேர்களுக்கு காந்தியடிகளே சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை நிகழ்த்தினார். அவருடைய உடல்நிலை அப்போது மிகவும் நலிவுற்ற நிலையில் இருந்தது. ஆயினும் அதைப் பொருட்படுத்தாமல்  தொடர்ந்து மேலும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றிய காந்தியடிகள் 02.02.1946 அன்று மதுரைக்கு வந்து சேர்ந்தார்.

Wednesday, 17 June 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 3

 

அரிய மனிதர்கள்


பெரியசாமித் தூரன் என்கிற பெ.தூரன் மிகப்பெரிய தமிழறிஞர். பாரதி ஆய்வாளர்களில் முதன்மையானவர். தம் பாடல்கள் வழியாக தமிழிசை இயக்கம் வேரூன்றக் காரணமாக இருந்தவர். அதற்காக எண்ணற்ற இசைப்பாடல்களை அவர் இயற்றினார்.  ‘முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்’ என கோவில்தோறும் ஒலிக்கும் பாடலை எழுதியவர் அவர்தான்.

சிறுகதை வளர்ச்சியின் தடங்கள்

 

நவீன இலக்கிய முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவரான சி.சு.செல்லப்பா மணிக்கொடி இதழின் இரண்டாவது காலகட்டத்தில் எழுதத் தொடங்கியவர். அவர் எழுதிய வாடிவாசல் நாவல் இன்றளவும் வாசகர்களால் விரும்பிப் படிக்கக்கூடிய படைப்பாக உள்ளது. அவர் எழுதிய  சிறுகதைகள் இதுவரை ஒன்பது தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ஒரு படைப்பைப் பல கோணங்களிலிருந்து அணுகி ஆய்வு செய்யும் அலசல் விமர்சன மரபை அவரே தொடங்கிவைத்தார். தெளிவான கோட்பாட்டுப் புரிதலோடு எழுத்து என்னும் சிற்றிதழைத் தொடங்கி பல இன்னல்களுக்கிடையில் பல்லாண்டு காலம் தொடர்ந்து நடத்தி விமர்சனத்துக்கான ஒரு தளத்தை உருவாக்கினார். தமிழில் புதுக்கவிதை உருவாகி நிலைபெற்றதற்கு எழுத்து இதழ் நல்லதொரு தளமாக விளங்கியது.

Sunday, 7 June 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 2

 

வேடிக்கை பார்ப்பவரின் பார்வை

 

எழுத்தாளர் எஸ்.வி.வி.யின் முழுமையான பெயர் செவிலிமேடு வேணுகோபாலாச்சாரியார் விஜயராகவாச்சாரியார். திருவண்ணாமலையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர்.  வழக்கு நிமித்தமாக ஒவ்வொரு நாளும் பலவிதமான மனிதர்களையும் சந்தித்து உரையாடிய அனுபவங்களே அவரை ஓர் எழுத்தாளராக வடிவமைத்தன.

கும்பகோணத்தின் சுவடுகள்

  

இந்திய விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் நவீனத் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு மணிக்கொடி இதழ் ஆற்றிய பங்கு மகத்தானது. 1933ஆம் ஆண்டு முதல் 1950 வரை மூன்று காலகட்டங்களிலாக வெளிவந்த  அவ்விதழில் இரு தலைமுறை எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். அரசியல் நோக்கத்துடன் வார இதழாகத் தொடங்கப்பட்டு பின்னர் இலக்கியத்துக்கான மாத இதழாக மாற்றமடைந்தது. மணிக்கொடி காலத்தை தமிழ்ச்சிறுகதைகளின் மறுமலர்ச்சிக்காலம் என்று சொல்லலாம். மணிக்கொடி இதழை முன்வைத்து உருவான இலக்கிய ஆளுமைகள் ‘மணிக்கொடி எழுத்தாளர்கள்’ என்று அழைக்கப்பட்டனர்.

Sunday, 31 May 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 1

 

இசையின் அழைப்பு

 

‘கன்னட மொழியின் ஆஸ்தி’ என்றும் ’சிறுகதைகளின் ஜனகர்’ என்றும்  கர்நாடகத்தைச் சேர்ந்த வாசகர்களால் பெருமையுடன் அழைக்கப்படும் எழுத்தாளர் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார்,  இந்திய அளவில் அனைவரும் அறிந்த மிகமுக்கியமான எழுத்தாளர். இயற்பெயரிலும் ஸ்ரீனிவாச என்கிற புனைபெயரிலும் எண்ணற்ற படைப்புகளை எழுதியிருக்கிறார். இந்திய அளவில் முதல்வரிசைப் படைப்பாளிகளில் ஒருவராக இடம்பெறத்தக்க முக்கியமான எழுத்தாளர். ஞானபீட விருது பெற்றவர்.

எதிர்பாராத அர்ப்பணிப்புணர்வுடன் கூடிய உழைப்பு - நேர்காணல்

 


கேள்வி: குடும்பத்தில் உங்களுக்கு இலக்கிய ஆர்வத்தை உருவாக்கியவர் யார்?

 

பதில்: எனக்கு வாசிப்பின் மீது ஆர்வத்தை ஊட்டியவர்கள் என்னுடைய பள்ளிக்கூட ஆசிரியர்கள். ஒவ்வொரு வகுப்பிலும் எனக்கு ஊக்கமளிக்கும் நல்ல ஆசிரியர்கள் அமைந்தார்கள். நான் பள்ளிக்கூடத்தில் படிக்கிற சமயத்தில் ஒவ்வொரு வாரமும் நூல்வாசிப்பு என்றொரு பாடவேளை இருக்கும். அப்போது, எங்கள் பள்ளி நூலகர் நூலகத்திலிருந்து புத்தகங்களைக் கொண்டுவந்து ஒவ்வொரு மாணவரிடமும் கொடுத்து படிக்கச் செய்வார். நாற்பத்தைந்து மணித்துளிகள் கொண்ட பாடவேளையில் அரைமணி நேரம் வாசிப்புக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். 

Sunday, 24 May 2026

புதிர்களும் விடைகளும்

 

ஒரு கணத்தில் வாழ்க்கைப்பரப்பில் மீது மின்னி மறையும் ஒளிச்சுடரை அல்லது கவிந்து மறையும் இருளை நோக்கி வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் வடிவமாக சிறுகதை உலகெங்கும் எழுதப்பட்டு வருகிறது. அள்ளியள்ளி எடுத்தாலும் வற்றாத அமுதசுரபியாக சிறுகதை வடிவம் கோடிக்கணக்கான கணங்களை நமக்கு வழங்கியுள்ளது.  இத்தனை ஆண்டு காலம் எழுதிய பின்னும் நமக்குத் தெரியாத ஒளிப்புள்ளிகளும் இருட்புள்ளிகளும் இந்த வாழ்வில் நிறைந்திருக்கின்றன என்பதை புதிதாக வெளிவரும் ஒவ்வொரு சிறுகதைத்தொகுதியும் நமக்கு உணர்த்தியபடி இருக்கிறது.

புரைதீர்ந்த உண்மை

  

பெங்களூர் தமிழ்ச்சங்கம் அல்சூர் ஏரியை ஒட்டி ஒரு பெரிய கட்டிடத்தில் இயங்கிவருகிறது. வாரம்தோறும் அங்கு இலக்கிய வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன. இலக்கியத்தில் ஆழ்ந்த பயிற்சியுள்ள ஆசிரியர்கள் அங்கு வந்து வகுப்பெடுத்துவிட்டுச் செல்வார்கள். அந்த வகுப்புக்கு ஆர்வத்துடன் தொடர்ந்து செல்பவர்கள் பலர். என் நண்பரும் அவர்களில் ஒருவர். கடந்த ஞாயிறு அன்று காலையில் வகுப்பை முடித்துக்கொண்டு என்னைச் சந்திப்பதற்கு வந்திருந்தார்.

Sunday, 17 May 2026

நேற்று வாழ்ந்தவர்கள் - குறுநாவல் - பகுதி 1

  

குளிப்பாட்டி முடித்ததும் குதிரையைத் தட்டி அழைத்துக்கொண்டு கரையேறினான் பார்த்தசாரதி.

பார்த்தசாரதிக்கு முன்னால் இருள் பிரியாத ஆகாயம் விரிந்து கிடந்தது. தூரத்தில் கறுப்புச்சித்திரம் மாதிரி ஆலமரங்களும் ரயில்வே ஸ்டேஷனும். ஏரிக்கரையில் இருந்து பஞ்சாயத்து போர்டு தெருவுக்குள் இறங்கும் ஒற்றையடிப்பாதைகூட எழுதி அழித்த மங்கலான கோடு மாதிரி தெரிந்தது. கால் இருளில் பால்மாதிரி ஒரு வர்ணத்தில் குதிரையுடன் பார்த்தசாரதி நடப்பது புராணகாலத்து ராஜகுமாரன் நடப்பதுபோல இருந்தது.

நேற்று வாழ்ந்தவர்கள் - குறுநாவல் - பகுதி - 2

 

( தொடர்ச்சி.......)

நீ சொல்ற வெலயல்லாம் கேட்டப்பறம் இனிமே அதான் செய்யணும்.”

யோவ், எதுக்குய்யா வளவளன்னு பேசிக்னு. சீக்கிரமா ஒரு வெலயச் சொல்லி எடுத்துக்கினு போயா.”

யேன் போவலன்னா போலீஸ்ல சொல்லிருவியா?”

நேற்று வாழ்ந்தவர்கள் - குறுநாவல் - பகுதி 3

(தொடர்ச்சி......) 


த்ச்...எல்லாம் எனக்குத் தெரியும்பா. நா சொல்றத கேளு.”

மாமா.”

அவளால ஒனக்கு சதாகாலமும் இம்சயாத்தான் போச்சே தவிர நிம்மதியே இல்லை. வாழ்நாளு பூராவும் ஒன்ன நிம்மதியில்லாம  அடிச்சிட்டன். அப்பா பார்த்தசாரதி தயவு செஞ்சி என்ன மன்னிச்சிடுப்பா.”

மாமா.”

Monday, 11 May 2026

தனுசு - குறுநாவல் - பகுதி 1

  

கடைசியில் தனுசு அண்ணனை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுவது தான் நல்லது என்று முடிவாகி ராமு, சுந்தரம் சித்தப்பா, கமலக்கண்ணன் மாமா எல்லாரும் ஒரு டாக்சியில் ஏற்றிக் கொண்டு போய் படாதபாடு பட்டு சேர்த்தபிறகு திரும்பினார்கள்

தனுசு - குறுநாவல் - பகுதி 2

ப்ளாக் நெம்பர் சொல்லி பேஷன்ட் பெயர் சரிபார்த்து அறை அடையாளம் தெரிந்து கொண்டு நடந்தவனுக்கு எதிரில் குறுக்கும் நெடுக்குமாய் அலையும் பைத்தியங்களைப் பார்க்க மேலும்மேலும் பயத்தில் மனம் நடுங்கியது ராமுவுக்கு. சட்டென்று திரும்பிப் போய்விடலாமா என்று தோன்றியது. மனசின் நடுக்கத்தைச் சமாளிக்க எங்கேயும் பார்க்காமல் தரையையே பார்த்து நடந்தான். குறிப்பிட்ட அடையாளமிட்ட அறையில் தனுசு அண்ணன் மூலையில் போர்வைச் சுருணைக்குள் கிடந்தான். ராமுவைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்தான்.

Sunday, 3 May 2026

நலிவு - சிறுகதை

  

அருமாத்தபுரம் ரயில்வே கேட்டுக்குப் பக்கத்தில் பாண்டிச்சேரியைப் பார்க்கிற பச்சை வர்ண கட்டிடத்தில்தான் இருதயமேரி கான்வென்ட் இருக்கிறது. போகன்வில்லாவும் நந்தியாவட்டையும் வளர்ந்திருக்கிற வாசலுக்கு மேல் சின்ன பெயர்ப்பலகை. பஸ்ஸில் போகிற எந்தப் பிரயாணியும் படிக்கிறமாதிரி பளிச்சென்றுதான் எழுதி இருக்கிறது. ஆனால் பஸ்காரன் மாத்திரம் நிறுத்துவதில்லை. கெஞ்சிப் பார்த்தால்கூட ரொம்ப தூரம் தள்ளி சுல்தான்பேட்டையில்தான்  நிற்கிறது. முனகியபடியே  லூசி  இறங்குகிறாள்.

வாசிப்பு இயக்கத்தின் கொடை

 

கும்பகோணத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களிடையில் அரசு தொடங்கிய காவேரி வாசிப்பு இயக்கம் அழுத்தமான தடத்தைப் பதித்து வருகிறது. பாடநூல்களுக்கு அப்பால் பிற இலக்கிய நூல்களை வாசிக்கும் ஆர்வத்தையும் சொந்தமாக எழுதும் ஆர்வத்தையும் இளம்பருவத்திலேயே மாணவச்செல்வங்களிடையில் வளர்க்கும் ஆர்வத்துடன் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், இப்பள்ளியில் பல இளம்படைப்பாளிகளை உருவாக்கியிருக்கிறது. இதற்கு முன்பு வெளிவந்த ‘என் நண்பர்கள் எங்கே?’ ‘பூக்களின் அமைதி’ போன்ற நூல்களே அந்த இயக்கத்தின் வளர்ச்சியை அடையாளப்படுத்தும் சான்றுகளாக விளங்குகின்றன.

Sunday, 26 April 2026

வாசிப்பும் உரையாடலும்

 

ஜெயஸ்ரீ அவர்களை முதன்முதலாகக் கடலூரில் சந்தித்து உரையாடிய சிறிது நேரத்திலேயே அவர் தம் நெஞ்சில் தேக்கிவைத்திருந்த இலக்கிய ஈடுபாட்டை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அன்று தமக்குப் பிடித்த சிறுகதைகளாக அவர் படித்திருந்த சில மூத்த எழுத்தாளர்களின் சிறுகதைகளை நினைவிலிருந்து அடுக்கிக்கொண்டே சென்றது இன்னும் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது.

அழுத்தமான கேள்வி

 

இரண்டாயிரமாவது ஆண்டில் அக்டோபர் மாதத்தில் கடலூரைச் சேர்ந்த நண்பர் வளவ.துரையன் தம்முடைய இலக்கிய அமைப்பின் சார்பாக என் படைப்புகளை முன்வைத்து ஒருநாள் கருத்தரங்கமொன்றை ஏற்பாடு செய்திருந்தார். என்னுடைய சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் சார்ந்து அவர் அமர்வுகளை ஒழுங்கு செய்திருந்தார். கடலூரைச் சேர்ந்த சில பேச்சாளர்களும் புதுச்சேரி, நெய்வேலி, விழுப்புரம் என அருகிலிருந்த நகரங்களிலிருந்து வந்திருந்த சில பேச்சாளர்களும் ஒவ்வொரு அமர்விலும் விரிவாக உரையாற்றினார்கள்.

படுக்கப்பத்து மேகநாதன் : சுதந்திர தாகமும் சாகசமும்

 

தீண்டாமை ஒழிப்புப்பணி தொடர்பான விளக்கங்களை அளிக்கவும் அரிஜன நலநிதியைத் திரட்டவும் ஒரு நீண்ட சுற்றுப்பயணத்தைத் திட்டமிட்ட காந்தியடிகள் 20.12.1933 அன்று சென்னைக்கு வந்து சேர்ந்தார். இரு நாட்கள் மட்டுமே சென்னையில் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதற்குப் பிறகு ஆந்திராவுக்குச் சென்று, அங்கிருந்து மைசூருக்குச் சென்று, பிறகு மலபார் வழியாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் சில நாட்கள் பயணம் செய்து, ஒரு மாதம் கழித்து இறுதியாக நாகர்கோவிலை வந்தடைந்தார்.

Sunday, 19 April 2026

வாழும் தமிழ் : நியூயார்க் இலக்கியத் திருவிழா 2026

  

அன்புள்ள நண்பருக்கு

வணக்கம். சென்னையிலிருந்து நியுயார்க் நகரத்துக்குப்  பயணம் செய்தபோது, சுனில் கிருஷ்ணன், சு.வேணுகோபால், நான் மூவரும் ஒரே வரிசையில் அடுத்தடுத்து உட்கார்ந்து உரையாடியபடியே பயணம் செய்யும் வகையில் எங்களுக்கு இருக்கைகள் அமைந்தன. அதை ஒரு நல்லூழ் என்றே சொல்லவேண்டும். ஆயினும் நீண்ட பயண நேரம் காரணமாக என் நெஞ்சில் ஒருவித பதற்றமும் சோர்வும் இருந்தன.

ஆனந்தமான தற்செயல்

 

காகா காலேல்கர் காந்தியடிகளின் உற்ற நண்பர். காந்தியடிகளோடு இணைந்து சபர்மதி ஆசிரமத்தில் பணிபுரிந்தவர். அவர் தொடங்கிய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறைத்தண்டனை பெற்றவர்.  மக்களுக்குத் தொண்டாற்றியபடியே எழுத்தாளராகவும் விளங்கியவர்.

Sunday, 12 April 2026

சங்குத்தோரணமும் முதுகுத்தழும்பும்

 

ஏற்கனவே இரு கவிதைத்தொகுதிகள் வழியாகத் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான சுஜாதா செல்வராஜ் தன் முதல் சிறுகதைத்தொகுதியை இப்போது வெளியிட்டிருக்கிறார். கடந்த பதினான்கு ஆண்டுகளாக அவர் தொடர்ச்சியாக சிறுகதைகளை எழுதியிருந்தாலும் அவை இப்போதுதான் தொகுக்கப்பட்டிருக்கின்றன.  

தியாக வாழ்க்கை

 

மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்நாத் அவர்களுடைய நூற்றாண்டு நிறைவெய்தி சில மாதங்கள் முடிந்துவிட்டன. அவருடைய நூற்றாண்டையொட்டி ஒருநாள் நிகழ்ச்சியொன்றை நடத்தவேண்டும் என்னும் நெடுநாள் கனவு நிறைவேறுவதற்கான வாய்ப்பு காலச்சுவட்டின் உதவியோடு சமீபத்தில் கனிந்துவந்தது. நூற்றாண்டு நிகழ்ச்சியை 12.03.2026  அன்று சென்னையில் செல்லம்மாள் கல்லூரியில் நடத்துவது என நாள் குறித்துவிட்டு மற்ற வேலைகளில் இறங்கினேன்.

Sunday, 29 March 2026

சரஸ்வதி ராம்நாத் - புதிய பார்வை இதழில் வெளிவந்த நேர்காணல்

 

மொழி பெயர்ப்புகளுக்குரிய

மரியாதையோ கவனிப்போ தமிழில் இல்லை

 

சந்திப்பு : பாவண்ணன்.

 

சரஸ்வதி ராம்நாத் அவர்கள் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக சிறந்த மொழி பெயர்ப்பாளராகத் தமிழ்ச் சூழலில் இயங்கி வருபவர் சரஸ்வதி ராம்நாத். மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

சங்குத்தோரணமும் முதுகுத்தழும்பும்

 

ஏற்கனவே இரு கவிதைத்தொகுதிகள் வழியாகத் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான சுஜாதா செல்வராஜ் தன் முதல் சிறுகதைத்தொகுதியை இப்போது வெளியிட்டிருக்கிறார். கடந்த பதினான்கு ஆண்டுகளாக அவர் தொடர்ச்சியாக சிறுகதைகளை எழுதியிருந்தாலும் அவை இப்போதுதான் தொகுக்கப்பட்டிருக்கின்றன.  

Sunday, 22 March 2026

சரஸ்வதி ராம்நாத் நூற்றாண்டு விழா

 

எழுத்தையே தன் தவமாகக் கொண்ட சரஸ்வதி ராம்நாத் அவர்கள், அமராவதி நதிக்கரையோரத்தில் உள்ள தாராபுரம் என்னும் ஊரில் 1925ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் ஏழாம் நாள் அன்று பிறந்தார். அவருடைய பெற்றோர் விஸ்வநாத ஐயர், நாமகிரி அம்மாள். மருத்துவராகப் பணி புரிந்து வந்த விஸ்வநாத ஐயர் காந்தியடிகளின் பாதையில் தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். அவர் காந்தியடிகள் மீது மிகுந்த ஈடுபாடும் பற்றும் கொண்டிருந்தார்.

பெங்களூரு உலகத் திரைப்படவிழா - 2026 (பகுதி 1)

 

பதினேழாவது உலகத் திரைப்பட விழா பெங்களூரு மாநகரில் 29.01.2026 முதல் 06.02.2026 வரை லூலு மால் என்னும் வணிக வளாகத் திரையரங்குகளில் நடைபெற்றது. முதல்நாள் தொடக்கவிழா மட்டுமே நிகழ்ந்தது. அடுத்தநாள் காலையிலிருந்து திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

பெங்களூரு உலகத் திரைப்படவிழா - 2026 - (பகுதி 2)

 

இன்னொரு குறிப்பிடத்தக்க படம் ’இட் வாஸ் ஜஸ்ட் அன் ஆக்சிடெண்ட்’. பெர்சிய மொழிப்படம். ஜாஃபர் பனாஹி என்னும் இயக்குநர் இயக்கிய படம். ஈரானிய அரசைத் தொடர்ந்து விமர்சிப்பவர் என்பதால் பல முறை சிறைத்தண்டனை அனுபவித்தவர் அவர்.

Sunday, 15 March 2026

வெளிச்சமும் இருளும்

 

பைபிளில் உள்ள பழைய ஏற்பாடு ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம் என முப்பத்தொன்பது பிரிவுகளைக் கொண்ட பெருந்தொகுதியாகும். ஒவ்வொரு பிரிவிலும் ஏராளமான உட்பிரிவுகள் உள்ளன. அவற்றில் அன்று வாழ்ந்த மனிதர்களின் வரலாறாக, ஏராளமான கதைகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையும் விரிந்துசெல்லும் போக்கில் மானுட வாழ்வில் தற்செயலாக தேவன் வெளிப்படும் தருணத்தை உணர்த்துகிறது. மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையில் அமைந்திருக்கும் உறவின் நுட்பத்தையும் ஆழத்தையும் வாசிப்பவர்களின் நெஞ்சில் அழுத்தமாகப் பதிவு செய்கின்றது.  

டி.எஸ்.சொக்கலிங்கம்: சொற்கோட்டம் இல்லாத மாமனிதர்

 

இந்தியாவில் நிரந்தரமாகத் தங்கி, வாழ்நாள் முழுதும் தாய்நாட்டுக்குச் சேவை செய்யவேண்டும் என்கிற எண்ணத்தோடு தென்னாப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு வந்த காந்தியடிகள் தம் மனைவி கஸ்தூர் பாவுடன் 09.01.1915 அன்று பம்பாயில் வந்திறங்கினார். பிறகு, நாட்டு நிலைமையை நேரில் கண்டறியும் பொருட்டு, கோகலேயின் ஆலோசனையை ஏற்று, குஜராத்திய வழியில் சட்டையும் தலைப்பாகையும் பஞ்சகச்சமாக வைத்துக் கட்டிய வேட்டியும் அணிந்துகொண்டு இந்தியாவெங்கும் சுற்றுப்பயணம் செய்தார்.  

Sunday, 8 March 2026

அரங்கசாமி ராஜா : கல்மேல் எழுத்தான வாழ்க்கை

 

1920ஆம் ஆண்டில் காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமைப் போராட்டம் சாதி, மதம், இனம், மொழி என எல்லா வேறுபாடுகளையும் கடந்து  மக்களை ஒன்றிணைத்தது. ‘காந்தியடிகளின் ஒத்துழையாமைத் திட்டம் மிகமிக அறிவீனமான திட்டமாகும்’’ என வைசிராய் ரீடிங் பிரபுவின் கூற்றை மக்கள் பொய்யாக்கினார். சூறாவளிச்சுழலென எங்கும் நிற்காமல் காந்தியடிகள் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்து மக்களிடையில் ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கியத்துவத்தை  வலியுறுத்தி உரையாடியபடி இருந்தார். நீதிமன்றங்களை விலக்குவது, சட்டமன்றங்களை விலக்குவது, வெளிநாட்டுத்துணிகளை விலக்குவது ஆகிய மூன்று விலக்குகளும் அவருடைய தாரகமந்திரங்களாக இருந்தன.

விசித்திரமும் மகத்துவமும்

 

கடந்த பத்தாண்டுகளில் கனவில் தொலைந்தவன், காந்தியும் பகத்சிங்கும், இந்தியா என்கிற கருத்தாக்கம், மகாராஜாவின் பயணங்கள், சமத்துவ நோக்கிய இயக்கம், புத்த ஜாதகக்கதைகள் என பல்வேறு வகைமை சார்ந்த நூல்களை ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழிபெயர்த்த அக்களூர் இரவி சமீபத்தில் வெளிவந்த ரதியின் மன்மதன் என்னும் தொகுதியின் வழியாக சிறுகதையாசிரியராகவும் மலர்ந்திருக்கிறார். பசுமையான பள்ளிப்பருவ நினைவுகளும் கிராமத்து மனிதர்களைப்பற்றிய நினைவுகளும் அவரை சிறுகதை முயற்சிகளில் ஈடுபடத் தூண்டியிருக்கின்றன.

Sunday, 1 March 2026

காலம் - சிறுகதை

 தத்தக்கா புத்தக்கா என்று மீனா நடக்க ஆரம்பித்ததிலிருந்தே தெருவிலிறங்கிவிடாமல் அவளைக் கவனித்துக்கொள்ளும்படி சாவித்திரியிடம் சொல்லிவைத்திருந்தேன். பத்தடிக்குப் பத்தடி வாடகை வீடு இது. ஒரு மூலையில் சமையல்; ஒரு மூலையில் குளியல்; ஒரு மூலையில் படுக்கை; மிச்ச இடம் புழங்க என்பதுதான் எங்கள் விதி. இந்தப் புழங்குமிடத்தைத் தாண்டிப் பழகுவதற்காக தெருவில் மீனா இறங்கிவிடப் போகிறாளே என்ற பயத்தால்தான் ஆரம்பத்திலேயே எச்சரிக்கையாகச் சொல்லியிருந்தேன். தெருவில் சதா நேரமும் வண்டிகள் கண்மண் தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறதால்தான் இதைக்கூடச் சொல்லவேண்டியிருந்தது.