வெவ்வேறு காலகட்டங்களில் சந்திக்க நேர்ந்த சில அரிய மனிதர்களைப்பற்றியும் சில அரிய தருணங்களைப்பற்றியும் சிற்சில சித்திரங்களை அனுபவக்கதைகளாக எழுதினேன். கதைக்கட்டுரைகள் அல்லது கட்டுரைக்கதைகள் என்று இவற்றைச் சொல்லலாம். ஏற்கனவே இந்தக் கட்டமைப்பில் தீராத பசிகொண்ட விலங்கு, இருபத்திரண்டு அட்டைப்பெட்டிகள், ஒட்டகம் கேட்ட இசை போன்ற தொகுப்புகள் வந்துள்ளன. அவற்றின் தொடர்ச்சியாக இத்தொகுதியைக் கருதலாம்.