Home

Sunday, 3 May 2026

நலிவு - சிறுகதை

  

அருமாத்தபுரம் ரயில்வே கேட்டுக்குப் பக்கத்தில் பாண்டிச்சேரியைப் பார்க்கிற பச்சை வர்ண கட்டிடத்தில்தான் இருதயமேரி கான்வென்ட் இருக்கிறது. போகன்வில்லாவும் நந்தியாவட்டையும் வளர்ந்திருக்கிற வாசலுக்கு மேல் சின்ன பெயர்ப்பலகை. பஸ்ஸில் போகிற எந்தப் பிரயாணியும் படிக்கிறமாதிரி பளிச்சென்றுதான் எழுதி இருக்கிறது. ஆனால் பஸ்காரன் மாத்திரம் நிறுத்துவதில்லை. கெஞ்சிப் பார்த்தால்கூட ரொம்ப தூரம் தள்ளி சுல்தான்பேட்டையில்தான்  நிற்கிறது. முனகியபடியே  லூசி  இறங்குகிறாள்.

வாசிப்பு இயக்கத்தின் கொடை

 

கும்பகோணத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களிடையில் அரசு தொடங்கிய காவேரி வாசிப்பு இயக்கம் அழுத்தமான தடத்தைப் பதித்து வருகிறது. பாடநூல்களுக்கு அப்பால் பிற இலக்கிய நூல்களை வாசிக்கும் ஆர்வத்தையும் சொந்தமாக எழுதும் ஆர்வத்தையும் இளம்பருவத்திலேயே மாணவச்செல்வங்களிடையில் வளர்க்கும் ஆர்வத்துடன் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், இப்பள்ளியில் பல இளம்படைப்பாளிகளை உருவாக்கியிருக்கிறது. இதற்கு முன்பு வெளிவந்த ‘என் நண்பர்கள் எங்கே?’ ‘பூக்களின் அமைதி’ போன்ற நூல்களே அந்த இயக்கத்தின் வளர்ச்சியை அடையாளப்படுத்தும் சான்றுகளாக விளங்குகின்றன.