தமிழ்ப் பேராசிரியரும் என் நண்பருமான சு.வேங்கடராமன் எழுதிய “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு” என்னும் கட்டுரைத் தொகுதியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தற்செயலாகப் படித்தபோதுதான் செங்கோட்டை ஆவுடை அக்காவைப்பற்றித் தெரிந்து கொண்டேன். ஆவுடை அக்காவைப்பற்றிய கட்டுரையில் சு.வேங்கடராமன் மனஆதங்கத்துடன் ஒரு குறிப்பை எழுதியிருந்தார். “பாரதியார் அக்காவை நன்றாக அறிந் திருந்தார், அக்காவின் பாடல்களை அவர் மனம்நெகிழச் சுவைத்தார், ஆனாலும் அக்காவைப் பற்றி ஒரு சிறிய குறிப்பைக்கூட எங்கும் அவர் எழுதி வைக்கவில்லை” என்பதுதான் அந்த ஆதங்கம். அதைப் படித்த கணத்தில் என் மனம் அதை ஏற்கவில்லை.
Friday 21 June 2019
Thursday 20 June 2019
கதவு திறந்தே இருக்கிறது - மகிழ்ச்சியின் ஊற்று
லியோ தல்ஸ்தோய், தஸ்தாவெஸ்கி, மக்சீம் கார்க்கி போன்றோர் எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ரஷ்ய மொழியில் எழுதிய மற்றொரு முக்கிய எழுத்தாளர் விளாதிமிர் கொரலேன்கோ. அவர் 15-07-1853 அன்று உக்ரேனியாவின் தென் மேற்குப் பகுதியிலுள்ள ஜித்தோமிர் என்ற சிறு நகரத்தில் பிறந்தார். அவருடைய தந்தையார் வழக்கறிஞர். ஆனால் கொரலேன்கோ தன் சிறுவயதிலேயே அவரை இழந்துவிட்டார். ஐந்து குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தை நடத்திச் செல்ல கொரலேன்கோவின் தாயார் மிகவும் சிரமப்பட்டார். பசியும் பட்டினியுமாக நாட்கள் கழிந்தன. அச்சூழலில் கொரலேன்கோவால் தன் கல்வியைச் சரியாகத் தொடரமுடியவில்லை. இருபது வயதிலேயே கல்லூரியிலிருந்து விலகிவிட்டார். கிடைத்த வேலையைச் செய்து குடும்பத்துக்குத் துணையாக இருந்தார்.
இரண்டு கவிதைகள்
சிப்பி
உலவும் கால்கள் அலையும்
கடல் மணற்பரப்பில்
பிடுங்கி வீசிய ஒற்றை விழியென
மிதிபட்டு கிடக்கும் ஒரு சிப்பி
ஏதோ ஓர் அலையில் ஒதுங்கி
புறம் மறந்து தியானத்தில்
புதைந்த ரிஷியாகக் கிடக்கிறது
புராணமும் சமகாலமும் - அஞ்சலிக்கட்டுரை
எண்பதுகளின் நடுப்பகுதியில் இரண்டாண்டு காலம் கர்நாடகத்தில் ஷிமோகா என்னும் நகரில் வேலை செய்துவந்தேன். எங்கள் கோட்ட அலுவலகம் ஹூப்ளியில் இருந்தது. அந்த நகரங்களில் தினமும் நாடகங்கள் மட்டுமே நிகழ்த்தப்படும் அரங்குகள் இருந்தன. இரவு ஏழு மணிக்குத் தொடங்கி ஒன்பது மணிக்கு முடிந்துவிடும். உள்ளூர் குழுக்களும் வெளியூர் குழுக்களும் மாறிமாறி நாடகங்களை அரங்கேற்றும். கர்நாடகம் முழுதும் ஆண்டுதோறும் வலம்வரும் நீநாசம் குழுவின் நாடகங்களுக்கு சிறப்பான வரவேற்பு இருக்கும். ஒருமுறை தார்வாட் நகரில் நான் ஹயவதனன் என்னும் நாடகத்தைப் பார்த்தேன். அந்த நாடகத்தை எழுதியவர் கிரீஷ் கார்னாட்.
Wednesday 5 June 2019
கஸ்தூர்பா - ஒரு நினைவுத்தொகுப்பு
ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பாக பூனாவுக்குச் சென்றிருந்தேன். அசோக்குமார், காமராஜ், நான் மூவரும் அந்த நகரைச் சுற்றிப் பார்த்தோம். முதலில் சென்ற இடம் ஆகாகான் மாளிகை. ’வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தைத் தொடர்ந்து காந்தியடிகளும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டு அங்கே சிறைவைக்கப்பட்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் அடைக்கப்பட்டிருந்த அறைகளை ஒவ்வொன்றாகப் பார்த்தபடியே அந்த வளாகத்துக்குள் நடந்தோம். காந்தியடிகள் இருந்த அறைக்குள் அவர் பயன்படுத்திய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அங்கிருந்த ராட்டையின் முன்னால் காந்தியடிகள் அமர்ந்து நூல் நூற்பதைப்போல ஒருகணம் நினைத்துக்கொண்டேன். அவர் சுவாசித்த காற்றின் மிச்சத்தை நான் சுவாசிப்பதாக அக்கணம் தோன்றியது. என் உடல் சிலிர்த்தடங்கியது.
Sunday 2 June 2019
இரண்டு கவிதைகள்
பூனை
காவல் பலிக்கவில்லை
தினமும் பால் திருட்டு
எதேச்சையாய்ப் பார்த்ததும்
நின்று முறைக்கிறாய்
முன்வைக்கவோ பின்வைக்கவோ
உனது தந்திரம் புரியவில்லை
Labels:
நகர்நீங்கு படலம்,
பூனை
மாபெரும் கனவு - கட்டுரை
சின்ன வயதில் கதைப்புத்தகங்களைத் தேடித்தேடி படிப்பதில் ஆர்வமுள்ளவனாக இருந்தேன். அப்போது படித்த கதைகளில் ஒன்று இன்னும் என் நினைவில் உள்ளது. அதன் பெயர் நவரத்தின மலை. அது செங்குத்தான மலை. மேலேயிருந்து தட்டுத்தடுமாறி கீழே இறங்கிவிட முடியுமே தவிர, மேலே ஏறிச் செல்ல வழியில்லை. அதன் உச்சியில் அழகானதொரு தோட்டம் இருப்பதாகவும் அங்கே பூக்கும் பூக்கள் ஒருபோதும் வாடாதவை என்றும் பேசிக்கொள்கிறார்கள்.
Subscribe to:
Posts (Atom)