மாதத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை வீட்டைவிட்டுக் கிளம்பிச் சென்று காடு, மலை, ஏரி, ஆறு என சுற்றியலைந்துவிட்டுத் திரும்பும் பழக்கமுள்ளவர் முத்துராமன். பறவைகளைத் தேடித்தேடிச் சென்று பார்ப்பதிலும் படமெடுப்பதிலும் ஆர்வமுள்ளவர் அவர். ஒவ்வொரு பயணத்திலும் அவர் எடுத்த படங்கள் ஐநூறு, அறுநூறைத் தாண்டும். அவை அனைத்தையும் ஒரு குறுந்தகடில் பதிவு செய்து அழியா மைப்பேனாவால் அதன் மீது பயணம் செய்த ஊரின் பெயர், பயணநாள், பறவையின் பெயர் என எல்லாத் தகவல்களையும் எழுதி உறையிலிட்டு வைத்துவிடுவார். என்றாவது ஒருநாள் மாலையில் அவரைச் சந்திக்கச் செல்லும் வேளையில் அந்தப் படங்களை நான் பார்ப்பதுண்டு.