“அம்மா, ராமகிருஷ்ணன் அண்ணன் கல்யாணம் பத்தி சொன்னேனே, ஞாபகம் இருக்குதா?” என்று அம்மாவிடம் நினைவூட்டினேன். “எல்லாம் ஞாபகம் இருக்குது. முதல்ல இந்த தண்ணிய எடுத்தும் போயி அந்த கழனிப்பானையில ஊத்திட்டு வா” என்று என் பக்கம் திரும்பாமலேயே குண்டானிலிருந்த அரிசியைப் பார்த்தபடி சொன்னாள் அம்மா. எங்காவது கல் தென்படுகிறதா என அவள் கண்கள் தேடிக்கொண்டிருந்தன.