எண்பதுகளின் பிற்பகுதியில் தொலைபேசித்துறையில் கோஆக்சியல் கேபிள் பாதை அமைப்பதில் சில பிரச்சினைகள் எழுந்தன. வனப்பகுதிகளும் மலைப்பகுதிகளும் நிறைந்த பல மாவட்டங்களை இணைக்க முடியவில்லை. முக்கியமாக ஹாசன், மங்களூர், சிக்கமகளூர், கார்வார், ஷிமோகா போன்ற பகுதிகளை இணைக்கமுடியாமல் திணறினோம். அந்த நேரத்தில் இரும்புக் கோபுரங்களைக் கட்டியெழுப்பும் மாற்றுத்திட்டம் உதித்தது.