சின்ன அண்ணாமலையின் ‘சொன்னால்
நம்ப மாட்டீர்கள்’
கடந்த வாரம் கன்னடத்திலிருந்து
தமிழில் மொழிபெயர்ப்பவரும் கன்னட எழுத்தாளருமான சேஷநாராயணாவைச் சந்தித்தேன். உரையாடல்
அவருடைய பதின்பருவ அனுபவங்களை ஒட்டி இருந்தது. பதினைந்து வயதுச் சிறுவனாக இருந்தபோது,
அப்பாவோடு ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவாக ஒருநாள் அவர் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.
வெகுதொலைவு நடந்த களைப்பில் ஒரு பூங்காவுக்கு எதிரில் நின்றிருக்கிறார். அங்கே ஏற்கனவே
ஏராளமான மாணவர்கள் கூட்டம்கூட்டமாக நின்றிருக்கிறார்கள். அவர்கள் சுதந்திர வேட்கையுடன்
கல்லூரியை விட்டு வெளியேறியவர்கள். ஒரு கூட்டம் நிகழ்த்துவதற்காக அங்கே சேர்ந்திருக்கிறார்கள்.
இந்தப் பின்னணியைப்பற்றிய எந்தத் தகவலும் தெரியாமலேயே அந்தக் கூட்டத்தை வேடிக்கை பார்த்தபடி
அவர் சாலையோரமாக நின்றிருக்கிறார்.