1920ஆம் ஆண்டு தொடக்கத்தில் டில்லியில் ஒத்துழையாமை இயக்கம் தொடர்பான திட்டங்களை காந்தியடிகள் அறிவித்தார். அரசு வழங்கியிருக்கும் பட்டங்களையும் கெளரவப்பதவிகளையும் துறத்தல், ஊதியம் பெறும் அரசாங்கப்பதவிகளிலிருந்து விலகுதல், அந்நிய நாட்டுத்துணிகளை விலக்குதல். நீதிமன்றங்களிலிருந்து வழக்கறிஞர்கள் வெளியேறுதல், அரசு கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள் வெளியேறுதல் என எல்லா விதங்களிலும் அரசுடன் ஒத்துழைப்பதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்பதுதான் அவருடைய திட்டம்.