Home

Monday 25 October 2021

செவிடி - சிறுகதை

 

மாநிலம் தாண்டி மாநிலம் செல்கிற ரயிலில் நிம்மதியுடன் மிக சமீபத்தில் உறங்கும் புதிய மனைவியின் முகப் பிரகாசத்தையும் காற்றில் நெளிந்துநெளிந்து அலைகிற அவள் கூந்தலையும் பார்த்தபடி ஊரில் நடந்ததையெல்லாம் ஒன்றுமாற்றி ஒன்று யோசித்தபோது செவிடி என்கிற தளர்ந்த அந்தக் கிழவியின் ஞாபகம் வந்தது.

வெறுப்பின் தொடக்கமும் முடிவும்

 

ஜெயமோகன் எழுதிய அமுதம் என்ற சிறுகதையை கடந்த ஆண்டில் படித்தேன். தமிழ்ச்சிறுகதைகளில் அக்கதைக்கு சிறப்பானதொரு இடமுண்டு. ஒரு மலையோரக் கிராமம். பால்மணத்தையே அறியாது அது வறுமையில் மூழ்கியிருக்கிறது. அங்கிருக்கும் அனைத்துப் பசுக்களும் மடி வற்றியவை.  ஒருநாள் அக்கிராமத்துக்கு காட்டிலிருந்து ஒரு பசு வந்து சேர்கிறது. அது வழங்கும் பாலால் கிராமத்துக் குழந்தைகள் ஊட்டமடைகிறார்கள். பெண்களும் பெரியவர்களும் ஊட்டமடைகிறார்கள். பெண்களின் கண்களில் நிறைவும் நம்பிக்கையும் பரவுகின்றன. அந்தப் பசுவின் பாலால் அவர்களுடைய ஆற்றலும் பெருகுகிறது. ஆண்களின் ஆற்றலைவிட பெண்களின் ஆற்றல் மேலோங்கிச் செழிக்கிறது.

Sunday 17 October 2021

சாட்சி - சிறுகதை

 

பெங்களூர்க்கு மாற்றலாகிப் போகிறேன் என்றதும் அவசியமா எம்.ஜி.ரோட்டப் போய்ப் பாருஎன்றான் சினேகிதன். என்னடா விசேஷம்?’ என்றதற்கு பாத்தா நீயே புரிஞ்சிக்குவஎன்றான். சொன்னதெல்லாம் வாஸ்தவம்தான் என்று வந்தபிறகு புரிந்தது. 

ஊமைகள் - சிறுகதை


கட்டைவண்டி போனால்கூட அதன் சத்தத்தைத் தெளிவாய் உணரமுடிகிற அளவுக்குப் பஞ்சாயத்து போர்டு தெருபக்கம்தான் என்றாலும் சத்தமும் காட்டாமல் ஒரு கோழி இறகுமாதிரி வந்து லாரி நின்றிருக்குமே எனச் சந்தேகப்பட்டாள் தேவானை. சந்தேகம் வலுக்க வலுக்க படபடப்பும் அதிகமானது. வாசலுக்கு வந்து பார்த்தாள். லாரி வந்து எதுவும் நிற்கிற மாதிரி தெரியவில்லை. நேற்று மத்தியானமே வந்து சேர்ந்த கேரளா லாரிதான் பதுமை மாதிரி நின்றிருந்தது.

Monday 11 October 2021

திருவள்ளுவரும் காந்தியடிகளும்

  

     கல்வித்தகுதி, செல்வநிலை. ஆடம்பரம், பழகும் முறை, பேச்சுமுறை என ஒருவரை இன்னொருவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் கூறுகள் எண்ணற்றவை. ஆனால் ஒருவரை ஒட்டுமொத்தமாக மதிப்பிடவேண்டும் என்ற நிலை வரும்போது, அவற்றில் எதையுமே அவரை மதிப்பிடும் அளவுகோலாக எடுத்துக்கொள்ள முடியாது. அவர் இம்மண்ணில் ஆற்றிய செயல்கள் மட்டுமே மதிப்பிட உதவும் அளவுகோலாகக் கருதப்படும்.  ஒருவருடைய பெருமையையும் சிறுமையையும் அத்தகு செயல்கள் வழியாகவே இந்த உலகம் வரையறுக்கும். ஒவ்வொரு செயலும் ஏதோ ஒருவகையில் உரைகல். இதை மனத்தில் கொண்டே  எண்ணித் துணிக கருமம் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். ’பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்என்பது வள்ளுவர் வகுத்திருக்கும் பொதுநெறி. அந்த நெறியே மனித வாழ்க்கையை மதிப்பிட உதவும் அடிப்படை அளவுகோல்.

திருமலை : உலகத்தார் உள்ளத்துள் உள்ளவர்

 

கதரியக்க வளர்ச்சிக்காக நிதி திரட்டும் நோக்கத்துடன் மேற்கொண்ட தென்னகப்பயணத்தின் ஒரு பகுதியாக காந்தியடிகள் 04.10.1927 அன்று இராஜபாளையத்துக்கு வந்திருந்தார். அன்று அவர் மூன்று கூட்டங்களில் கலந்துகொண்டார். முதலில் மகளிர் மட்டுமே பங்கேற்ற கூட்டத்தில் பேசிவிட்டு அடுத்து, இராஜபாளையம் காதி வஸ்திராலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். மூன்றாவதாக பொதுமக்கள் அனைவரும் பங்கேற்ற கூட்டத்தில் உரையாற்றினார்.

Monday 4 October 2021

வழி - சிறுகதை

 

சிம்னி விளக்கு வெளிச்சத்தில் பாய் மேலேயே துணியை விரித்துப் போட்டு உட்கார்ந்த வாக்கிலேயே எக்கிஎக்கி சுண்ணாம்புக் கட்டியால் அடையாளம் செய்வதும் அடையாளக்கோட்டின் மேலேயே நடுவில் நட்போல்ட் போட்டு முடுக்கிய கத்திரிக்கோலால் க்ரீக் க்ரீக் க்ரீக் என்று வெட்டுவதுமாய் இருந்த கோபாலைப் பார்த்தபோது சுந்தரிக்குப் பாவமாய் இருந்தது. நிமிஷத்துக்கொருதரம் நடுமரை தொளதொளத்துவிடுகிற கத்தரிக்கோலைத் திரும்பத் திரும்ப முடுக்கிக்கொண்டு வெட்டுகிற கோபாலுக்கு இப்போதே ஓடிப்போய் ஒரு புதுக் கத்திரிக்கோல் வாங்கி வந்து கையில் தரவேண்டும் என்று ஆசைப்பட்டாள் சுந்தரி.

நகுலனின் கவிமொழி - கட்டுரை

 

     புதுக்கவிதையே நவீன கவிதையின் வடிவமென உருவாகி நிலைபெற்ற அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கவிதை எழுதிக்கொண்டிருந்த பிரமிள், சி.மணி, பசுவய்யா, வைத்தீஸ்வரன் போன்ற கவிஞர்களின் வரிசையில் எழுதிக்கொண்டிருந்தவர் நகுலன். அந்தப் பிரதான கவிஞர்கள் கட்டமைத்த உலகங்களிலிருந்து விலகி வேறொரு உலகை வேறொரு மொழியில் எழுத அவர் முயற்சி செய்தார். வேறொன்றாகக் காட்சியளிக்கும் இந்த அம்சமே மற்ற படைப்பாளிகளிடமிருந்து அவரைத் தனித்துவம் நிறைந்தவராக நிலைநிறுத்தியது. நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் மனம் மிக இயல்பாக உருவாக்கும் படிமங்களும் சொற்சேர்க்கைகளும் தமிழ்க்கவிதை உலகத்தின் அடையாளங்களாக திரண்டுவந்த வேளையில் வாழ்க்கையைப்பற்றிய ஒரு விமர்சனக்குறிப்பைப்போலவும் கசப்பையோ சலிப்பையோ முன்வைக்கும் ஒருசில கையறுநிலைச் சொற்களைப்போலவும் சொல்விளையாட்டு போலவும் தோற்றமளிக்கும் இன்னொரு வகையான அடையாளத்தை உருவாக்கியவர் நகுலன்.