Home

Sunday 27 February 2022

ராம் மனோகர் லோகியா : அசைக்க முடியாத நம்பிக்கை

 

            31.07.1921 அன்று பம்பாயில் பரல் என்னுமிடத்தில் இருக்கும் எல்பின்ஸ்டோன் ஆலைக்கு அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காந்தியடிகள் உரையாற்றினார். அடுத்த நாள்  திலகரின் முதலாம் நினைவுநாள். எல்லோரும் அறிந்த திலகருடைய கூற்றான சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்என்னும் முழக்கத்தை காந்தியடிகள் முதலில் நினைவுபடுத்தினார். பிறகு திலகருடைய சுயராஜ்ஜியக் கனவை நிறைவேற்றுவதே இந்தியரின் முதல் கடமையாகும் என்று அறிவித்தார். தொடர்ந்து நம் வாழ்வை சுதேசிமயமானதாக மாற்றிக்கொள்வதன் வழியாக மட்டுமே நாம் சுயராஜ்ஜியத்தை அடையமுடியும் என்று தெளிவாக எடுத்துரைத்தார்.

சரளா பெஹன் : அணையாத ஒளிவிளக்கு

 

     1917ஆம் ஆண்டில் லண்டனில் ஒரு நாள் பகல்வேளையில் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த ஓர் இளம்பெண்ணுக்கு தலைமையாசிரியரிடமிருந்து  திடீரென ஓர் அழைப்பு வந்தது. உடனே அந்தப் பெண் அவருடைய  அறைக்குச் சென்றார். அவரை ஏறிட்டுப் பார்த்த தலைமையாசிரியர் உங்கள் குடும்பம் நம் நாட்டின் எதிரிகளுக்கு ஆதரவாக இருப்பதாக அரசுக்குத் தெரியவந்திருக்கிறது. அதனால் இதுவரை உனக்குக் கொடுத்து வந்த உதவித்தொகையை நிறுத்திவிட பள்ளிநிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது. இனி உனக்கு உதவித்தொகை கிடைக்காதுஎன்று அதிகாரத்துடன் தெரிவித்தார்.

மலையும் குறுமிளகும்

 

எளிமையான கவிமொழியைக் கொண்ட எளிமையான காட்சிச்சட்டகங்களைக் கொண்டிருக்கின்றன சந்திரா தங்கராஜின் கவிதைகள். ஆனால் அந்த எளிமை ஆழமானதாக உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையின் அன்றாட வாழ்க்கையையும் அன்றாடச் சிந்தனையையும் அந்தக் காட்சிச்சட்டகங்கள் நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றன. காட்சித்தொகுப்பாக அமைந்திருக்கும் அதே வேளையில், எளிதாகக் கடந்து செல்லமுடியாதபடி ஒவ்வொரு காட்சியிலும் மனத்தை அசைக்கும் புள்ளிகள் நிறைந்து தனித்தன்மை கொண்டதாக மாற்றுகின்றன. கவிதையின் சாரமாக அமைந்திருக்கும் அந்தப் புள்ளிகள் சிற்சில தருணங்களில் பரவசமளிக்கின்றன. சிற்சில தருணங்களில் அமைதியிழக்க வைக்கின்றன.

கவிதை என்னும் கலை

  

     கவிதையுலகில் புறவுலகக் காட்சிகளைச் சித்தரிப்பது என்பது அழகான கலை. நம்மைச் சுற்றி நிறைந்திருக்கிற செடிகள், கொடிகள், மரங்கள், பாலங்கள், ஆறுகள் என எந்தப் புள்ளியிலிருந்தும் ஒரு கவிதையைத் தொடங்கலாம். அது ஒரு படைப்பாளியின் தேர்வு. ஆனால் அந்தப் புள்ளியை அவன்  கவிதைக்குள் முன்வைக்கும்போது, அந்தத் தேர்வு எந்த அளவுக்குச் சரியானது என்பதை நிறுவியிருக்கவேண்டும். அது மிகமிக முக்கியம்.

Sunday 20 February 2022

சென்றுகொண்டே இருக்கிறேன் - நேர்காணல்களின் தொகுப்பு

 

2016ஆம் ஆண்டில் பொங்கல் நாளன்று பதாகை இணைய இதழின் நண்பர்கள் என் படைப்புகளை முன்வைத்து ஒரு சிறப்பிதழைத் தயாரித்து வெளியிட்டனர். அதையொட்டி விரிவானதொரு நேர்காணலும் அவ்விதழில் வெளியானது.  அந்த நேர்காணலைப் படித்த நண்பர் கே.பி.நாகராஜன் “எல்லாக் கேள்விகளும் நான் கேட்க நினைத்த கேள்விகளைப் போலவும் எல்லாப் பதில்களும் எனக்காகவே சொல்லப்பட்ட பதில்களைப் போலவும்  இருக்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

புதிய கோணங்கள் புதிய காட்சிகள்

 

காந்தியடிகளின் காலத்தில் வாழ்ந்த மற்ற தலைவர்களுக்கும் காந்தியடிகளுக்கும் இடையில் முக்கியமானதொரு வேறுபாடு இருக்கிறது. மற்றவர்கள் அனைவரும் நாட்டு விடுதலைக்காகவும் மக்களின் பொதுவான வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதுவதற்காகவும் உழைப்பவர்களாக இருந்தனர். காந்தியடிகள் இவர்களைவிட ஒரு படி மேலே சென்று, தனிமனித வாழ்க்கைத்தரத்தையும் கணக்கிலெடுத்துக்கொண்டார். வாழ்க்கைத்தரம் என்பதை போதிய அடிப்படை வசதிகளோடு வாழ்வது என்னும் வரையறையிலிருந்து ஒழுக்கத்தோடும் சத்தியத்தோடும் நேர்மையோடும் வாழ்வது என்னும் வரையறைகளையும் இணைத்துக்கொண்டார்.

Sunday 13 February 2022

பழமலய் வழங்கிய அன்புக்காணிக்கை

  

பதிற்றுப்பத்து பாடல்தொகையில் எட்டாம் பத்துக்குரிய பாடல்கள் அனைத்தும் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் அரசனின் போர்வெற்றியைப் புகழ்ந்து  அரிசில் கிழார் பாடியவை. ஒவ்வொரு பாட்டும் தகடூர் என்னும் ஊரை இரும்பொறை முற்றுகையிட்டு அழித்துச் சூறையாடிய வீரத்தை விதந்தோதும் வகையில் எழுதியிருக்கிறார் அரிசில் கிழார்.  ’பல்பயன் நிலைஇய கடறுடை வைப்பின் வெல்பேர் ஆடவர் மறம்புரிந்து காக்கும் வில்பயில் இறும்பின் தகடூர் நூறி’ என்னும் வரிகள் அப்போரின் உச்சக்கட்டக் காட்சியை விவரிக்கின்றன.  ’மக்களுக்குப் பயனளிக்கும் பலவிதமான பொருட்களை காட்டின் உட்பகுதிகளில் குவியலாகக் குவித்து காவல் காத்தபடியே தமக்குள் மோதி போர்ப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களைத் தாக்கி, அக்காட்டின் அரணாக விளங்கும் கோட்டையை இடித்துத் தரைமட்டமாக்கிய பெருமைக்குரியவன்’ என்பதுதான் அவ்வரிகளின் பொருள். அப்போது தகடூரை ஆண்டவன் அதியமான். அந்தக் கோட்டையின் பெயர் அதியமான் கோட்டை.

கரைந்த மனிதர்களின் கதைகள்

  

உத்தலாகர் என்று ஒரு முனிவர் இருந்தார். அவருடைய மகன் ஸ்வேதகேது. அவர்களுக்கு இடையே நிகழும் உரையாடல் தருணங்கள் சாந்தோக்கிய உபநிடதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன. கண்ணுக்குப் புலப்படாத ஆன்மாவைப்பற்றியும் கண்ணால் காணக்கூடிய உலகத்தைப் பற்றியதுமான ஒரு கேள்விக்கு விடையளிக்கும் விதமாக உத்தாலகர் தன் மகனிடம் அருகிலிருந்த ஆலமரத்தைச் சுற்றி விழுந்து கிடந்த பழங்களில் ஒன்றைக் கொண்டு வருமாறு சொன்னார். மகன் எடுத்து வந்து கொடுத்ததும் அப்பழத்தை உடைக்கும்படி சொன்னார். அவன் உடைத்ததும் “அதில் என்ன காணப்படுகிறது?” என்று கேட்டார் உத்தாலகர். “சிறுசிறு விதைகள் உள்ளன தந்தையே” என்றான் மகன். அடுத்து அதையும் உடைக்குமாறு சொன்னார் உத்தாலகர். அவன் உடைத்து நசுக்கியதும் “அதில் என்ன காணப்படுகிறது?” என்று கேட்டார். ”எதுவுமே இல்லை” என்றான் மகன். உத்தாலகர் புன்னகையுடன் “எதுவுமற்றதாகக் காட்சியளிக்கும் அதற்குள் ஒரு பெரிய ஆலமரமே இருக்கிறது மகனே. விழவேண்டிய இடத்தில் விழுந்து முளைத்துவிட்டால் ஒரு பெரிய மரத்தையே அது உருவாக்கிவிடும்” என்றார்.

Sunday 6 February 2022

பலாப்பழத்தின் மணம்

 

நவீன தமிழ்க்கவிஞர்களின் வரிசையில் பரவசமூட்டும் தருணங்களையும் மன எழுச்சியூட்டும் தருணங்களையும் முன்வைத்து ஒருவித கொண்டாட்ட மனநிலையை உருவாக்கித் திளைப்பவர்கள் மிகச்சிலரே. தேவதேவன், முகுந்த் நாகராஜன், ந.பெரியசாமி என எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்களே அந்த வரிசையில் உள்ளனர். அவ்வரிசையில் இணைத்துக் கருதத்தக்கவராக ஆனந்த்குமாரைச் சொல்லலாம்.  அவருடைய முதல் கவிதைத்தொகுப்பாக சமீபத்தில் தன்னறம் வெளியீடாக வந்திருக்கும் டிப் டிப் டிப் அதற்குச் சாட்சி.

வன்முறை என்னும் உடனுறை தெய்வம்

  

ஒரே குடியைச் சேர்ந்த நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் மோதிக்கொள்ளும் தருணத்தில் இருவரையும் சந்தித்து அறிவுரை கூறும் ஒளவையாரின் பாடலொன்று புறநானூற்றில் இருக்கிறது. அப்பாடலில் ”ஒருவீர் தோற்பினும் தோற்பது நும் குடியே, இருவீர் வேறல் இயற்கையும் அன்றே” என்று துணிவோடு சுட்டிக்காட்டுகிறார் ஒளவையார். இறுதியாக, இயலாமையின் விளிம்பில் நின்றபடி “ஊரில் இருப்பவர்கள் ஏளனத்துடன் பார்த்து சிரிப்பதற்குத்தான் இந்தப் போர் வழிவகுக்கப் போகிறது” என்று சொல்லிவிட்டுப் போகிறார். குடிகளின் மனநிலையைத் துறந்து உலகம் தழுவிய மானுட மனநிலைக்கு மாறிவிட்டவர் ஒளவையார். அவர் சொல் அந்தக் குடிகளின் தலைவர்களுக்கு உறைக்கவில்லை. ‘அன்புக்கு அன்பு, ரத்தத்துக்கு ரத்தம்’ என்னும் ஆதிமனநிலையிலேயே அவர்கள் உறைந்திருக்கிறார்கள். அதற்காக எல்லா நெறிகளையும் மீறிச் செல்ல அவர்கள் தயாராகவும் இருக்கிறார்கள்.