சிறைக்கு வந்து ஒரு மாதம் முடிந்துவிட்டது. மனசின் கொந்தளிப்பு அடங்கவில்லை. ஒவ்வொரு நரம்பிலும் வெறி பீறிட்டோடுகிறது. போன மாதம் வரை இப்படி ஒரு சந்தர்ப்பம் என் வாழ்வில் நேரும் என்று நான் கனவுகூடக் கண்டதில்லை. ஆற்றில் ஒரு படகுப்பயணம்போல அமைதியாகவும், ஆனந்தமாகவும் கழிந்து கொண்டிருந்தது என் வாழ்வு. அன்பே உருவான பத்மினி. குறும்பின் உறைவிடமான மஞ்சுக் குட்டி. உலகத்தில் என்னைப்போல சந்தோஷசாலி எவன் இருப்பான் என்ற நினைப்பில் மிதந்தபடி இருந்தேன்.