Home

Sunday 30 January 2022

மூன்று கனவுகளும் மேலுமொரு கனவும்

 

பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கத்தோலிக்கக் குழுவினரும் அமெரிக்காவைச் சேர்ந்த பிராட்டஸ்டண்ட் குழுவினரும் அமெரிக்காவைச் சேர்ந்த சீர்திருத்தச் சமயக்குழுவினரும் நன்கு பயிற்சியளிக்கப்பட்ட தம் எண்ணற்ற சமயப்பரப்பாளர்களை ஆசிய நாடுகளுக்கு சமயப்பணிகளை மேற்கொள்வதற்காக அனுப்பிவைத்தனர். அவர்கள் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மெல்ல மெல்ல கிறித்துவத்தை அறிமுகப்படுத்தி, கிறித்துவ நம்பிக்கைகளை வேரூன்றச் செய்வதையே தம் வாழ்நாள் நோக்கமாகக் கொண்டு இயங்கினர். எல்லா நாடுகளிலும் தொடர்யுத்தங்களால் நேர்ந்த சீரழிவுகளிலும் விளங்கிகொள்ள முடியாத நோய்களிலும் சிக்கித் தவித்த எளிய மக்களிடையில் சமயப்பரப்பாளர்களுடைய வருகை ஒரு மருந்தாக அமைந்தது. மதமாற்றங்கள் எளிதாக அமைவதற்கு அந்த வரலாற்றுத்தருணமே ஒரு தொடக்கப்புள்ளியானது.

குழந்தை - சிறுகதை

      ”இந்த கொழந்தைய வச்சிகினு யாராச்சும் ஆம்பளையோ பொம்பளையோ இங்க கடைப்பக்கம் வந்தாங்களா? கொஞ்சம் பாத்து சொல்றீங்களா?” என்று கேட்டபடி கைபேசியைக் காட்டினான் தயாளன். அந்தப் படத்தை  ஒருகணம் உற்றுப் பார்த்துவிட்டு தலையசைத்தபடி உதட்டைப் பிதுக்கினார் கடைக்காரர்.

     பொம்பளங்ககிட்ட கேட்டுப் பாருங்க சார். கொழந்த மூஞ்சிலாம் அவுங்களுக்குத்தான் நல்லா ஞாபகம் இருக்கும்

சுப்பராய பிள்ளை தோட்டத்தில் தொடங்கி  ஜப்பர்பாய்தோட்டம், அய்யனார் நகர், அருந்ததிபுரம் வரைக்கும் படத்தைக் காட்டி விசாரித்துவிட்டான் தயாளன். அதுவரை ஒரு துப்பு கூட கிடைக்கவில்லை.

Sunday 23 January 2022

ஆறுதல் - சிறுகதை

அப்ரென்டிசாக இருக்கும் போதெல்லாம் காஷுவல் லீவு எடுக்கமுடியாது. அட்டென்டன்ஸ் போய்விடும். தேவைக்கு ஒருநாள் இரண்டுநாள் குறைச்சலாய் இருந்தாலும் பரீட்சைக்குப் போகமுடியாது. கஷ்டம்.  அடுத்த பரீட்சைக்குத்தான் அனுப்புவார்கள். அடுத்த பரீட்சைக்கு ஒரு வருஷம் ஆகும். வருஷ வருஷமாய் காத்திருப்பது ரொம்ப சிரமம். காத்திருக்கிறமாதிரி வீட்டு நிலைமை சரியில்லை. அதனால்தான் லீவ் எதுவும் இல்லாமல் மானேஜரிடம் பர்மிஷன் வாங்கிக்கொண்டு வந்திருந்தான் தங்கராசு. ‘இதோட மூணு பர்மிஷன் ஆய்ட்டுது மிஸ்டர். அடுத்த தரம் வரக்கூடாது. இப்பவே சொல்லிட்டன்என்று மிரட்டிய பிறகுதான் இந்தப் பர்மிஷனைக்கூடத் தந்திருந்தார் மானேஜர்.

உண்மையின் தரிசனம்

 

மு.நடேசன் எழுத்தாளரல்ல. நெய்வேலி சுரங்கத்தில் அறுபதுகளில் அளவையாளராக இணைந்து படிப்படியாக பொறியாளராக உயர்ந்து 1994இல்பணிநிறைவு செய்த ஓர் எளிய குடும்பஸ்தர். அவர் மேச்சேரிக்கு அருகில் காடம்பட்டியானூர் என்னும் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து  பள்ளிப்படிப்பை முடித்தார். வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் ஓர் எழுத்தராக வேலை கிடைத்தபோதும், மேற்படிப்பு படிக்கும் ஆவலால் கோவை தொழில்நுட்பக்கல்லூரியில் சுரங்கவியல் படித்து நெய்வேலியை அடைந்தார். அதற்குப் பிறகு அவர் நெய்வேலியை விட்டுச் செல்லவில்லை. அறுபது ஆண்டுகள் ஓடிவிட்டன.

Sunday 16 January 2022

நன்மையும் தீமையும்


ஏடன் தோட்டம் களிப்பின் உறைவிடம் என்பது ஒரு நம்பிக்கை. அழகான நிலப்பரப்பு, இனிமையான சூழல், விரிந்த வானம், மரங்களும் செடிகளும் கொடிகளுமாக அடர்ந்திருக்கும் பசுமை படர்ந்த இடம் என எங்கெங்கும் பார்க்கப் பார்க்க பரவசமூட்டும் இடமாக அத்தோட்டம் இருக்கிறது. அந்தத் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் இணைப்பறவைகளாக பறந்து திரிந்து மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள். மலர்க்குவியலில் ஒரு மலராக, பறவைக்கூட்டத்தில் ஒரு பறவையாக, அச்சூழலின் ஒரு பகுதியாகவே உல்லாசமாக அலைகிறார்கள். ஏதோ ஒரு கணத்தில் எதிர்பாராத விதமாக அவர்கள் நெஞ்சில் படரும் ஆசை அவர்களை அந்த உல்லாசநிலையிலிருந்து அவர்களை விழவைத்துவிடுகிறது. ஆசை இன்பத்தை வழங்கியபோதும், ஒருவித குற்ற உணர்வையும் வழங்குகிறது. ஆதாம் ஏவாள் காலத்தில் தொடங்கிய அந்த மாபெரும் வீழ்ச்சி நவீன மனிதனின் காலம் வரைக்கும் மீட்சியின்றி தொடர்ந்துகொண்டே உள்ளது.

க.சந்தானம் : நிறைமொழி மாந்தர்

 

இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்  முன்னோடித் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் உடல்நலம் குன்றி 01.08.1920 அன்று மறைந்தார். 12.08.1920 அன்று சென்னைக்கு வந்திருந்த காந்தியடிகள் திருவல்லிக்கேணி கடற்கரையில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்களிடையில் திலகருக்கு அஞ்சலி செலுத்தி தன் உரையைத் தொடங்கினார். திலகரின் அர்ப்பணிப்புணர்வையும் தியாகத்தையும் பெரிதும் பாராட்டிப் பேசினார் காந்தியடிகள். திலகர் மூட்டிவிட்டுச் சென்ற சுதந்திரக்கனல் நாடெங்கும் பரவி வெற்றி கிட்டும் வகையில் இளைஞர்கள் எழுச்சியுடன் பங்கெடுத்துக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து ஒத்துழையாமை இயக்கத்தின் நோக்கத்தையும் எதிர்பார்ப்புகளையும் விரிவாக முன்வைத்தார்.

Sunday 9 January 2022

ஆசையும் கோபமும்


     எங்கள் அலுவலகத்தில் சதாசிவராவ் என்பவர் வேலை செய்துவந்தார். அவருடைய அப்பாவின் பெயர் சாம்பசிவராவ். அவர் சுதந்திரப்போராட்டங்களில் ஈடுபட்டு அடிக்கடி சிறைக்குச் சென்றவர். ஒரு காலத்தில் அவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது சதாசிவராவுக்கு ஏழு வயது. மாதத்துக்கு ஒருமுறை சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு பெங்களூருக்கு வந்து சிறைச்சாலையில் கைதிகள் சந்திப்பு நேரத்தில் சில நிமிடங்கள் பார்த்துவிட்டுத் திரும்பும் அம்மாவோடு சதாசிவராவும் வருவார். அம்மாவிடம் பேசுவதைவிட சிறுவனான அவரிடம்தான் அவர் அதிக நேரம் பேசுவது வழக்கம்.

பூ - சிறுகதை

 தொட்டிப்பாட்டையில் பிணம் அறுக்கிற ஆஸ்பத்திரியைத்தாண்டி முப்பது நாற்பது அடி தூரத்தில்தான் செல்லம்மா ஆயாவின் குடிசை. ஒன்பது பிள்ளை பெற்றும் ஒன்று கூட உருப்படி இல்லாமல் போன மகாராணி கதைதான் ஆயாவின் கதையும். ஆயாவுக்கு ஆறு ஆண்பிள்ளைகளும் மூன்று பெண் பிள்ளைகளும் சுற்று வட்டாரத்தில் உள்ள பதினெட்டு கிராமங்களுக்குள்ளேயே எல்லோரும் தனித்தனியே வாழ்ந்தார்கள். மனசு வைத்தால் பட்டத்து ராணி மாதிரி ஆயாவை உட்காரவைத்துச் சோறு போட முடியும். என்னமோ எல்லோருக்கும் ஒரு உதாசீனம். ஒரு அலட்சியம். ஒண்டிக்கட்டை ஜீவனம்தான் தனக்கு லபித்தது என்று ஆயாவும் அடங்கிக்கிடந்தாள். பிள்ளைகள்பற்றி யாராச்சும் பிரஸ்தாபித்தால் கூடஎன்னமோ உடுங்கம்மா. மாரியாத்த புண்ணியத்துல எல்லோரும் சௌக்கியமா இருந்தா சரிதான். ஏதோ எங்கட்ட இருக்கிற வரிக்கும் இந்தத் தோட்டம் சோறு போடும்என்றாள்.

Sunday 2 January 2022

ரிஷான் ஷெரீப் – ஒரு நட்புப்பாலம்

     

     இலக்கியத்தில் ஒரு மொழிபெயர்ப்பாளரின் பங்களிப்புக்கு முக்கியமானதொரு பங்கு உண்டு. பிறமொழிச் செல்வங்களைத் தேடித்தேடி எடுத்து மொழிபெயர்த்து தம் தாய்மொழி வாசகர்களுக்கு தொடர்ச்சியாக அவர்களே வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.  ஒரு படைப்பாளியாக ஓர் எழுத்தாளருக்கு எந்த அளவுக்கு முதன்மையிடம் உள்ளதோ, அதே அளவிலான முதலிடத்துக்கு மொழிபெயர்ப்பாளர்களும் தகுதியுள்ளவர்கள். ஒரு சூழலில் வாழ்கிறவர்களுக்கு, பிறமொழி இலக்கியங்கள் அந்தந்த மொழிகளுக்குரியவர்களுடைய வாழ்க்கைப்போக்குகளையும் எண்ணப்போக்குகளையும் உணர்வதற்கு மிகவும் உறுதுணையாக உள்ளன. தமிழகச்சூழலில், பாரதியார் தொடங்கி ஒவ்வொரு தலைமுறையிலும் ஒருசில மொழிபெயர்ப்பாளர்கள் உருவாகி மற்ற மொழிகளின் இலக்கியவளத்தை தமிழ்வாசகர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு வாசகர்களாக நாம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம்.

கொண்டைக்குருவி தொகுதியிலிருந்து சில பாடல்கள்

 

மாப்பிள்ளை பொம்மை

 

குடுகுடு தாத்தா வந்தாரு  

கொழகொழ சேற்றை எடுத்தாரு

மடமட என்றே பிசைஞ்சாரு

மாப்பிள்ளை பொம்மை செஞ்சாரு

 

கொழுகொழு மாமா வந்தாரு

மழமழ பொம்மையை பார்த்தாரு

பளபள துணியை கிழிச்சாரு

தொளதொள சட்டை தைச்சாரு