Home

Showing posts with label இராஜாஜி. Show all posts
Showing posts with label இராஜாஜி. Show all posts

Sunday, 18 June 2023

ம.பொ.சிவஞானம் : நிலமிசை நீடு வாழ்பவர்

 

தீண்டாமை ஒழிப்பு இயக்கத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் நாடு தழுவிய நீண்டதொரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார் காந்தியடிகள். அதன் ஒரு பகுதியாக ஒரு மாத காலமாக ஆந்திரப்பிரதேசத்தில்  பயணம் செய்து பல்வேறு கிராமங்களில் மக்களைச் சந்தித்து தீண்டாமை ஒழிப்பு தொடர்பாக உரையாற்றினார். அங்கிருந்து புறப்பட்டு 20.12.1933 அன்று சென்னைக்கு வந்தார். தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்துக்கான இயக்கத்தில் காந்தியடிகள் ஈடுபடுவதை விரும்பாதவர்கள் ‘காந்தி திரும்பிப் போ’ என்று பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை நகரெங்கும் ஒட்டி தம் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஆயினும் பெரும்பாலானோர் அவர் வருகையை மனமார வரவேற்றனர். அன்று ஒரே நாளில் அவர் ஆறு கூட்டங்களில் கலந்துகொண்டார். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தீண்டாமை ஒழிப்பின் தேவையைப்பற்றியும் கதரியக்கம் வளரவேண்டிய தேவையைப்பற்றியும் விரிவாகப் பேசினார்.

Monday, 7 March 2022

ருக்மணி லட்சுமிபதி : ஆர்வமும் அஞ்சாமையும்

 

07.03.1925 அன்று காந்தியடிகள் கதர்ப் பிரச்சாரத்துக்காக சென்னைக்கு வந்திருந்தார். அப்போது அவர் தங்குவதற்கு சீனிவாச ஐயங்கார் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வீட்டுக்கூடத்திலேயே பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது. அவர்களிடையில் கதராடைகளை அணிவது பற்றியும் தீண்டாமை ஒழிப்பைப்பற்றியும் காந்தியடிகள் விளக்கிப் பேசினார்.

Sunday, 16 January 2022

க.சந்தானம் : நிறைமொழி மாந்தர்

 

இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்  முன்னோடித் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் உடல்நலம் குன்றி 01.08.1920 அன்று மறைந்தார். 12.08.1920 அன்று சென்னைக்கு வந்திருந்த காந்தியடிகள் திருவல்லிக்கேணி கடற்கரையில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்களிடையில் திலகருக்கு அஞ்சலி செலுத்தி தன் உரையைத் தொடங்கினார். திலகரின் அர்ப்பணிப்புணர்வையும் தியாகத்தையும் பெரிதும் பாராட்டிப் பேசினார் காந்தியடிகள். திலகர் மூட்டிவிட்டுச் சென்ற சுதந்திரக்கனல் நாடெங்கும் பரவி வெற்றி கிட்டும் வகையில் இளைஞர்கள் எழுச்சியுடன் பங்கெடுத்துக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து ஒத்துழையாமை இயக்கத்தின் நோக்கத்தையும் எதிர்பார்ப்புகளையும் விரிவாக முன்வைத்தார்.

Wednesday, 12 May 2021

காமராஜர் : மண்ணில் பொழிந்த மாமழை

 

முதலாம் உலகப் போர் முடிவடைந்ததும் பஞ்சாபிலும் வங்காளத்திலும் ஆங்கிலேய அரசுக்கு எதிராக பல புரட்சி இயக்கங்கள் தோன்றி வளர்ச்சியுற்றன. ஒருசில இடங்களில் ஆங்கிலேய அதிகாரிகள் தாக்கப்பட்டனர். சிலர் கொல்லப்பட்டனர். அதனால் புரட்சி இயக்கங்களை ஒடுக்கும் வழிவகைகளை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் ஆங்கில அரசு சிட்னி ரெளலட் என்பவரின் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அவர்களுடைய பரிந்துரைகளின் அடிப்படையில் புதியதொரு சட்டத்தை 1919ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இயற்றி நடைமுறைக்குக் கொண்டுவந்தது. புரட்சி இயக்கத்துடன் தொடர்புடையவர் என்று கருதும் எவரையும் அரசு எவ்விதமான வழக்கு விசாரணையுமின்றி கைது செய்து இரண்டாண்டுகள் வரைக்கும் சிறையில் அடைக்க ரெளலட் சட்டம் வழிவகுத்தது.

Saturday, 16 January 2021

சத்தியமூர்த்தி : சோர்விலாத சொலல்வல்லன் - கட்டுரை

 

1914ஆம் ஆண்டில் தொடங்கிய முதலாம் உலகப்போரில் ஆங்கிலேய அரசின் வேண்டுகோளுக்கு இணங்கி ஏறத்தாழ பதினைந்து லட்சம் இந்தியர்கள் பங்கேற்றனர். அவர்களில் 74000 பேர் மரணமடைந்தனர்.  மக்களின் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்ள,  இந்தியர்களுக்கு அரசியல் சுயாட்சியை வழங்கும் திட்டத்தை அரசு மேற்கொண்டது. அதற்காக தலைமைச்செயலாளர் மாண்டேகுவும் வைசிராயான செம்ஸ்போர்டும் இணைந்து சுதந்திரப்போராட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து புபேந்திரநாத் போஸ், ரிச்சர்டு ஹோலி ஹட்சின்சன், வில்லியம் டியூக், சார்லஸ் வென்றி ராபர்ட் ஆகியோருடன் கலந்துரையாடி 1917இல் அறிக்கையொன்றைத் தயாரித்து ஒப்புதலுக்காக இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தனர். வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய சுயாட்சியை வலியுறுத்தும் அந்த அறிக்கையை காந்தியடிகளும் பிற முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.

Wednesday, 13 November 2019

இராஜாஜி - குன்றாத ஊக்கம் - கட்டுரை



முதலாம் உலகப்போரின் முடிவில் பஞ்சாபிலும் வங்காளத்திலும் பல புரட்சி இயக்கங்கள் தோன்றி கிளர்ச்சிகளில் ஈடுபட்டன. மற்றொரு புறத்தில் திலகர், அன்னிபெசன்ட் அம்மையார் தலைமையில் அமைந்த இயக்கங்களும் போராட்டங்களைத் தொடங்கின. இடையில் காந்தியின் தலைமையில் 01.03.1919 அன்று  சத்தியாகிரகம் தொடங்கியது. மக்களிடையில் பரவிய எழுச்சியையும் வேகத்தையும் கண்கூடாகக் கண்ட ஆங்கில அரசு, அந்த எழுச்சியை முளையிலேயே கிள்ளியெறிய நினைத்தது. எனவே அனைத்துவிதமான போராட்டங்களையும் ஒடுக்கி அச்சத்தை விதைப்பதற்கான வழிகளை ஆராய்வதற்காக சர் சிட்னி ரெளலட் என்பவருடைய தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழு பரிந்துரைத்தளித்த ஆலோசனைகளின் அடிப்படையில் ஆங்கில அரசு உடனே ஒரு குற்றவியல் சட்டத்தை அறிவித்தது. அதுவே ரெளலட் சட்டம். அதன்படி ஆட்சியதிகாரத்துக்கு ஆபத்தானவர் எனக் கருதப்படும் எவரையும் எவ்விதமான நீதிமன்ற விசாரணயுமில்லாமல் இரண்டாண்டுகள் சிறையில் அடைக்கலாம் என்ற நிலை உருவானது.