Home

Sunday, 5 July 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 6

 

சுதந்திர தாகம்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட காந்திய ஆளுமைகளுள் டி.எஸ்.சொக்கலிங்கமும் ஒருவர். அவர் ரெளலட் சட்ட எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், கள்ளுக்கடை மறியல், அன்னியத்துணி மறுப்பு என பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றார். பேனா மன்னர் என்றும் தென்காசிச்சிங்கம் என்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட அவர்   தென்காசியைச் சேர்ந்தவர்.  ஜனயுகம், பாரதம், , தமிழ்நாடு, தேசபக்தன், நவசக்தி உள்ளிட்ட பல இதழ்களில் பணியாற்றி தன் மொழியாளுமையை வளர்த்துக்கொண்டார்.

வழி - சிறுகதை

 

வனாந்திரமான இடத்தில் பெரியபெரிய புகை போக்கிகள் முளைத்த கல் கட்டிடத்தின் கம்பீரம் தெருவில் போகும் யாரையும் திரும்ப வைத்துவிடும். இதே பாதையில் வேலை சம்பந்தமாய் நான் அலைய ஆரம்பித்து ஒரு வருஷத்துக்கு மேலிருக்கும். என் வேலைக்கென்றே இலாக்கா மோட்டார் சைக்கிள் ஒன்று என் வசமிருந்தது