Home

Sunday, 6 September 2026

புக் பிரம்மா இலக்கியத் திருவிழா – 2026 : எல்லைகளைக் கடந்த இலக்கியச் சங்கமம்

 

தென்னிந்திய மொழிகளில் தொடர்ச்சியாக எழுதிவரும் மூத்த, இளம் படைப்பாளிகளை முன்னிறுத்தவும் அம்மொழிகளுக்கிடையில் நிகழவேண்டிய இலக்கியப் பரிமாற்றத்தின் தேவையை உணர்த்தவும் கடந்த இரு ஆண்டுகளாக பெங்களூரில் வெற்றிகரமான வகையில் புக் பிரம்மா இலக்கியத்திருவிழா நடைபெற்று வருகிறது. 2026ஆம் ஆண்டுக்குரிய திருவிழா கடந்த 21.08.2026 முதல் 23.08.2026 வரை செயின்ட் ஜான்ஸ் ஆடிட்டோரியத்தின் வளாகத்தில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது. கன்னட நாவலாசிரியரும் ஊடகவியலாளருமான சதீஷ் சப்பரிகெ இந்த அமைப்பின் இயக்குநராக இருந்து நிர்வகித்துவருகிறார்.

ஒன்பது குன்று - முன்னுரை

  

வெவ்வேறு காலகட்டங்களில் சந்திக்க நேர்ந்த சில அரிய மனிதர்களைப்பற்றியும் சில அரிய தருணங்களைப்பற்றியும் சிற்சில சித்திரங்களை அனுபவக்கதைகளாக தொடர்ந்து எழுதி வருகிறேன். கதைக்கட்டுரைகள் அல்லது கட்டுரைக்கதைகள் என்று இவற்றைச் சொல்லலாம். ஏற்கனவே இந்தக் கட்டமைப்பில் தீராத பசிகொண்ட விலங்கு, இருபத்திரண்டு அட்டைப்பெட்டிகள், ஒட்டகம் கேட்ட இசை போன்ற தொகுப்புகள் வந்துள்ளன. அவற்றின் தொடர்ச்சியாக இத்தொகுதியைக் கருதலாம்.

சேய்மைக்காட்சிகளும் அண்மைக்காட்சிகளும்

 

ஆறு மாடிகளைக் கொண்ட பெரியதொரு வணிகவளாகத்துக்கு ஒருநாள் சென்றிருந்தேன். ஆறாவது மாடியில் நண்பருடைய ஓவியப்பயிற்சிக்கூடம் இருந்தது. அவரைப் பார்த்து ஒரு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழைக் கொடுப்பதற்காகத்தான் அங்கு போயிருந்தேன். நான் போன நேரத்தில் அவர் இல்லை. அங்கு ஓவியம் வரைந்துகொண்டிருந்த இரண்டு மாணவர்கள் என்னிடம் காத்திருக்கும்படி சொன்னார்கள். அவர்கள் சுட்டிக்காட்டிய நாற்காலியில் அமராமல் அவர்கள் வரைந்துகொண்டிருந்த ஓவியங்களை ஆர்வத்துடன் பார்க்கத் தொடங்கினேன்.