Home

Showing posts with label காந்த. Show all posts
Showing posts with label காந்த. Show all posts

Sunday, 27 June 2021

தனபால் என்னும் கலைஇயக்கம்

 

தமிழக வரலாறு பற்றிய பல ஆய்வு நூல்களை எழுதிய மயிலை சீனி. வேங்கடசாமி நாடறிந்த அறிஞர். அவர் பள்ளிக்கூட ஆசிரியராக வேலை பார்த்த பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவன் படிப்பதைவிட எப்போதும் ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதைக் கவனித்தார். அதனால் அவர் அந்த மாணவனைப் பார்த்துநீ போய் ஓவியக்கல்லூரியில் சேருடா, அதுதான் உனக்கு நல்லதுஎன்று சொன்னார். அப்போது அந்த மாணவனுக்கு ஓவியக்கல்லூரி இருக்கும் திசை கூட தெரியாது.

Sunday, 15 November 2020

முறியாத இலட்சியமும் முறிந்த காலும் - கட்டுரை

 

கடந்த நூற்றாண்டில் தீண்டாமைக்கு எதிராக நாடெங்கும் மிகப்பெரிய எழுச்சி உருவாகி வந்த சூழலில், தமிழகத்தில் ஆலயப்பிரவேசம் நடைபெற்ற முதல் நகரம் மதுரை. மதுரையை முன்மாதிரியாகக் கொண்டு பிற நகரங்களிலும் கிராமங்களிலும் அடுத்தடுத்து ஆலயப்பிரவேசம் நிகழ்ந்தது. அதன் வழியாக, சாதி சார்ந்த வேறுபாடுகளின்றி எல்லா ஆலயங்களிலும் அனைவரும் நுழைந்து தெய்வத்தை வணங்கி வழிபடும் உரிமை உறுதி செய்யப்பட்டது. பிறகு அது சட்டமாகவும் இயற்றப்பட்டது. ஆலயபிரவேசம் என்பது தமிழ்ப்பண்பாட்டுத் துறையில் நிகழ்ந்த பெரிய மாற்றத்தின் தொடக்கம்.

Monday, 9 November 2020

டால்ஸ்டாயின் மற்றொரு முகம் - கட்டுரை

 


நான் எழுத நினைத்த காந்திய ஆளுமைகளின் வரிசையில் ஆக்கூர் அனந்தாச்சாரியும் ஒருவர். அவரைப்பற்றிய தகவல்களுக்காக ஓராண்டாகத் தேடிக்கொண்டிருந்தேன். வழக்கம்போல நான் சந்திக்கும் அனைவரிடமும் அவரைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லிவைத்தேன். ஒருநாள் என் சென்னை நண்பரொருவர் ஆக்கூரார் எழுதிய சுயசரிதையை தன் இளம்வயதில் படித்திருப்பதாகவும் அந்தப் புத்தகம் சமீபத்திய வெள்ளத்தில் நனைந்து கிழிந்துவிட்டதாகவும் சொன்னார். ஆனால் புத்தகத்தின் பெயரோ, அதில் படித்த தகவல்களோ எதுவுமே அவருக்கு நினைவிலில்லை.