என்னைத்
தேடிவரும் புதிய நண்பர்களை வீட்டுக்கு அருகே உள்ள ஆதர்ஷா திரையரங்கத்துக்கு வந்துவிடச்
சொல்வதுதான் என் வழக்கம். பிறகு, அந்த இடத்துக்குச் சென்று காத்திருந்து, அவர்களை வீட்டுக்கு
அழைத்துச் செல்வேன். இந்த ஏற்பாட்டில் சில
நன்மைகள் உண்டு. பேருந்தில் வருகிறவர்கள் அந்தத் திரையரங்கின் அருகில் உள்ள நிறுத்தத்தில்
இறங்கிவிடலாம். ஆட்டோ அல்லது சொந்த வாகனத்தில் வருகிறவர்கள் விசாரித்துக் கண்டுபிடிப்பது
எளிது. இது முதல் நன்மை. மொழியும் புரியாமல் தெரு அடையாளமும் புரியாமல் திண்டாடுகிற
அலைச்சலை முற்றிலும் தவிர்க்கலாம். இது இரண்டாவது நன்மை.