Home

Showing posts with label ஆலமரத்தில் ஒரு பறவை. Show all posts
Showing posts with label ஆலமரத்தில் ஒரு பறவை. Show all posts

Sunday, 12 January 2020

ஆலமரத்தில் ஒரு பறவை - சிறுகதை



உலகம் முழுக்க வாசகர்களைக் கொண்ட லோட்டஸ்ஆங்கில
இணைய இதழில் புத்தக அறிமுகப்பகுதிகளை எழுதிக்கொண்டிருந்த
சந்திரன் என் இளம்பருவத்துத் தோழன். கூர்மையான அறிவாளி.
படிப்பும் எழுத்துமாகவே வாழ்பவன். ஒரு புத்தகத்தின் வலிமையான
வரிகளும் வலிமையற்ற வரிகளும் அவன் கண்களிலிருந்து
ஒருபோதும் தப்பிவிட முடியாது. இலக்குநோக்கி எய்யப்பட்ட
அம்பைப்போல அவன் கண்கள் சரியாக அவற்றில் படிந்து நிற்கும்.
எந்த மனச்சாய்வுமின்றி சுதந்திரமாக கருத்துரைப்பவன் என்று
சின்ன வயசிலேயே பெயரெடுத்திருந்தான். ஆலமரத்தில் ஒரு
பறவைஎன்னும் தலைப்பில் என் தந்தையாரைப்பபற்றி நான்
எழுதி முடித்திருந்த வாழ்க்கை வரலாற்று நூலின் கையெழுத்துப்
பிரதியை அச்சுக்குத் தரும்முன்னால் அவனிடம் ஒருமுறை
காட்டி கருத்துக் கேட்பது மிகமுக்கியம் என்று மீண்டும்
மீண்டும் வலியுறுத்திக்கொண்டே இருந்தாள் சுலோச்சனா.