பொதுவாக, அம்பு பட்ட மான் என்ற சொல்லைக் கேட்டதும் உயிர்துறக்கும் நிலையில் வலியால் துடிக்கும் ஒரு மானின் சித்திரமே நம் மனத்தில் உடனடியாக எழுகிறது. அதுவே இயற்கை. தினசரி உரையாடல்களில் தம் துயரத்தை வெளிப்படுத்த நினைக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கணத்தில் இச்சொல்லைப் பயன்படுத்துவதை நாம் பார்க்கமுடியும். அதற்கு மாறாக, ஏக்கத்தாலும் தன்னிரக்கத்தாலும் இயலாமையாலும் மனம்கலங்கி நிற்கும் தவிப்புக்கும் அச்சொல் பொருத்தமாக இருக்கிறது. அப்படி ஒரு காட்சியமைப்பு முத்தொள்ளாயிரப் பாடலொன்றில் உள்ளது. அந்தப் பாடலை முன்வைத்து ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார் வளவ. துரையன்.