Home

Showing posts with label இலக்கியக்கட்டுரை. Show all posts
Showing posts with label இலக்கியக்கட்டுரை. Show all posts

Sunday, 28 January 2024

வாசிப்பில் கண்டடைந்த வரிகள்

  

பொதுவாக, அம்பு பட்ட மான் என்ற சொல்லைக் கேட்டதும் உயிர்துறக்கும் நிலையில் வலியால் துடிக்கும் ஒரு மானின் சித்திரமே நம் மனத்தில் உடனடியாக எழுகிறது. அதுவே இயற்கை. தினசரி உரையாடல்களில் தம் துயரத்தை வெளிப்படுத்த நினைக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கணத்தில் இச்சொல்லைப் பயன்படுத்துவதை நாம் பார்க்கமுடியும். அதற்கு மாறாக, ஏக்கத்தாலும் தன்னிரக்கத்தாலும் இயலாமையாலும் மனம்கலங்கி நிற்கும் தவிப்புக்கும் அச்சொல் பொருத்தமாக இருக்கிறது. அப்படி ஒரு காட்சியமைப்பு முத்தொள்ளாயிரப் பாடலொன்றில் உள்ளது. அந்தப் பாடலை முன்வைத்து ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார் வளவ. துரையன். 

Monday, 1 January 2024

தனிப்பிறவி

  

மாலை நடைப்பயிற்சியை முடித்துவிட்டு மேற்கு வானில் கொஞ்சம் கொஞ்சமாக மறையும் சூரியனையும் சிவந்து மங்கலாகும் அடிவானத்தையும் வேடிக்கை பார்த்தபடி மரத்தடியில் உட்கார்ந்திருந்தேன். ”நமஸ்காரா சார்” என்றபடி கையை உயர்த்திக்கொண்டு எதிர்த்திசையிலிருந்து வந்த குல்கர்னி எனக்குப் பக்கத்தில் இருந்த வேர்ப்புடைப்பின் மீது உட்கார்ந்தார்.