Home

Showing posts with label கலை வாழ்க்கைய. Show all posts
Showing posts with label கலை வாழ்க்கைய. Show all posts

Sunday, 2 June 2024

கோபாலகிருஷ்ண பாரதியார் : ஆடிய பாதங்களின் தரிசனம்

  

மாயூரத்துக்கு அருகில் உள்ள கிராமம் ஆனந்தத்தாண்டவபுரம். அங்கே உள்ள அக்ரகாரத்தில் அண்ணுவையர் என்றொரு பண்ணையார் வாழ்ந்துவந்தார். அறநெறி சார்ந்த சிந்தனையும் இசையின் மீது நாட்டமும் உள்ளவர். அவருக்குச் சொந்தமாக ஏராளமான நிலபுலன்கள் இருந்தன. வீடு தேடி வரும் ஏழைகளுக்கு இல்லையென்று சொல்லாமல் அன்னதானம் செய்யும் பழக்கம் கொண்டவராகவும் அவர் வாழ்ந்து வந்தார்.