அரிச்சந்திரன் கதையை அறியாதவர்களே இருக்கமுடியாது. ஒரு பக்கத்தில், சத்தியத்தின் உறைவிடமாக இருக்கிறான் அரிச்சந்திரன். எதை இழந்தாலும் சத்தியத்தின் மீது தான் கொண்டிருக்கும் பற்றை அவன் துறப்பதில்லை. அதற்காக மலையளவு துன்பம் வந்தாலும் எதிர்கொள்ளும் மனநிலையில் இருக்கிறான் . இன்னொரு பக்கத்தில் முனிவர் விசுவாமித்திரர் சத்தியத்தின் வழியிலிருந்து அவனை விலகவைக்க தொடர்ந்து முயற்சி செய்தபடி இருக்கிறார். அறத்தொடு நிற்றல் என்பது அரிச்சந்திரன் இயல்பாகவே இருப்பதால் அவருடைய முயற்சிகள் அடுத்தடுத்து தோல்வியடைகின்றன. இரு விசைகளுக்குமிடையில் வெற்றி தோல்வி மோதல் இறுதிவரைக்கும் நீண்டுகொண்டே போகிறது.