1931ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மேற்கு வங்க மாகாணத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய கார்லிக் என்னும் ஆங்கிலேயர் கொல்லப்பட்டார். மேலும் பம்பாயில் கவர்னராகப் பணிபுரிந்துவந்த ஆங்கிலேய அதிகாரியைக் கொல்லவும் முயற்சி நடைபெற்றது. இத்தகு அரசியல் கொலைகளைக் கண்டித்து 06.08.1931 அன்று பம்பாயில் நடைபெற்ற அனைத்திந்திய காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அம்மாநாட்டில் அத்தீர்மானங்களை முன்வைத்து அன்று காந்தியடிகள் உரையாற்றினார்.