இரண்டு மூன்று ஆண்டுகளாக எனக்கு வரும் மின்னஞ்சல்களின் எண்ணிக்கை சிறுகச்சிறுகக் குறைந்து இப்போது ஒன்று அல்லது இரண்டு என தேங்கிவிட்டது. அவை கூட நண்பர்களிடமிருந்து வந்தவையாக அல்லாமல் ஏதோ நிறுவனங்களிடமிருந்து வந்த நினைவூட்டு மடல்களாகவே பல சமயங்களில் இருக்கும். சில நாட்களில் ஒன்று கூட வந்திருக்காது. மின்சாரமில்லாத நேரத்தில் அறையைத் திறந்துபார்த்ததுபோல இருக்கும். புதிய மடல்கள் எதுவுமற்ற அஞ்சல் பெட்டியின் வெறுமை முகத்தில் அறையும். அக்கணம் கவியும் தனிமையுணர்விலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதல்ல.