கடந்த மாதத்தில் நான்கு மரணங்களை அடுத்தடுத்துப் பார்க்க
நேர்ந்தது. ஒருவர் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். இருபதாண்டுகளாகத் தினமும்
பார்த்து உரையாடியவர். படுக்கச் சென்றவரை நள்ளிரவு நேரத்தில் தாக்கிய நெஞ்சுவலி
உயிரைப் பறித்துவிட்டது. இரண்டாவதாக நிகழ்ந்தது எங்கள் உறவுக்காரர் ஒருவரின்
மனைவியுடைய மரணம். இடைவிடாத காய்ச்சல் என்று மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டவரைப்
பிணமாகத்தான் கொண்டு வந்தார்கள். மூன்றாவதாகப் பார்த்த நிகழ்ச்சி என் அலுவலக
நண்பரின் தந்தையாருடைய மரணம். நான்காவதாக எங்கள் தெருவில் வாழ்ந்த ஒரு பிரமுகரின்
மரணம். அதன் விளைவாக அதிர்ச்சியும் வெறுமையும் என்னை இடையிடாமல் அலைக்கழித்தன.