Home

Showing posts with label குறுநாவல். Show all posts
Showing posts with label குறுநாவல். Show all posts

Sunday, 17 May 2026

நேற்று வாழ்ந்தவர்கள் - குறுநாவல் - பகுதி 1

  

குளிப்பாட்டி முடித்ததும் குதிரையைத் தட்டி அழைத்துக்கொண்டு கரையேறினான் பார்த்தசாரதி.

பார்த்தசாரதிக்கு முன்னால் இருள் பிரியாத ஆகாயம் விரிந்து கிடந்தது. தூரத்தில் கறுப்புச்சித்திரம் மாதிரி ஆலமரங்களும் ரயில்வே ஸ்டேஷனும். ஏரிக்கரையில் இருந்து பஞ்சாயத்து போர்டு தெருவுக்குள் இறங்கும் ஒற்றையடிப்பாதைகூட எழுதி அழித்த மங்கலான கோடு மாதிரி தெரிந்தது. கால் இருளில் பால்மாதிரி ஒரு வர்ணத்தில் குதிரையுடன் பார்த்தசாரதி நடப்பது புராணகாலத்து ராஜகுமாரன் நடப்பதுபோல இருந்தது.

நேற்று வாழ்ந்தவர்கள் - குறுநாவல் - பகுதி - 2

 

( தொடர்ச்சி.......)

நீ சொல்ற வெலயல்லாம் கேட்டப்பறம் இனிமே அதான் செய்யணும்.”

யோவ், எதுக்குய்யா வளவளன்னு பேசிக்னு. சீக்கிரமா ஒரு வெலயச் சொல்லி எடுத்துக்கினு போயா.”

யேன் போவலன்னா போலீஸ்ல சொல்லிருவியா?”

நேற்று வாழ்ந்தவர்கள் - குறுநாவல் - பகுதி 3

(தொடர்ச்சி......) 


த்ச்...எல்லாம் எனக்குத் தெரியும்பா. நா சொல்றத கேளு.”

மாமா.”

அவளால ஒனக்கு சதாகாலமும் இம்சயாத்தான் போச்சே தவிர நிம்மதியே இல்லை. வாழ்நாளு பூராவும் ஒன்ன நிம்மதியில்லாம  அடிச்சிட்டன். அப்பா பார்த்தசாரதி தயவு செஞ்சி என்ன மன்னிச்சிடுப்பா.”

மாமா.”

Monday, 11 May 2026

தனுசு - குறுநாவல் - பகுதி 1

  

கடைசியில் தனுசு அண்ணனை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுவது தான் நல்லது என்று முடிவாகி ராமு, சுந்தரம் சித்தப்பா, கமலக்கண்ணன் மாமா எல்லாரும் ஒரு டாக்சியில் ஏற்றிக் கொண்டு போய் படாதபாடு பட்டு சேர்த்தபிறகு திரும்பினார்கள்

தனுசு - குறுநாவல் - பகுதி 2

ப்ளாக் நெம்பர் சொல்லி பேஷன்ட் பெயர் சரிபார்த்து அறை அடையாளம் தெரிந்து கொண்டு நடந்தவனுக்கு எதிரில் குறுக்கும் நெடுக்குமாய் அலையும் பைத்தியங்களைப் பார்க்க மேலும்மேலும் பயத்தில் மனம் நடுங்கியது ராமுவுக்கு. சட்டென்று திரும்பிப் போய்விடலாமா என்று தோன்றியது. மனசின் நடுக்கத்தைச் சமாளிக்க எங்கேயும் பார்க்காமல் தரையையே பார்த்து நடந்தான். குறிப்பிட்ட அடையாளமிட்ட அறையில் தனுசு அண்ணன் மூலையில் போர்வைச் சுருணைக்குள் கிடந்தான். ராமுவைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்தான்.

Sunday, 30 June 2024

வாழ்வின் திசைகள் - 2

 

இரண்டு

முப்பத்தாறு நாற்பத்தியேழு சீரான வேகத்தில் திருப்பதிச் சாலையில் போய்க்கொண்டிருந்தது. மடங்கி மடங்கி நிழல்கள் விழுகிற இரவில் முதுகு வளைக்காமல் ஸ்டியரிங் முன்னால் அமர்ந்து வண்டி ஓட்டுகிற தாஸின் தோரணை ஒரு ரிஷிகுமாரனைப் போல இருந்தது குமரேசனுக்கு.