Home

Sunday 24 December 2023

திண்ணை வைத்த வீடு

 

எங்கள் தெருவில் சின்னச்சின்ன கூரை வீடுகளே அதிக எண்ணிக்கையில் இருந்தன. எட்டு வீடுகள் மட்டுமே மெத்தை வீடுகளாகவும் ஓட்டு வீடுகளாகவும் இருந்தன. சிறிதாகவோ பெரிதாகவோ, அந்த எட்டு வீடுகளும் திண்ணை வைத்துக் கட்டப்பட்டிருந்தன. சிமெண்ட் பூசிய திண்ணை எப்போதும் குளிர்ந்திருக்கும். ஒவ்வொரு திண்ணையும் பத்து பேர் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு பெரியது. வழவழப்பான உருண்ட உயரமான மரத்தூண்கள் திண்ணைகளுக்கு அழகு சேர்க்கும்.

ஊற்று

  

ஒருநாள் நண்பர்களோடு ஸ்டேஷன் திடலில் வழக்கம்போல பந்து விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது, தொலைவில் ரயில்வே குடியிருப்புக்கு முன்னால், உலக்கைபோல உறுதியானதும் அதைவிட நீளமானதுமான ஒரு குழாய் செங்குத்தாக நிறுத்தப்பட்டு பூமியைத் துளைத்துக்கொண்டிருப்பதைக் கவனித்தேன். ”அங்க ஒரு அடிபம்ப் வைக்கப்போறாங்கடா” என்று சொன்னான் நெடுஞ்செழியன்.

Monday 18 December 2023

அதிர்ஷ்டத்தைத் தேடி


சீனிவாசா பட்டாணிக்கடைக்கு பெயர்ப்பலகை எதுவும் கிடையாது. ஆனாலும் வளவனூரில் எல்லோருக்கும் தெரிந்த கடை அது. கடைத்தெருவில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் அந்தக் கடை இருந்தது.

மூடும் கதவுகளும் திறக்கும் கதவுகளும்

 

எங்கள் அப்பாவுக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் இருந்தனர். ஒருவரை பெரிய பெரியப்பா என்றும் இன்னொருவரை சின்ன பெரியப்பா என்றும் அழைப்போம். இருவருமே கட்டட வேலை செய்பவர்கள். ஒருவர் பெரிய மேஸ்திரி. இன்னொருவர் சின்ன மேஸ்திரி.

Sunday 10 December 2023

தாத்தா

  

மட்டையும் பந்தும் கிடைக்காத நேரங்களில் நாங்கள் ஆடும் விடுமுறை விளையாட்டு கோட்டிப்புள். தரையில் கிடக்கும் புள்ளை நெம்பி யாருடைய கைக்கும் எட்டாத உயரத்தில் விர்ரென்று வானத்தை நோக்கிப் பறக்கவைக்கும்போதும் லாவகமாக தட்டி எழுப்பி கோட்டியால் அடித்து பறக்கவைக்கும்போதும் நாமும் அத்தோடு இணைந்து பறப்பதுபோல இருக்கும். பரவசமூட்டும் அந்த உணர்வுக்கு ஈடு இணையே இல்லை.

எஸ்.வி.எஸ். என்னும் மாமனிதர்

  

காந்தியத்தின் மீது ஈடுபாடு கொண்ட மூத்த பத்திரிகையாசிரியரும் கட்டுரையாளருமான அ.இராமசாமி அவர்களின் நூற்றாண்டையொட்டி, அவர் எழுதிய ’தமிழ்நாட்டில் காந்தி’ என்னும் நூலை சந்தியா பதிப்பகம் சிறப்புப்பதிப்பாக வெளியிட்டது. அந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா 07.07.2023 அன்று சென்னையில் காந்தி கல்வி மையத்தில் நடைபெற்றது. நான் அவ்விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னைக்குச் சென்றிருந்தேன்.

Sunday 3 December 2023

முடிவு - சிறுகதை

 ஒரு கோழையைப் போல ஊரைவிட்டுப் போனவன் மீண்டும் திரும்பியிருக்கிறேன். நேற்றுப் போல்தான் நினைக்கத் தோன்றுகிறது. எட்டு வருஷங்கள் பறந்துவிட்டன. எல்லாவற்றிற்கும் அம்மாதான் காரணம் என்று நான் சொல்ல நினைக்கும் ஒரு காரணமே போதும், இன்னும் நான் கோழையாய்த்தான் இருக்கிறேன் என்பதற்கு. காலம் எதையுமே எனக்குள் மாற்றிவிடவில்லை.

சூறை - சிறுகதை

 

இரண்டு பதவி உயர்வுகளுக்கப்புறம் இந்த ரயில்வே ஸ்டேஷனைப் பார்க்க வந்திருக்கிறேன். ஸ்டேஷனா இது? குட்டிச்சுவர். சொந்த ஊரிலிருந்து நாலுமைல் தூரத்திலிருக்கிற இடத்தைப் பார்க்காமல் திரும்பினால் எப்படி? பொழுது போக எனக்கும் ஒரு வேலை வேண்டுமே. பதினைந்து ஆண்டுகளுக்குப்புறம் இந்த இடம் எப்படி இருக்கிறது என்று பார்க்கிற அல்ப ஆசை என்றுகூட நினைத்துக் கொள்ளுங்கள்.