Home

Saturday 23 September 2023

விடுதலை - கட்டுரை

 

காலையில் பத்து மணிக்குத் தொடங்கும் எங்கள் பள்ளிக்கூடம் மாலை நான்கரை மணிக்கு முடிவடையும். அதன் அடையாளமாக தலைமையாசிரியர் அறையின் வாசலையொட்டி இருக்கும் தூணுக்கு மேலே கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் தண்டவாளத்துண்டில் கம்பங்கதிர் மாதிரி நீண்டிருக்கும் இன்னொரு இரும்புக்குச்சியால் அடித்து எழுப்பப்படும் நீண்ட டண்டண்டண் மணியோசை எழுந்து வரும். அதைப்போன்ற இனிமை மிகுந்த ஓசை இந்த உலகத்திலேயே இல்லை என்ற எண்ணம் தோன்றாத நாளே இல்லை.

மானுட வாழ்வின் ஆழத்தைத் தேடிச் செல்லும் பெரும்பயணம் - தீராநதி நேர்காணல். சந்திப்பு : அருள்செல்வன்

 

சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம் நாடகம் என பல்வேறு வகைமைகளில் எழுதி சாதனை புரிந்திருப்பவர் பாவண்ணன். மொழிபெயர்ப்புக்குரிய சாகித்ய அகாதெமி விருது, கனடாவின் இலக்கியத் தோட்ட இயல் விருது உள்ளிட்ட பல பெருமைக்குரிய விருதுகளைப் பெற்றுள்ள அவருடன் ஓர் உரையாடல்.

Sunday 17 September 2023

காட்சி மயக்கம் - கட்டுரை

 

ஒவ்வொரு வாரமும் எங்கள் பள்ளிக்கூடத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கும் பழக்கம் இருந்தது.  அந்த இரு நாட்களில் ஞாயிறு ஒருநாள் மட்டுமே நண்பர்களோடு சேர்ந்து  என்னால் விளையாடமுடியும்.  சனிக்கிழமையில் அந்த வாய்ப்புக்கு வழியில்லை. அன்று அப்பாவுடைய தையல் கடைக்குச் செல்லவேண்டும். அங்கு காஜா எடுப்பது, பட்டன் தைப்பது, துணி மடிப்பது போன்ற கைவேலைகளில் உதவி செய்யவேண்டும். அது அப்பாவுடைய கட்டளை.  அந்தக் கட்டளைக்கு உடன்படவேண்டும் என்பது அம்மாவுடைய கட்டளை.

அழைப்பு - சிறுகதை

 

அமைதியா நாலஞ்சுமணிநேரம் தூங்குவாங்க மிஸ்டர் பார்த்திபன். அதுக்குத்தான் இப்ப மரு:நது குடுத்திருக்கேன். க்ளினிக்ல சேக்கறதபத்தி இப்பவாவது நீங்க சரியான ஒரு முடிவுக்கு வரணும். சரியான மெடிகேஷன் இல்லாம இங்க வச்சி நீங்களா கவனிச்சிக்கறது ரொம்ப கஷ்டம். எத்தன தரம் சொன்னாலும் ஒங்களுக்குப் புரியறதில்லை. நீங்க நிர்மலாவுக்கு ஒரு கணவனாதான் இருக்க முடியுமே தவிர ஒரு டாக்டரா இருக்க முடியாது. இது ஏன் தெரியலை உங்களுக்கு?” என்று கேட்டார் டாக்டர். வருத்தமான புன்னகையுடன் ஒருகணம் அவரை நிமிர்ந்து பார்த்தான் பார்த்திபன். “இனிமே எச்சரிக்கையா இருக்கிறேன் டாக்டர். இன்னொருமுறை இப்பிடி நடந்ததுன்னா ரெண்டாவது யோசனைக்கே இடமில்லை டாக்டர் நேரா அட்மிஷன்தான்என்றான் கசந்த புன்னகையோடு, சிறிது நேரம் அவனை ஆழ்ந்த அனுதாபத்துடன் பார்த்தார் டாக்டர். பிறகு.கே. டேக் கேர்என்று பெருமூச்சுடன் அவன் தோளைத் தட்டிக்கொடுத்துவிட்டு புறப்பட்டுச் சென்றார். அறைக்குச் சென்று உறக்கத்தில் ஆழ்ந்திருந்த நிர்மலாவை சில நொடிகள் பார்த்தபடி நின்றான் பார்த்திபன். வெட்டி வீழ்த்தப்பட்ட வாழையைப்போல கிடந்தாள் அவள். தலைமுடி கலைந்து கிடந்தது. ஒட்டிப்போன கன்னம். இளஞ்சிவப்பில் வெடித்த உதடுகள். கீழுதடுமட்டும் சற்று பெரிதாக தூக்கலாக தெரிந்தது. சீரான மூச்சில் தொண்டைக்குழி ஏறி இறங்கியது.

Sunday 10 September 2023

சி.சுப்பிரமணியம் : உலகத்தார் உள்ளத்தில் உறைந்தவர்

  

காந்தியடிகள் 05.09.1920 அன்று அறவழியில் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார்.  ஒவ்வொரு குடிமகனும் தம் எதிர்ப்பைப் புலப்படுத்தும் விதமாக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொள்ளவேண்டும் என்று காந்தியடிகள் விரும்பினார். அவருடைய ஆணைக்கிணங்கி, வழக்கறிஞர்கள் அரசு நீதிமன்றங்களையும் மாணவர்கள் அரசு கல்லூரிகளையும் புறக்கணித்து வெளியேறினர். அரசு ஈட்டிவந்த வருமானத்தைக் குறைக்கும் வகையில், அயல்நாட்டு ஆடைகளை விற்பனை செய்யும் கடைகளின் முன்பும் கள்ளுக்கடைகள் முன்பும் நின்றும் தொண்டர்கள் மறியல் செய்தனர். இவ்வியக்கத்துக்கு நாடெங்கும் கிடைத்த மகத்தான ஆதரவினால் எங்கெங்கும் அகிம்சை வழியிலான போராட்டம் பரவியது.

ஜெயதேவி இல்லம் - கட்டுரை

   

பஞ்சாயத்து போர்டு தெருவும் பிள்ளையார் கோவில் தெருவும் சந்திக்கிற இடத்தில் ஒரு பெட்டிக்கடை இருந்தது. இரண்டு தெருக்களும் சந்திக்கும் புள்ளியில் அந்தக் கடை இருந்ததால், அதற்கு மூலைக்கடை என்ற பெயர் இயல்பாகவே அமைந்துவிட்டது. அதை நடத்தி வந்தவர் ஜெயராமன் என்பவர். அதனால் ஜெயராமன் கடை என்று இன்னொரு பெயரும் உண்டு.  வயது குறைந்த சின்னப்பிள்ளைகள் மூலைக்கடை என்று குறிப்பிட்டனர். வயதில் பெரியவர்கள் ஜெயராமன் கடை என்று அழைத்தனர். ஆனால் நான் அந்தக் கடைக்கு இந்த இரு முறைகளிலிருந்தும் வேறுபட்ட வகையில் மற்றொரு பெயரைச் சூட்டியிருந்தேன்.

Monday 4 September 2023

மயக்கம் எனது தாயகம்

  

சினிமாப்பாட்டு பாடுவதும் கேட்பதும் அந்தக் காலத்தில் எங்களுக்கு வாய்த்த பெரிய பொழுதுபோக்கு. சினிமாப்பாட்டு பாட பெரிய சங்கீத ஞானமெல்லாம் தேவையில்லை. பாடல்வரிகளை தப்பில்லாமல் பாடினால் போதும். நாலைந்து முறை அடுத்தடுத்து கேட்டால், எல்லாப் பாட்டும் மனப்பாடமாகிவிடும். வரிகளை மறந்துபோனால் கூட பரவாயில்லை. ராகத்தின் போக்கை மட்டும் அடிப்படையாகக்கொண்டு இழுத்து இழுத்து சமாளித்துவிடலாம்.

உறவு - சிறுகதை

  

கடைசியாய் ஆப்பம் வாங்கித் தின்றவனையே கூடையைத் தூக்கிவிடச் சொல்லித் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள் கிழவி.

ஏரிக்கு இந்தப் பக்கம் சாலையாம்பாளையம். அந்தப் பக்கம் வளவனூர். வனாந்தரமாய் நடுவில் வெடித்துக் கிடந்தது பூமி. வருஷத்தில் இரண்டு மாசமோ மூணு மாசமோதான் தண்ணீர் இருக்கும். அதுவும் எவனாவது புண்ணியவான் மனசுவைத்து சாத்தனூர் அணையைத் திறந்தால்தான் உண்டு. இல்லாவிட்டால் இல்லை. வெறும் மழைத்தண்ணீர்தான் தேங்கி நிற்கும்