ஆங்கிலேயர் போற்றும் மாபெரும் நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர். அவர் எழுதிய நாடகங்கள் அனைத்தும் மேடையில் நடிக்கப்பட்டனவே தவிர, அவை நூல்வடிவம் பெறவில்லை. அவர் எழுதிய முப்பத்தாறு நாடகங்களில் அவர் உயிரோடு இருந்த காலத்தில் பதினெட்டு நாடகங்கள் மட்டுமே நூல்வடிவம் பெற்றிருந்தன. எஞ்சியவை கையெழுத்துப் பிரதிகளாகவே இருந்தன. அவருடைய மறைவுக்குப் பிறகு, அவருடைய நாடகங்களில் நடித்துவந்த ஜான் ஹெமிங்க்ஸ் என்பவரும் ஹென்றி கோண்டெல் என்பவரும் இணைந்து அனைத்து நாடகப் பிரதிகளையும் உள்ளடக்கி FIRST FOLIO என்னும் தலைப்பில் 1623இல் ஒரு தொகைநூலை அச்சிட்டு வெளியிட்டனர். இதுவே ஷேக்ஸ்பியரின் முதல் நாடகத் தொகுப்புநூல். இவை 750 பிரதிகள் மட்டுமே அந்தக் காலத்தில் அச்சிடப்பட்டன. ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் கடந்த நிலையில் அச்சிட்ட பிரதிகளில் தற்சமயத்தில் எஞ்சியிருப்பவை 19 பிரதிகள் மட்டுமே. அவற்றில் நல்ல நிலையில் இருப்பது ஒரே ஒரு பிரதி மட்டுமே. ஒரு மதபோதகரின் நூலகத்தை ஏலத்தில் எடுத்த போது, இன்னொரு மதபோதகரின் கைக்குச் சென்றது அப்பிரதி. அவரே இன்றுவரை அப்பிரதியைப் பாதுகாத்து வருகிறார்.