Home

Showing posts with label சிதம்பரம். Show all posts
Showing posts with label சிதம்பரம். Show all posts

Monday, 12 July 2021

செல்வராஜ் : சிறுகதைகளின் ரசிகர்

  

திண்ணை இணைய இதழில் 2002-2003 காலகட்டத்தில் எனக்குப் பிடித்த கதைகள் என்றொரு தொடரை எழுதிவந்தேன். மொத்தம் நூறு அத்தியாயங்கள். நூறு இதழ்களில் அவை தொடராக வெளிவந்தன. தொடரின் முதல் நாலைந்து அத்தியாயங்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே என்னோடு மின்னஞ்சல் வழியாக தொடர்புகொண்டு ஒரு வாசகர் பாராட்டி எழுதினார். அவர் நண்பர் செல்வராஜ். அவருடைய சொந்த ஊர் சிதம்பரம்.