காந்தியடிகளின் மகன்களில் ஒருவரான இராமதாஸ் காந்தியின் மகன் கனு காந்தி. குழந்தைப்பருவத்திலிருந்தே காந்தியடிகளின் ஆசிரமத்திலேயே வளர்ந்துவந்தவர். வங்காளத்திலிருந்து ஆசிரமத்துக்கு வந்து குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆபா. (பிற்காலத்தில் கனுவை மணந்து ஆபா காந்தியானவர்) இவ்விருவருமே ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காந்தியடிகளை மிக நெருக்கத்தில் நின்று பார்க்கும் வாய்ப்புகளைப் பெற்றிருந்தனர். காந்தியடிகளின் முதுமைக்காலத்தில் அவருக்குத் துணையாக இருக்கும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைத்தது.