ராஜேந்திரன் என்னுடைய நீண்ட நாள் நண்பர். ஐம்பது வயதைக் கடந்த நிலையில் திடீரென அவருடைய உடல்நிலை குன்றியது. பல பரிசோதனைகளுக்குப் பிறகு அவருடைய சிறுநீரகம் முழு ஆற்றலுடன் செயல்படவில்லை என்று மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். வாரத்துக்கு ஒருமுறை ரத்தத்தைத் தூய்மைப்படுத்தும் வகையில் டயாலஸிஸ் செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துவிட்டனர்.