Home

Wednesday 22 August 2018

பாய்ந்து பரவும் நதி - முன்னுரை



எல்லோ இதே நம் மனெ, இல்லி பந்தே சும்மனேஎன்பது பசவண்ணர் எழுதிய ஒரு வரி. ஓசை நயத்துடன் கூடிய அந்த வரியை மனத்துக்குள் பலமுறை திரும்பத்திரும்ப அசை போட்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அது ஒவ்வொரு பொருளைத் தருகிறது. அதன் காந்தத் தன்மைக்கு ஈடு இணையே இல்லை. “எங்கோ இருக்கிறது என் வீடு, இங்கே சும்மா வந்தேன்என்பதுதான் இதன் நேரிடையான தமிழ் மொழிபெயர்ப்பு. வாழ்க்கையை மிக எளிதான செயலாக வகைப்படுத்துகிறார் பசவண்ணர். பொழுதுபோக்குக்காக ஆற்றங்கரையிலோ அல்லது கடற்கரையிலோ அல்லது ஏதாவது ஒரு தென்னந்தோப்பிலேயே வந்து நிற்கிற மாதிரி வாழ்க்கையைப் பார்க்கத் தூண்டுகிறார்.

நான்கு கனவுகள் – சிறுவர் கதைத்தொகுதி





முன்னுரை

அன்புள்ள சிறுவர் சிறுமியருக்கு

வணக்கம். உங்களுக்கு இப்போது என்ன வயதிருக்கும்? பத்து, பதினொன்று, பன்னிரண்டு என ஏதோ ஒன்றாக இருக்கலாம் என நினைக்கிறேன். ஒருவேளை அதற்கும் குறைவாகவும் இருக்கலாம். குழந்தைகளே, அந்த வயதை நானும் கடந்து வந்திருக்கிறேன். அதனாலேயே உங்களைப்போன்ற வயதினருக்கு மிகவும் பிடித்த விஷயங்களை நானும் தெரிந்துவைத்திருக்கிறேன். உங்களைப்போலவே, நானும் விளையாடியிருக்கிறேன், கதை கேட்டிருக்கிறேன். கதைகள் கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும்.

Tuesday 7 August 2018

பெரியவன் என்பவன் - கட்டுரை



வீட்டுக்குள் நுழைந்து பள்ளிக்கூடப் பையை வைத்ததுமேகைகால கழுவிகினு கடபக்கமா போய் அப்பாவ பாத்து செலவுக்கு காசு வாங்கிட்டு வரியா?” என்று கேட்டாள் அம்மா. “சரிம்மாஎன்றபடி தோட்டத்துப்பக்கம் சென்று பானையிலிருந்த தண்ணீரில் கைவைத்தேன். பக்கத்தில் வேலியோரமாக ஒரு சின்னஞ்சிறு புளியங்கன்று விரல்நீளத்துக்கு பச்சைப்பசேலென நின்றிருப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அதன் வேர்ப்பகுதியில் கோழிகளால் சீய்க்கப்பட்ட பள்ளங்களை காலாலேயே மண்ணை இழுத்துத்தள்ளிச் சரிப்படுத்தினேன். வேகவேகமாக அது வளர்ந்து திசையெங்கும் கிளைவிரித்தபடி அடர்ந்து நிற்கிற காலம் விரைவில் வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ”கைகால கழுவறதுக்கு எவ்வளோ நேரம்டா? சட்டுசிடுக்குனு வர தெரியாதா? வெளக்கு வைக்கற நேரத்துல அனுப்பாதன்னு எத்தன தரம் சொன்னாலும் புத்தி வராதா ஒனக்குனு அவருகிட்ட திட்டு வாங்கவைக்கறதே ஒனக்கு வேலயா போச்சி. ஒரு தலச்சம்புள்ளயாட்டமா நீ நடந்துகிற?” என்று உச்சத்துக்குச் செல்லும் அம்மாவின் குரல் மண்ணுலகத்தைநோக்கி என்னை இழுத்தது. ”தோ, வந்துட்டம்மாஎன்றபடி வேகவேகமாகத் திரும்பி, ஒரு தம்ளர் தண்ணீரை எடுத்துப் பருகிவிட்டு கடைக்குக் கிளம்பினேன்.

மனக்குதிரையேறிச் செய்த பயணங்கள் – கட்டுரை


ஒன்றுமுதல் மூன்று வகுப்புகள் வரை நான் வளவனூர் அரசு தொடக்கப்பள்ளியில் படித்தேன். நான்காம் வகுப்பையும்  ஐந்தாம் வகுப்பையும் கோவிந்தையர் நடுநிலைப்பள்ளியில் சேர்ந்து முடித்தேன். ஆறு முதல் பதினோராம் வகுப்பு வரை அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்தேன்.

Saturday 4 August 2018

பெளத்த மீட்டுருவாக்கத்தில் பெரும்பங்காற்றியவர் -’க.அயோத்திதாசர் ஆய்வுகள்’ கட்டுரைத் தொகுப்பு அறிமுகம்



ஸ்ரீலஸ்ரீ அயோத்திதாஸ பண்டிதர் என்று பெளத்த தலித்துகளால் மிகுந்த மரியாதையாக விளிக்கப்பட்ட க.அயோத்தி தாசர் மிகச்சிறந்த சிந்தனையாளர் . கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக வெளியுலகம் அறியவராத அவரது எழுத்துகள் அனைத்தும் ஞான.அலாய்சியஸ் என்பவரால் பதிப்பிக்கப்பட்டு சமீபத்தில் தொகைநூல்களாக வெளிவந்தன. தாசரின் சிந்தனைகளும் இலட்சியங்களும் சாதிமதமற்ற அற வாழ்க்கையையும் கருணையும் அன்பும் மிக்க மேம்பட்ட மனித உறவுகளையும் பற்றியவை. அவரது ஆய்வுகளை முன்வைத்து, தாசரின் அணுகுமுறைகள், இலட்சியங்கள், ஈடுபாடுகள், கொள்கை உறுதி எனப் பலவிதமான உண்மைகளைக் கண்டறிந்து தொகுத்தளிக்கும் முயற்சியை மேற்கொண்ட ராஜ்.கெளதமன் தமிழுலகின் பாராட்டுக்குரியவர். ஏற்கனவே அ.மாதவையாவின் படைப்புகள், புதுமைப்பித்தன் சிறுகதைகளை முன்வைத்து அவர் நிகழ்த்திக்காட்டிய ஆய்வுகளில் வெளிப்பட்ட கூர்மையும் வாதநுட்பமும் வாசகர்களை ஈர்க்கும் விதத்தில் அவற்றை முன்வைக்கும் திறமும் இந்நுாலிலும் காணப்படுகின்றன.

அடையாளத் தழும்புகள் - சிலுவைராஜ் சரித்திரம்



ஒரு மனிதனுடைய முதல் இருபத்தைந்து ஆண்டுக்கால வாழ்க்கை என்பது மிக முக்கியமான பகுதி. இந்த மண்மீது இருக்கிற எல்லாவற்றைப்பற்றியும் சொந்தமான ஒரு பார்வையை உருவாக்கிக்கொள்ளும் காலம் இது. எடுத்துக்காட்டாக உறவுகள், நட்பு, தெருமனிதர்கள், சாதிகள், தொழில், கல்வி, காமம் ஆகியவற்றைப்பற்றி இளமையில் உருவாகும் மனப்பதிவுகள் ஆழ்மனத்தில் அழுத்தமாகத் தங்கிவிடுகின்றன. எஞ்சிய காலத்தின் வாழ்க்கைப் படகைச் சீராகத் திசையறிந்து செலுத்த இந்த அனுபவ ஒளியே கலங்கரை விளக்கமாக நிற்கிறது.