ஆங்கிலவழிப் பள்ளியொன்றில் சேர்ந்து கல்வி பெறுவதற்கான தகுதித்தேர்வொன்றை ஆங்கில அரசு நடத்தி, அத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகையாக மாதத்துக்கு ஐந்து ரூபாய் வழங்கி வந்தது. 11 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாணவர்கள் அனைவரும் இத்தேர்வை எழுதத் தகுதியுள்ளவர்கள். கொலாபா மாவட்டத்தைச் சேர்ந்த அலிபாக் என்னும் சிற்றூரில் தொடக்கப்பள்ளியில் படித்த மாணவனொருவன் 1914 ஆம் ஆண்டில் இத்தேர்வை எழுதி வெற்றி பெற்றான். ஆங்கிலப்பள்ளியில் சேர்ந்து உயர்கல்வி கற்கும் கனவுகளைச் சுமந்தபடி மஹாத் ஆங்கிலப்பள்ளியில் சேர்க்கை விண்ணப்பத்தைக் கொடுத்தான். அங்கிருந்த பள்ளி அதிகாரிகள் அம்மாணவர் சாதியடுக்கில் கீழ்நிலையில் உள்ளவன் என்று புரிந்துகொண்டதும் பள்ளியில் சேர்த்துக்கொள்ள மறுத்தனர்.