சுதந்திரத்துக்கும் சமத்துவத்துக்கும் பாடுபட்ட காந்தியடிகள் இந்தியர்கள் அனைவரும் நேர்மையோடும் தன்மானத்தோடும் வன்முறையற்ற நல்லிணக்கத்தோடும் தம் வாழ்க்கையை வாழவேண்டும் என்பதற்காகவும் பாடுபட்டார். அபூர்வமான அந்த மகத்தான ஆளுமையால் ஈர்க்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் நாடெங்கும் தேச சேவையிலும் அவருடைய நிர்மாணப்பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார்கள். அதற்காக தம் வாழ்க்கையையே அர்ப்பணித்தார்கள்.