Home

Showing posts with label பேரருவி. Show all posts
Showing posts with label பேரருவி. Show all posts

Monday, 21 December 2020

மாபெரும் தரிசனம் - ‘பேரருவி’ நாவலுக்கான முன்னுரை


கலாப்ரியா நம் காலத்து முதல்வரிசைக் கவிஞர்களில் ஒருவர். கவிஞருக்கே உரிய கவனிக்கும் கண்களைக் கொண்டவர். வேடந்தாங்கல் சரணாலயத்தில் நிறைந்திருக்கும் பறவைகள்போல அவருடைய கவியுலகில் துண்டுதுண்டான எண்ணற்ற காட்சிகள் நிறைந்திருக்கின்றன. ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு தருணத்தில் ஒவ்வொருவிதமான எண்ணங்களை எழுப்பும் ஆற்றல் கொண்டது.