Sunday 12 May 2024
வடிகால் - சிறுகதை
தாகூர் : மண்ணில் நிகழ்ந்த அற்புதம்
தன் அண்ணன்மார்கள் அனைவரும் பள்ளிக்கூடத்துக்குச் செல்வதைப் பார்த்துவிட்டு, அக்குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனொருவன் தன்னையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவேண்டும் என்று தன் அப்பாவிடம் அழுது அடம்பிடித்தான். பள்ளிக்குச் செல்லத் தொடங்கினால் சுதந்திரமாகத் திரியலாம் என்றும் வீட்டுச்சிறையிலிருந்து விடுபடலாம் என்றும் அவன் நினைத்தான். அவன் நினைப்பதுபோல பள்ளிவாழ்க்கை அந்த அளவுக்கு இன்பமாக இருக்காது என்று பலர் அவனிடம் எடுத்துச் சொன்னார்கள். ஆனால் அவன் கேட்கவில்லை. அழுது மன்றாடியதால் அவனுடைய தந்தையார் அவனை பள்ளிக்கு அனுப்பிவைத்தார்.
Saturday 4 May 2024
சரோஜினி தேவி : இந்தியப்பெண் என்னும் அடையாளம்
முப்பத்தொன்றாவது இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு லக்னோவில் 26.12.1916 முதல் 30.12.1916 வரை அம்பிகா சரண் மஜும்தார் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட காந்தியடிகள், ஒப்பந்தத்தின் அடிப்படையில் அயல்நாட்டுக்குத் தொழிலாளர்களை அனுப்புவது தொடர்பாக, அதுவரை அரசாங்கம் பின்பற்றி வந்த நடைமுறையை எதிர்த்து ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார். அந்தத் திட்டத்தின் கீழ் ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் மரபை உடனடியாக அரசு கைவிடவேண்டும் என்றும் குரல் கொடுத்தார். அந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதற்கு பார்வையாளர்களிடமிருந்து மகத்தான ஆதரவும் கிடைத்தது.
அந்தக் காலத்து நண்பர்கள்
அம்ருதா மாத இதழில் இருபத்தைந்து மாதங்களாக விட்டல்ராவ் ’தொலைபேசி நாட்கள்’ என்னும் தலைப்பில் எழுதிவந்த தொடரை கடந்த ஆண்டு நிறைவுசெய்தார். 2024 ஜனவரியில் தொடங்கிய புத்தகக்கண்காட்சிக்கு முன்பாக, அவருடைய புகைப்படத்தையே அட்டைப்படமாகக் கொண்டு அந்தத் தொடர் புத்தக வடிவில் வெளியானது. நல்ல கட்டமைப்பில் 256 பக்கங்களில் அந்தப் புத்தகத்தை அம்ருதா பதிப்பகமே வெளியிட்டிருந்தது.