தன் அண்ணன்மார்கள் அனைவரும் பள்ளிக்கூடத்துக்குச் செல்வதைப் பார்த்துவிட்டு, அக்குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனொருவன் தன்னையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவேண்டும் என்று தன் அப்பாவிடம் அழுது அடம்பிடித்தான். பள்ளிக்குச் செல்லத் தொடங்கினால் சுதந்திரமாகத் திரியலாம் என்றும் வீட்டுச்சிறையிலிருந்து விடுபடலாம் என்றும் அவன் நினைத்தான். அவன் நினைப்பதுபோல பள்ளிவாழ்க்கை அந்த அளவுக்கு இன்பமாக இருக்காது என்று பலர் அவனிடம் எடுத்துச் சொன்னார்கள். ஆனால் அவன் கேட்கவில்லை. அழுது மன்றாடியதால் அவனுடைய தந்தையார் அவனை பள்ளிக்கு அனுப்பிவைத்தார்.