Home

Sunday 21 July 2024

வாழ்வின் திசைகள் - 5

 

ஐந்து

வெடிஞ்சி இன்னுமாய்யா -தூக்கம் ஏந்துரு ஏந்துரு

எவனோ ஒருவன் அதட்ட அரைகுரையாய் விழிப்பு மூள  அப்புறம் சட்டென்று எழுந்து  உட்கார்ந்து கண்களைக் கசக்கிக் கொண்டு நிமிர்ந்து பார்த்தான் குமரேசன்.

என்னப்பா பாக்கற? ஏந்துரு

மணி என்ன

வெடிஞ்சி அரமணி நேரம் ஆச்சி, ஏந்து நடயக் கட்டு

ம்

ஆற்றாமையும் வேதனையும்

 

கடலைக் களவாடுபவள் என்னும் தலைப்பில் அமைந்த புதிய கவிதைத் தொகுதிக்கான தன் முன்னுரையை சுஜாதா செல்வராஜ் தன் அன்னையைப்பற்றிய ஒரு நினைவுக்குறிப்போடு தொடங்குகிறார். ஒரு பெரிய கூட்டுக்குடும்பத்தில் அந்தக் காலத்தில் மூத்த மருமகளாக வாழ்க்கைப்பட்டவர் அவர். பெரிய குடும்பம் என்னும்போது பெரிய பெரிய பிரச்சினைகளும் இருந்திருக்கக்கூடும். அவருக்கும் பிறர் மீது சிற்சில சமயங்களில் கோபம் உருவாகியிருக்கக்கூடும். ஆனால் அந்த அன்னை யாரோடும் மோதி தன் இடத்தை நிறுவிக்கொள்ள முயற்சி செய்யவில்லை. யார்மீதும் கசப்பைக் கொட்டவில்லை. மாறாக, தினந்தோறும் அழுக்குத்துணிகளைத் துவைக்க உட்காரும் தருணங்களில் தன் நெஞ்சிலிருக்கும் ஆற்றாமைகளையும் கோபத்தையும் வருத்தத்தையும் சத்தமாகச் சொல்லிக்கொண்டே துணிகளைத் துவைகல் மீது ஓங்கி அடித்து அடித்துத் துவைத்து கரைத்துக்கொள்வதை ஒரு கலையாக கற்றுவைத்திருந்தார். தோட்டத்து பம்ப் செட்டின் தண்ணீரில், மோட்டார் ஓடும் சத்தத்தில் தன் மனக்குமுறல்களைக் கொட்டிக் கழுவிவிட்டு லேசான மனத்துடன் வீடு திரும்பிவிடுவார்.

Sunday 14 July 2024

வாழ்வின் திசைகள் - 4

 நான்கு 

சர்வீஸிங் ஸ்டேஜில் வண்டி ஏற்றப்பட்டிருந்தது. சோப்புத் தண்ணீரை ஊற்றிக் கழுவியதில் வெள்ளித்தகடாய் மின்னியது வண்டி. டயர் இடுக்குகளில் புகுந்த அழுக்கு கூட வெளியேறிப் புதுவண்டியாய்க் காட்சி அளித்தது. வண்டிக்குள் குனிந்து கீரீஸ் தடவிக் கொண்டிருந்தான் குமரேசன்.

அதிகாரத்தின் கதை

 

சர்வதேச பண்பாட்டு மையம் என்றொரு அமைப்பு தொம்லூரில் இயங்கி வருகிறது. ஒவ்வொரு வாரமும் சனி அல்லது ஞாயிறு அன்று நாடகம், திரைப்படம், ஓவியம், நடனம், உலக இலக்கியம் தொடர்பாக ஏதாவது  ஒரு நிகழ்ச்சி நடைபெறும். கலையார்வம் கொண்டவர்களுக்கு அது ஒரு நல்விருந்து. அந்த மையம் நிகழ்த்தும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் செல்லவேண்டும் என எனக்குள் ஆவல் இருந்தாலும், எதிர்பாராமல் நேரும் நெருக்கடிகள் காரணமாக என்னால் ஒருசில நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே செல்ல முடிந்தது.

Sunday 7 July 2024

வாழ்வின் திசைகள் - 3

 

மூன்று

மேகத்தின் மார்பில் குத்தப்போகிற மாதிரி சர்ரென்று புறப்பட்ட சரவாணம் ஒரு புள்ளியில் வெடித்து வண்ணப் பூக்கள் சிதறின. அடர்த்தியான இருளுக்கு நடுவில் வர்ணப் பொறிகளின் அழகு கவர்ச்சியான விஷயம். கவர்ச்சியில் திளைப்பதற்கே அப்பாவோடு கூடக்கூட நடந்தான் குமரேசன். மார்பு கொள்ளாமல் வெடிகளை அணைத்தபடி அப்பாவுக்கு ஒவ்வொன்றாய் எடுத்துத் தரும்போது சந்தோஷமாய் உணர்ந்தான்.

நாட்டார் கலையும் நவீன கலையும் - நாஞ்சில் நாடன் சிறுகதைகள்

  

நாட்டார் பாடல்களின் ஈர்ப்புக்கு மிகமுக்கியமான காரணம்,  அவற்றின் இசைத்தன்மையும் சொற்களை அடுக்கடுக்காக முன்வைத்துச் செல்லும் போக்கும் ஆகும். தாலாட்டு, ஒப்பாரி என எல்லா வகையான பாடல்களுக்கும் இது பொருந்தும். ‘மாமன் அடிச்சானோ மல்லிகைப்பூச் செண்டாலே, அம்மா அடிச்சாளோ அல்லிப்பூச் செண்டாலே, அத்தை அடிச்சாளோ அரளிப்பூச் செண்டாலே, சித்தி அடிச்சாளோ செண்பகப்பூச் செண்டாலே’ என்னும் பாடலை நாம் அனைவருமே கேட்டிருப்போம். அழும் குழந்தையை அமைதிப்படுத்தி உறங்கவைக்க ஒரு கட்டுக்கதை உருவாக்கப்படுகிறது. அதற்காகவே அச்சொற்கள் அடுக்கப்படுகின்றன. பாடும்தோறும் அதன் இனிமை மனத்தை மயக்குகிறது. உரைநடை என ஒன்று உருவானதுமே இந்த இசைத்தன்மை மறைந்துவிட்டது. அடுக்கிச் சொல்லும் முறை கிட்டத்தட்ட வழக்கொழிந்துபோய்விட்டது என்றே சொல்லவேண்டும். மரபான உரைநடைக்காலத்தில் அதன் பயன்பாடு மெல்லமெல்ல குறையத் தொடங்கி, நவீனக் கதையாசிரியர்களின் உரைநடைக்காலத்தில் முற்றிலுமாக மறைந்தே விட்டது.

Sunday 30 June 2024

வாழ்வின் திசைகள் - 2

 

இரண்டு

முப்பத்தாறு நாற்பத்தியேழு சீரான வேகத்தில் திருப்பதிச் சாலையில் போய்க்கொண்டிருந்தது. மடங்கி மடங்கி நிழல்கள் விழுகிற இரவில் முதுகு வளைக்காமல் ஸ்டியரிங் முன்னால் அமர்ந்து வண்டி ஓட்டுகிற தாஸின் தோரணை ஒரு ரிஷிகுமாரனைப் போல இருந்தது குமரேசனுக்கு.