ஐந்து
‘வெடிஞ்சி இன்னுமாய்யா -தூக்கம் ஏந்துரு ஏந்துரு’
எவனோ ஒருவன் அதட்ட அரைகுரையாய் விழிப்பு மூள
அப்புறம் சட்டென்று எழுந்து உட்கார்ந்து கண்களைக் கசக்கிக் கொண்டு நிமிர்ந்து பார்த்தான் குமரேசன்.
‘என்னப்பா பாக்கற? ஏந்துரு’
‘மணி என்ன’
‘வெடிஞ்சி அரமணி நேரம் ஆச்சி, ஏந்து நடயக் கட்டு’
‘ம்’