Home

Monday 27 November 2023

அண்ணல் தங்கோ என்கிற சுவாமிநாதன் : தேசமும் மொழியும்

  

1920ஆம் ஆண்டு தொடக்கத்தில் டில்லியில் ஒத்துழையாமை இயக்கம் தொடர்பான திட்டங்களை காந்தியடிகள் அறிவித்தார். அரசு வழங்கியிருக்கும் பட்டங்களையும் கெளரவப்பதவிகளையும் துறத்தல்,  ஊதியம் பெறும் அரசாங்கப்பதவிகளிலிருந்து விலகுதல், அந்நிய நாட்டுத்துணிகளை விலக்குதல். நீதிமன்றங்களிலிருந்து வழக்கறிஞர்கள் வெளியேறுதல்,  அரசு கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள் வெளியேறுதல் என எல்லா விதங்களிலும் அரசுடன் ஒத்துழைப்பதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்பதுதான் அவருடைய திட்டம்.

Sunday 26 November 2023

வண்ணவண்ண முகங்கள்

 

ஒருவருக்கு ஓர் ஊரின் மீது ஈர்ப்பு ஏற்பட அவர் அந்த ஊரில் பிறந்திருக்க வேண்டுமென்றோ, வாழ்ந்திருக்க வேண்டுமென்றோ எந்த அவசியமும் இல்லை. அந்த ஊரோடு அவரை ஏதோ ஒரு விதத்தில் இணைக்கும் ஒரு மாயம் நிகழ்ந்தால் போதும். அந்த ஊருக்கான ஓர் இடத்தை நெஞ்சம் தானாகவே உருவாக்கிக்கொள்ளும்.

Sunday 19 November 2023

கலைச்சாதனையின் வரலாறு

  

அர்ச்சுனன் தபசு, புலிக்குகையும் கிருஷ்ணமண்டபமும் என்கிற தலைப்பில் மாமல்லபுரம் சார்ந்த கட்டுரைகள் அடங்கிய நூல்களை ஏற்கனவே எழுதி வெளியிட்ட முனைவர் சா.பாலுசாமி பொதுவாசகர்களுக்காக மாமல்லபுரம்  என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரைத்தொகுதியை இந்திய அரசு நிறுவனமான பப்ளிகேஷன் டிவிஷன் தற்போது வெளியிட்டுள்ளது. வரலாறு சார்ந்தும் சிற்பக்கலை சார்ந்தும் ஆர்வம் கொண்ட புதிய தலைமுறையினருக்கு மாமல்லபுரம் பற்றிய குறுக்குவெட்டுத்தோற்றத்தை இந்தப் புத்தகத்தில் தெளிவாகச் சித்தரித்துள்ளார் பாலுசாமி. மாமல்லபுரத்தில் பார்க்கவேண்டிய எல்லா முக்கியச் சிற்பங்களின் படங்களும் எல்லாப் பக்கங்களிலும் கருப்புவெள்ளையில் இடம்பெற்றுள்ளன. ஒரு சிற்பத்தைப்பற்றிய குறிப்பைப் படிக்கும்போதே, அதன் படத்தை அருகிலேயே பார்ப்பது நல்ல அனுபவம். வாசிப்பவர்களின் தெளிவுக்கும் அது துணையாக இருக்கிறது.

இரண்டு ரோஜாக்கள் - கட்டுரை

  

’சர்வோதயம் மலர்கிறது’ இதழுக்காக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு காந்திய ஆளுமையைப்பற்றிய விரிவான தகவல்களுடன் ஒரு கட்டுரையை நான் எழுதி வருகிறேன். அந்த வரிசையில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் நான் லால் பகதூர் சாஸ்திரியைப்பற்றி எழுதிக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் விட்டல்ராவ் கைப்பேசியில் அழைத்தார். வழக்கமான நல விசாரிப்புகளுக்குப் பிறகு ”இப்போ  என்ன எழுதிகிட்டிருக்கீங்க?” என்று கேட்டார். நான் லால் பகதூர் சாஸ்திரியைப்பற்றிய கட்டுரையை எழுதிக்கொண்டிருப்பதாகச் சொன்னேன்.

Sunday 12 November 2023

கபாலி

  

தினமணி கதிர் இதழில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் தான் எழுதி வெளிவந்த சிறுகதைகளையெல்லாம் தனியாகப் பிரித்தெடுத்து இரு பெருந்தொகுதிகளாக பைண்டிங் செய்துவைத்திருந்தார் விட்டல்ராவ்.  ஒருமுறை அவரைச் சந்தித்துவிட்டுத் திரும்பும்போது, படித்துவிட்டுத் தருவதாக ஒரு தொகுதியை வீட்டுக்கு எடுத்துவந்தேன்.

கருணையினால் - கட்டுரை

 

மணிப்பால் மருத்துவமனையில் நண்பரொருவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. மூன்று நாட்கள் ஆழ்கவன சிகிச்சைப் பிரிவு அறையிலேயே வைத்திருந்தார்கள். பிறகுதான் வேறொரு சாதாரண தனி அறைக்கு மாற்றினார்கள். அதற்குப் பிறகுதான் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைத்தது. செய்தி கிடைத்ததும் நானும் இன்னொரு நண்பரும் அவரைச் சென்று பார்க்கத் திட்டமிட்டோம். ஆனால் நாங்கள் வசிப்பதோ வேறுவேறு திசையில் என்பதால் ஒன்றாகச் சேர்ந்து புறப்பட வழியில்லை. அதனால் நண்பர் “நான் முதலில் வந்தால் நீங்கள் வரும்வரை வெளியே விடுதிக்கு அருகில் காத்திருக்கிறேன். ஒருவேளை நீங்கள் முதலில் சேர்ந்துவிட்டால் நான் வரும்வரைக்கும் காத்திருங்கள்” என்று தெரிவித்துவிட்டார்.

Sunday 5 November 2023

வெளியேற்றம் - சிறுகதை

 முதுகில் துணி மூட்டையோடு காலை இழுத்து இழுத்து கழுதை முன்னால் நடக்க பின்னாலேயே நடந்தான் பிச்சையா.

அடுக்கு மாளிகை - சிறுகதை

 

நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ள இது தான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணியபடி திரையை விலக்கிக்கொண்டு வெளியே வந்தான் குப்புசாமி. உண்மையில் பம்பரம் எடுப்பதற்காகத் தான் வெளியேயிருந்து உள்ளே வந்திருந்தான் அவன். அரைக்கணத்துக்குள் மனம் மாறிவிட்டது. பம்பரத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டான். யாருமே இல்லாத சூழல் அவனுக்கு உற்சாகமூட்டிக் கொண்டிருந்தது. வா வா என்று யாரோ மனசுக்குள் கூப்பிடுகிற குரல் கேட்டது. சுற்றுமுற்றும் பார்த்தான். பெரிய கீழ்த்தளத்தில் ஆள் சந்தடியே இல்லை. வெறும் தட்டுகளும் துணித்திரைகளும் இருந்தன. ஒரு மூலையில் செங்கற் குவியல். இன்னொரு மூலையில் மணல். கட்டிடத்திற்கு வெளியே பெண்கள் கல் அடுப்பில் சோறாக்கிக்கொண்டிருந்தார்கள். மெதுவாகத் தளத்தின் உள்பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். பொக்கையும் பொறையுமாக இருந்தது தரை. ஓர் இடத்தில் தண்ணீர் ஓடித் தேங்கியிருந்தது. இறங்கி நடந்ததில் கால்களில் சேறு அப்பியது. உதறிக்கொண்டான். சீ என்று வாய்விட்டுச் சொன்னான். மூலையில் படுத்திருந்த பூனை சட்டென்று இவன் பக்கம் திரும்பி முறைத்து விட்டு மீண்டும் சுருண்டது.