Home

Showing posts with label மாமல்லபுரம். Show all posts
Showing posts with label மாமல்லபுரம். Show all posts

Sunday, 19 November 2023

கலைச்சாதனையின் வரலாறு

  

அர்ச்சுனன் தபசு, புலிக்குகையும் கிருஷ்ணமண்டபமும் என்கிற தலைப்பில் மாமல்லபுரம் சார்ந்த கட்டுரைகள் அடங்கிய நூல்களை ஏற்கனவே எழுதி வெளியிட்ட முனைவர் சா.பாலுசாமி பொதுவாசகர்களுக்காக மாமல்லபுரம்  என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரைத்தொகுதியை இந்திய அரசு நிறுவனமான பப்ளிகேஷன் டிவிஷன் தற்போது வெளியிட்டுள்ளது. வரலாறு சார்ந்தும் சிற்பக்கலை சார்ந்தும் ஆர்வம் கொண்ட புதிய தலைமுறையினருக்கு மாமல்லபுரம் பற்றிய குறுக்குவெட்டுத்தோற்றத்தை இந்தப் புத்தகத்தில் தெளிவாகச் சித்தரித்துள்ளார் பாலுசாமி. மாமல்லபுரத்தில் பார்க்கவேண்டிய எல்லா முக்கியச் சிற்பங்களின் படங்களும் எல்லாப் பக்கங்களிலும் கருப்புவெள்ளையில் இடம்பெற்றுள்ளன. ஒரு சிற்பத்தைப்பற்றிய குறிப்பைப் படிக்கும்போதே, அதன் படத்தை அருகிலேயே பார்ப்பது நல்ல அனுபவம். வாசிப்பவர்களின் தெளிவுக்கும் அது துணையாக இருக்கிறது.

Monday, 13 December 2021

நித்யா - சிறுகதை

 

 கஸ்தூரிபாய் ஆதரவற்றோர் இல்லத்துடன் தொடர்பு

வைத்துக்கொள்ளத் தொடங்கி ஆறு ஆண்டுகள்

கழிந்துவிட்டன. எங்கள் ஐந்து திருமண நாள்களையும் ஐந்து

பிறந்த நாள்களையும் குழந்தை அபியின் மூன்று பிறந்த

நாள்களையும் இதே இல்லத்தில் தான் கழித்திருக்கிறோம். என்

மனத்தில் புதைந்து கிடக்கும் எண்ணற்ற சித்திரங்களுள் இந்த

இல்லத்தின் சித்திரம் மறக்கமுடியாத அனுபவம். சிறுவர்களும்

சிறுமிகளுமாக இருநூற்றுசொச்சம் பிள்ளைகள் தங்கியிருக்கும்

இல்லத்தில் சில பெயர்களை அடையாளங்களுடன்

சொல்லக்கூடிய அளவுக்குக்கூட எனக்கு இன்னும் ஞாபகம்

உள்ளது. பெயர் மறந்திருந்தாலும் சில முகங்கள் மட்டும்

நினைத்த கணத்தில் ஆழ்மனத்திலிருந்து மிதந்து தெரிகிற

அளவுக்குப் பதிந்திருக்கின்றன. என்றாலும் நித்யாவைப்பற்றி

நேரிடையாகத் தெரிந்து கொள்ளும் வரை அவள் பெயர்மட்டும்

எப்படியோ எங்கள் மனங்களில் பதியாமல் நழுவிப்போய்

விட்டது. அதை நினைக்கும்போது சற்றே கூச்சம் படர்வதைத்

தவிர்க்க முடியவில்லை.